India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருவாரூர் மாவட்டத்துக்கான ‘முதலமைச்சர் கோப்பை’ விளையாட்டு போட்டிகள் நாளை (செப்.10) திருவாரூரில் நடைபெற உள்ளது. பள்ளி கல்லூரி மாணவர்கள், அரசு ஊழியர்கள், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள் என பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடைபெற உள்ளன. இதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மேலும் கூடுதல் தகவல்களுக்கு மாவட்ட விளையாட்டு அலுவலக தொலைபேசி எண் 04366-290620-ஐ தொடா்புகொள்ளலாம்.
திருவாரூர், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி நகர் பகுதியில் இன்று (செப்.9) நிலவரப்படி: மட்டன் தனிக்கறி ஒரு கிலோ ரூ.750 முதல் ரூ.900 வரையும், எழும்பு கறி ரூ.500 முதல் 700 வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது. குறிப்பாக முத்துப்பேட்டையில் மட்டன் தனி கறி ரூ.800 முதல் ரூ.1000 வரை விற்கப்படுகிறது. எறும்பு கறி ரூ.500 முதல் 700 வரை விற்பனை செய்யப்படுகிறது.
பவித்திரமாணிக்கம், காமராஜ் நகர் பகுதியை சேர்ந்த பாலசுந்தரம் எனும் 14 வயது சிறுவன் தனது நண்பர்களுடன் திருவாரூர் ஓடம் போக்கி ஆற்றில் நேற்று ( செப்.8) குளித்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக ஆற்றின் நீர் சுழற்சியில் சிக்கய சிறுவன் பரிதாபமாக நீரில் மூழ்கி உயிரிழந்தார். அங்கிருந்த பொதுமக்கள் உதவியுடன் சிறுவனை தீயணைப்பு துறையினர் மீட்டு உடற்கூறாய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
திருவாரூர் மாவட்டத்தில் 1,08,000 ஆயிரம் எக்டேரில் சம்பா சாகுபடி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில், சம்பா பருவத்திற்கு போதுமான 9,184 டன் யூரியா, 2,067 டன் டி.ஏ.பி., 1,024 டன் பொட்டாஷ், 1,758 டன் காம்ப்ளக்ஸ், 354 டன் சிங்கிள் சூப்பர் பாஸ்பேட் ஆகிய உரங்கள் அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் தனியார் உரக்கடைகளில் இருப்பு வைக்கப்பட்ட்டுள்ளதாக திருவாரூர் கலெக்டர் அறிவிப்பு.
காவிரி டெல்டா பகுதிகளில் ஒரு போக சம்பா சாகுபடி நேரடி விதைப்பு மற்றும் நடவு பணிகள் மூலம் தொடங்கியுள்ளது. குருவையை இழந்ததால் விவசாயிகள் ஒரு போக சம்பா சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர். தனியார் உர விற்பனை கடைகளில் இணை இடுபொருள் வாங்கினால் தான் யூரியா டிஏபி வழங்க இயலும் என்று மறுப்பு தெரிவிக்கின்றனர். அரசு தங்கள் கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மன்னார்குடியில் பி.ஆர்.பாண்டியன் கூறியுள்ளார்.
முன்னாள் உள்துறை செயலாளரும், முன்னாள் தலைமை தேர்தல் ஆணையரும் ஆன கோபால் சாமி நீடாமங்கலம் திருமண வரம் அருளும் லெட்சுமி நாராயண பெருமாள் திருக்கோயிலில் இன்று 08.09.2024 மாலை 5 மணியளவில் சுவாமி தரிசனம் செய்தார். பரம்பரை அறங்காவலர் சுரேஷ் சந்தன ராமர் சேவா ட்ரஸ்ட் நிர்வாகி சந்தானம் ஸ்வாமிகள் மற்றும் சந்தான ராமர் சேவா ட்ரஸ்ட் நிர்வாகிகள் உடனிருந்தனர்.
கோட்டூர் ஊராட்சி உட்பட்ட பகுதிகளில் இருந்து 30 குடும்பங்கள் திருத்துறைப்பூண்டி சட்டப்பேரவை உறுப்பினர் மாரிமுத்து முன்னிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இன்று இணைந்தனர். இந்நிகழ்ச்சியில் சிபிஐ ஒன்றிய செயலாளர் எம்.செந்தில்நாதன், ஒன்றிய பெருந்தலைவர் என்.மணிமேகலை முருகேசன், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் இ.மஞ்சுளா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
நன்னிலம் தாலுகா குடவாசல் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் இன்று நடைபெறும் விநாயகர் சிலை ஊர்வல பாதுகாப்பு பணியை திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ் ஜெயக்குமார் நேரில் சென்று பார்வையிட்டார். அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு தக்க அறிவுரை வழங்கினார்.
திருவாரூர் மன்னார்குடி திருத்துறைப்பூண்டி முத்துப்பேட்டை உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இந்து அமைப்புகள் சார்பில் 431 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. இவற்றை நீர்நிலைகளில் கரைப்பதற்கு வெவ்வேறு தேதிகள் முடிவு செய்யப்பட்டுள்ளன. வருகின்ற 15ஆம் தேதி மன்னார்குடியில் நடைபெறும் ஊர்வலத்துடன் விநாயகர் ஊர்வலம் நிறைவடைய உள்ளது.
திருவாரூர் மாவட்டத்தில் வருகின்ற செப்.10-ஆம் தேதி முதல் 24-ஆம் தேதி வரை ‘முதலமைச்சர் கோப்பை’ விளையாட்டு போட்டிகள் நடைபெற உள்ளன. இது குறித்த ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் சாருஸ்ரீ தலைமையில் நடைபெற்றது. பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள். அரசு ஊழியர்கள், மாற்றுத்திறனாளிகள் என பல்வேறு பிரிவுகளின் கீழ் இந்த விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட உள்ளது.
Sorry, no posts matched your criteria.