India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழக அரசு தஞ்சாவூர் திருவாரூர் நாகை மற்றும் டெல்டா மாவட்டங்கள் மற்றும் பிற மாவட்டங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறந்து சணல் தார் பாய் உள்ளிட்ட தேவையான தளவாட சாமான்கள் உறுதி செய்ய வேண்டும் தமிழக அரசு நடப்பாண்டில் விவசாயிகள் கொண்டு வரும் நெல்லை கொள்முதல் செய்ய முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமாகா தலைவர் ஜி கே வாசன் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்
திருவாரூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் முதன்மை வங்கி இணைந்து எதிர்வரும் 06.09.2024 அன்று காலை 10.00 மணி முதல் அம்மையப்பன் குளோபல் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கல்வி கடனுக்கான விழிப்புணர்வு முகாம் நடைபெறவுள்ளது. கல்வி கடன் முகாமில் அனைத்து வங்கி அதிகாரிகள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு ஆட்சியர் சாருஸ்ரீ தெரிவித்துள்ளார்.
திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை ஆகிய டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த மாவட்ட சுகாதார அலுவலர்கள் மற்றும் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர்களுடனான ஆய்வுக்கூட்டம் அமைச்சர் மா. சுப்பிரமணியன் தலைமையில் கும்பகோணத்தில் நேற்று நடைபெற்றது. இதில் திருவாரூர் எம்எல்ஏ பூண்டி கே. கலைவாணன் உட்பட சட்டமன்ற உறுப்பினர்கள் பலர் பங்கேற்றனர்.
திருவாரூர் மாவட்டத்தில் 8 ஆசிரியர்கள் மாநில அரசின் டாக்டர் இராதாகிருஷ்ணன் விருதுக்கு தேர்வாகி உள்ளனர் தேவி (மன்னார்குடி), கோமதி(ஆலங்கோட்டை), தங்கபாபு(கோட்டூர்), சிவகுமார் (நன்னிலம்), வேணுகோபால் (சேரன்குளம்), ராஜலட்சுமி (திருவாரூர்), மணிகண்டன் (செல்லூர்), முருகையன் (புத்தகரம்) ஆகியோர் நாளை சென்னையில் விருதினை பெற உள்ளனர்.
தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழல் துறை சார்பில் மாநிலம் முழுவதும் சுற்றுச்சூழல் செயல்பாடுகளில் சிறந்த பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டு பசுமை பள்ளி என்கிற பெயரில் 20 லட்சம் ரூபாய் வழங்கப்பட உள்ளது. இதில் திருவாரூர் மாவட்டத்தில் இரண்டு பள்ளிகள் தேர்வாகி உள்ளன. புள்ளமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் சூரனூர் அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய இரண்டு பள்ளிகள் பசுமை பள்ளி திட்டத்தின் கீழ் ரூ 20 லட்சம் பெறுகின்றன.
திருவாரூரில் கடந்த ஆண்டு போலவே இந்த ஆண்டும் விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு மாவட்டம் முழுவதும் 418 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யவும் பின்னர் ஊர்வலமாக எடுத்து சென்று நீர் நிலைகளில் கரைக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஊர்வலம் அமைதியான முறையில் நடக்கவும் குறிப்பிட்ட நேரத்தில் ஊர்வலத்தை முடிக்குமாறும் அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் கேட்டு கொள்கிறேன் என்று எஸ்பி தெரிவித்தார்.
திருவாரூர் மாவட்டம் திருவாரூர் வட்டாரத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை செப்டம்பர் 3 இன்று திருவாரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி தி. சாருஸ்ரீ அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். திருவாரூர் நகராட்சி பொறியாளர் மற்றும் ஆட்சியர் அலுவலக அதிகாரிகள் உடன் இருந்தனர்.
திருவாரூர் மாவட்டம், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள், கலைஞர்கள் சங்கம் நடத்தும் 8-ஆவது சர்வதேச திரைப்பட விழா செப்டம்பர் 18-ஆம் தேதி முதல் 22-ஆம் தேதி வரை திருவாரூர் தைலம்மை திரையரங்கில் நடைபெற உள்ளது. இதில் 11 நாடுகளை சேர்ந்த 22 திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளன. 5 நாட்கள் நடைபெறும் இத்திரைப்பட விழாவின் டிக்கெட் ஒன்றின் விலை ரூ.1000 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
திருவாரூர் வேலுடையார் கல்வி நிறுவனத்தின் நிறுவனர் கே.எஸ்.சிவவடிவேல் 46-வது நினைவு தினத்தை முன்னிட்டு திருவாரூர் வேலுடையார் கல்வி நிறுவனம் மற்றும் ரோட்டரி கிளப் ஆப் திருவாரூர், தஞ்சாவூர் ஸ்ரீ காமாட்சி மெடிக்கல் சென்டர் இணைந்து நடத்தும் இலவச இருதய நோய் மற்றும் சர்க்கரை நோய் சிகிச்சை முகாம் நாளை (செப்.4) காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை திருவாரூர் வேலுடையார் பள்ளி வளாகத்தில் நடைபெறவுள்ளது.
திருவாரூர், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி நகர் பகுதியில் இன்று (செப்.3) நிலவரப்படி: மட்டன் கிலோ ரூ.750 முதல் ரூ.900 வரையிலும், எழும்பு கறி ரூ.500 முதல் 700 வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது. குறிப்பாக முத்துப்பேட்டையில் மட்டன் கறி ரூ.800 முதல் 1000 வரை விற்கப்படுகிறது. எறும்பு கறி ரூ.500 முதல் 700 வரை விற்பனை செய்யப்படுகிறது.
Sorry, no posts matched your criteria.