Thiruvarur

News September 25, 2025

திருவாரூர்: மாவட்ட அளவிலான என்எஸ்எஸ் சிறப்பு முகாம்

image

திருவாரூர் மாவட்ட அளவிலான என்எஸ்எஸ் திட்ட அலுவலர்கள் கூட்டம் தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நேற்று மாலை (செப்.24) நடைபெற்றது. இதில் மாவட்ட தொடர்பு அலுவலர் சக்கரபாணி தலைமை வகித்தார். திட்ட அலுவலர் புலிவலம் உலகநாதன் வரவேற்றார். மாவட்ட கல்வி அலுவலர் ராஜேஸ்வரி சிறப்பு முகாம் முழுப் பாதுகாப்புடனும் பள்ளி கல்வி இயக்ககம் தந்துள்ள விதிமுறைகள் படியும் சிறப்பாக நடத்தவேண்டும் என்று தெரிவித்தார்.

News September 25, 2025

திருவாரூர்: குரூப் 2 தேர்வு எழுதவுள்ள 8327 பேர்

image

வருகின்ற 28-ம் தேதி, திருவாரூர் மாவட்டத்தில் 27 மையங்களில் குரூப் 2 தேர்வு நடைபெற உள்ளது. இத்தேர்வினை 8,327 பேர் எழுதுகின்றனர். தேர்வு நடைபெறும் பகுதிகளுக்கு அன்றைய தினம் கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாகவும், காலை 9 மணிக்குள் தேர்வு மையத்திற்கு தேர்வர்கள் வந்து விட வேண்டுமென்றும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News September 25, 2025

திருவாரூர்: B.E படித்தவர்களுக்கு அற்புத வாய்ப்பு

image

மத்திய அரசு நிறுவனமான BEL நிறுவனத்தில் உள்ள 610 Trainee Engineer காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு B.E/ B.Tech முடித்த 21-28 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.30,000 முதல் ரூ.40,000 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் இந்த <>LINK<<>>-ஐ கிளிக் செய்து, வரும் அக்.07-க்குள் விண்ணப்பிக்க வேண்டும். B.E முடித்துவிட்டு வேலை தேடும் FRESHER-களுக்கு இதை ஷேர் பண்ணுங்க!

News September 25, 2025

திருவாரூர் இளைஞர்களே Bank வேலை வேண்டுமா?

image

திருவாரூர் மக்களே தொடர்ந்து வேலை தேடுபவரா நீங்கள்? உங்களை தேடி வரும் Bank வேலையை மிஸ் பண்ணாதீங்க! பேங் ஆஃப் பரோடா வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி படித்திருந்தால் போதுமானது. மாதம் ரூ.64,820 முதல் சம்பளம் வழங்கப்படும். இதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க <>இங்கே கிளிக் பண்ணுங்க<<>>. வேலை தேடும் உங்கள் உறவினருக்கும் SHARE பண்ணுங்க!

News September 25, 2025

திருவாரூர்: 70 வயது முதியவரின் விபரீத முடிவு!

image

கொரடாச்சேரி அருகே பூங்காவூரைச் சேர்ந்தவர் அய்யாதுரை (70). இவர் தன்னை யாரும் கவனித்துக்கொள்ளவில்லை என்று மனவேதனையில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத போது தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதை அறிந்த அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அய்யாதுரை உயிரிழந்துள்ளார்.

News September 25, 2025

திருவாரூர்: ரயில்வே துறை முக்கிய அறிவிப்பு

image

ரயில்வே சந்திப்பில் பொது மேலாளர் உத்தரவின் பேரில், 588 மீட்டர் தூரத்திற்கு சிவப்பு வண்ண கற்கள் பதிக்கும் பணி நடைபெற்று வருவதால் செப்டம்பர் 24ம் தேதி முதல் அக்டோபர் 13ம் தேதி வரை நடைமேடை ஒன்று, இரண்டில் ஆகிய ஓடும் தலத்தில் ரயில் போக்குவரத்து இருக்காது. மேலும் அதற்குப் பதிலாக, மூன்று, நான்கு, ஐந்து ஆகிய நடைமேடையைப் பயணிகள் பயன்படுத்தலாம் என்று ரயில்வே துறையின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

News September 25, 2025

திருவாரூர் இரவு ரோந்து பணி போலீசார் விவரம்

image

திருவாரூர் மாவட்டத்தில் (24.09.2025) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகளின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. இரவு நேர குற்றங்களை தடுக்க காவல் துறையின் உடனடி உதவிக்கு, இரவு ரோந்து காவல் அதிகாரிகளை அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யவும். இத்தகவலை மற்றவர்களுக்கும் சேர் செய்யுங்கள்!

News September 24, 2025

திருவாரூர் மக்களே உஷார்.. மழைக்கு வாய்ப்பு!

image

திருவாரூர் மக்களே இன்று (செப்.24) இரவு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாகவே மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. மேலும், இன்று இரவு திருவாரூர், தஞ்சாவூர் உள்ளிட்ட 14 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பொதுமக்கள் சற்று எச்சரிக்கையோடு இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. குடை முக்கியம் மக்களே.!

News September 24, 2025

மன்னார்குடி அரசு மருத்துவமனையில் கைவரிசை

image

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி இயங்கி வரும் அரசு மருத்துவமனையில் (செப்-24) பல லட்ச ரூபாய் மதிப்பிலான பொருள்களை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். ஏசி, கண்காணிப்பு கேமராக்கள், மின்னணு சாதனங்கள் உள்ளிட்ட பொருட்களை திருடி சென்றதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News September 24, 2025

திருவாரூர் மக்களே…வங்கியில் வேலை! APPLY NOW

image

திருவாரூர் மக்களே! கனரா வங்கியில் இந்தியா முழுவதும் காலியாக உள்ள 3500 Graduate Apprentices பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில், தமிழகத்தில் 394 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு மாதம் ரூ.15,000 வரை சம்பளம் வழங்கப்படும். இதற்கு ஏதேனும் டிகிரி முடித்தவர்கள்<> இங்கே கிளிக் <<>>செய்து 12.10.2025-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இதனை LIKE செய்து அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!