India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழகத்தில் திருவள்ளூர், செங்கல்பட்டு, சென்னை, புதுக்கோட்டை, திருச்சி உள்ளிட்ட 32 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதன்படி, திருவாரூர், நன்னிலம், கூத்தாநல்லூர், மன்னார்குடி உள்ளிட்ட சில பகுதிகளில் இன்று மாலை இடியுடன் கூடிய மிதமானது முதல் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவாரூர் மாவட்டத்தில் ஆக.,15ம் தேதி சுதந்திர தினம் அன்று அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடைபெறும். அதில் சுய சான்றிதழ் மூலம் உடனடி கட்டட அனுமதி வழங்குதல் மற்றும் இணையத்தளம் மூலம் வரி செலுத்துதல் குறித்தும் ஊராட்சி கணக்கு, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டம் உள்ளிட்டவை குறித்து விவாதம் செய்து பொதுமக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என ஆட்சியர் சாருஸ்ரீ கேட்டுக்கொண்டுள்ளார்.
பண்டைய காலங்களில் பயன்படுத்திய இசைக் கருவிகள் அழிந்து வரும் நிலையில் பஞ்சமுக வாத்தியம் எனும் கருவி தற்போது தமிழ்நாட்டில் மிகச் சொற்பமாகவே இசைக்கப்பட்டு வருகிறது. இதை நாம் கோயில் சிற்பங்களில் அதிகம் பார்த்திருப்போம். குடமுழா, குடபஞ்சமுகி என்றும் அழைக்கப்படும் இந்த இசைக்கருவி இன்றும் திருவாரூரில் உள்ள தியாகராஜர் கோயிலில் இசைக்கப்படுகிறது. இந்த அரிய இசைக் கருவியை நீங்க பார்த்திருக்கீங்களா?
திருவாரூர் ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மாணவர்களின் உயர் கல்விக்கான கடன் பெறுவது தொடர்பான முகாம் நடைபெறவுள்ளது. வரும் 13ஆம் தேதி மன்னார்குடி தாலுகா அலுவலகத்திலும், 16ஆம் தேதி திருவாரூர் தாலுகா அலுவலகத்திலும் கல்வி விழிப்புணர்வு முகாம் நடைபெற உள்ளது. முகாமில் அனைத்து வங்கியாளர்களும் கலந்து கொள்வர். மாணவர்கள், பெற்றோர் கலந்து கொண்டு பயன் பெறலாம் என தெரிவித்துள்ளார்.
திருவாரூர் கலெக்டர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மாவட்டத்தில் பொது விநியோக திட்ட சிறப்பு குறைதீர் நாள் கூட்டம் இன்று(ஆக.,10) காலை 10 மணி முதல் 1 மணி வரை தாலுகா வாரியாக 10 இடங்களில் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் நடைபெறுகிறது. அந்தந்த பகுதி பொதுமக்கள் ரேஷன் அட்டை மற்றும் உணவு பொருட்கள் தரம் குறித்த புகார்களை கோரிக்கை மனுக்களாக கொடுத்து பயன் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி வட்டம் ராஜமன்னார்குடி ஸ்ரீ வித்யா ராஜகோபால் சுவாமி திருக்கோயிலில் ஆடி வெள்ளியை முன்னிட்டு ஸ்ரீ தாயார் சக்கரை பொங்கல் திருப்பாவாடை நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது. நிகழ்ச்சியில் சுவாமிக்கு சர்க்கரைப் பொங்கல், நெய் வேத்தியம் படையலிட்டு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் அம்பலை சுவாமி தரிசனம் செய்தனர்.
திருவாரூர் ஆட்சியர் இன்று (ஆக.09) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், திருவாரூர் மாவட்டத்தில் தமிழ்நாடு சிறுபான்மையினர் மேம்பாட்டு கழகம் மூலம் சிறுபான்மையினருக்கு பொருளாதார மேம்பாட்டு கடன் வழங்க கடன்மேளா வரும் 14ஆம் தேதி குடவாசல்,21ஆம் தேதி வலங்கைமான்,28ஆம் தேதி நீடாமங்கலம் ஆகிய இடங்களில் உள்ள மத்திய கூட்டுறவு வங்கி கிளைகளில் நடைபெற உள்ளது.கடன் மேளாவில் பங்கேற்று பயன்பெறுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவாரூர் ஆட்சியர் சாரு ஸ்ரீ இன்று (ஆக.09) வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், திருவாரூர் மாவட்டத்தில் தாட்கோ மூலம் ஹோட்டல் மேனேஜ்மென்ட் பட்டப்படிப்பு மற்றும் பட்டயப்படிப்பு பயில ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் விண்ணப்பிக்கலாம் விருப்பம் உள்ளவர்கள் https://www.tahdco.com/ என்ற இணையத்தளத்தில் பதிவு செய்து பயன் பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மன்னார்குடி அருகே நடுவக்களப்பால் பகுதியைச் சேர்ந்தவர் மாரிமுத்து. இவரது மகளது வளைகாப்பு நிகழ்ச்சியை முன்னிட்டு இன்று பொருட்கள் வாங்க கடை வீதிக்கு வந்த மாரிமுத்துவை இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பேர் அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பிச் சென்றனர். சம்பவ இடத்திற்கு வந்த கலப்பால் போலீசார் மாரிமுத்துவின் உடலை கைப்பற்றி கொலை சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருவாரூர் மாவட்டத்தில், பொது விநியோகத் திட்டத்தினை மேம்படுத்திடும் வகையில் பொது விநியோகத் திட்ட சிறப்பு பொது மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் வரும் 10.08.2024 (சனிக்கிழமை) காலை 10.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை அந்தந்த தாலுக்கா பகுதியில் நடைபெறுகிறது. இதில் மனு அளித்து பயன் பெறுமாறு திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.