Thiruvarur

News August 29, 2024

உடலை தோண்டி எடுக்க உத்தரவு

image

திருவாரூரை சேர்ந்த இறந்த கூலி தொழிலாளி ராஜேந்திரன் என்பவரின் உடலுக்கு பதிலாக வேறொருவரின் உடலை காட்டியதால், தவறுதலாக ஒரு மாதத்திற்கு முன்பு சேலத்தை சேர்ந்த குடும்பத்திடம் ஒப்படைக்கப்பட்டது. காவல்துறை. ராஜேந்திரன் உடல் அடக்கம் செயப்பட்டு ஒரு மாதம் ஆகிவிட்டதாகவும், அவரது உடலை தோண்டி எடுத்து மீண்டும் அவரது குடும்பத்திடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

News August 29, 2024

நாகை எம்பி நன்றி அறிவிப்பு சுற்றுப்பயணம்

image

நாகை நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜ் கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் திருவாரூர் மாவட்டத்தில் 31.8.2024 அன்று நன்றி அறிவிப்பு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதில் திருநெல்லிக்காவல், செருவாமணி, சேந்தங்குடி, மாவட்ட குடி, ஆலத்தூர், விக்கிரபாண்டியம், 57 குலமாணிக்கம் பள்ளி, வர்த்தி, சேந்த மங்கலம் ஆகிய பகுதிகளுக்கு செல்கிறார்.

News August 29, 2024

விநாயகர் சதுர்த்தி: ஆட்சியர் அறிவுறுத்தல்

image

சுற்றுச்சூழலை பாதுகாக்கும் மாநிலமான தமிழகத்தில் நீர் நிலைகளை பாதுகாக்கும் வகையில் விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடும் போது, சிலைகளை கரைப்பதற்கான மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரிய வழிகாட்டுதலின் படி மாவட்ட நிர்வாகத்தினரால் குறிப்பிட்டுள்ள இடங்களில் மட்டும் சிலைகளை கரைத்து சுற்றுச்சூழலை பாதுகாக்க ஒத்துழைப்பு வழங்குமாறு திருவாரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் சாருஸ்ரீ கேட்டுக் கொண்டுள்ளார்.

News August 29, 2024

திருவாரூர் மாவட்ட விவசாயிகளுக்கு அழைப்பு

image

திருவாரூர் மாவட்டத்தில் 50 சதவீத மானியத்தில் மண்புழு உரம் தயாரிக்கும் மையம், இயற்கை இடுபொருட்கள் தயாரிக்கும் மையம், உயிரி பூச்சிக்கொல்லி பண்புடைய தாவரங்களை வளர்த்தெடுப்பதற்கான ஆடாதொடை, நொச்சி நடவு பொருட்கள் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு விவசாய திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளதால் இதில் பயன் அடைய விரும்புவர்கள் வேளாண் உதவி இயக்குனரை தொடர்பு கொள்ள மாவட்ட ஆட்சித் தலைவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

News August 29, 2024

விவசாயிகளுக்கு விழிப்புணர்வு முகாம்

image

திருவாரூர் ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், விவசாயிகள் உழவு முதல் அறுவடை வரை தேவைப்படும் அனைத்து வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் முறையான பயன்பாடு மற்றும் பராமரிப்பு முறைகள் குறித்த விழிப்புணர்வு முகாம் நாளை (30/8/24) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை கலெக்டர் அலுவலகத்தின் பெருந்திட்ட வளாகத்தில் நடைபெறுகிறது. இதில் விவசாயிகள் பயன்பெறுமாறு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

News August 29, 2024

திருவாரூர் மாவட்ட மழை அளவு

image

திருவாரூர் மாவட்டத்தில் ஆகஸ்ட் மாத இயல்பான மழை அளவு 9.3 செ.மீ. ஆக உள்ளது. மாவட்டத்தில் விவசாயிகள் குருவை சாகுபடி துவங்கி உள்ள நிலையில் நேற்று முதல் அதிக வெயில் இல்லாத வானிலை காணப்படுவதால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இன்றைய நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 117 அடியாக உள்ளது. அனைக்கு வினாடிக்கு 4550 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கும் நிலையில், 12850 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.

News August 29, 2024

திருவாரூர் மாவட்டத்தில் 13,000 விவசாயிகள் பயிருக்கு காப்பீடு

image

திருவாரூர் மாவட்டத்தில் குறுவை பயிருக்கு பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டம் அரசால் அறிவிக்கப்பட்டு இம்மாவட்டத்தில் 13,107 விவசாயிகள் 20,211 ஹெக்டேர் பரப்பிற்கு பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தில் பதிவு செய்துள்ளதாக மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்தார். இன்று காலை நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் சாருஸ்ரீ இத்தகவலை தெரிவித்தார்.

News August 29, 2024

திருவாரூர் ஆட்சியர் தலைமையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

image

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் சாரு ஸ்ரீ தலைமையில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் வேளாண்மை துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண் விற்பனை துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். மேலும் கூட்டத்தில் விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்தனர்.

News August 29, 2024

திருவாரூரில் தொழில் தொடங்க கடன் உதவி

image

விஜயபுரம் வர்த்தக சங்கம் மற்றும் திருவாரூர் மாவட்ட தொழில் மையம் இணைந்து நடத்தும் தொழில்முனைவோருக்கான தொழில் கடன் வழங்கும் சிறப்பு முகாம் நாளை வெள்ளிக்கிழமை 30/8/2024 காலை 11.30 மணிக்கு பைபாஸ் ரோடு மினி ஹாலில் நடைபெற உள்ளது. பல்வேறு முக்கிய வங்கிகள் இந்த முகாமில் பங்கேற்க உள்ளன. மேலும் தொழில் விரிவாக்கத்திற்கும் இம்முகாமில் கடன் பெறலாம் எனத் தெரிவிக்கப்ட்டுள்ளது.

News August 29, 2024

குடியரசு தலைவரை சந்தித்த திருவாரூர் பல்கலைக்கழக துணைவேந்தர்

image

திருவாரூர் அருகே நீலக்குடி பகுதியில் அமைந்துள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் எம்.கிருஷ்ணன், இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை நேற்று (ஆகஸ்ட்.28) டெல்லியில் உள்ள குடியரசு தலைவர் மாளிகையில் (ராஷ்டிரபதி பவனில்) சந்தித்தார்.

error: Content is protected !!