Thiruvallur

News January 3, 2025

திருவள்ளூர் மக்களே இந்த அறிகுறிகள் இருந்தால் மருத்துவரை அணுகவும்

image

‘ஸ்கரப் டைபஸ்’ என்ற நோயால் பாதிக்கப்படுபவர்களுக்கு காய்ச்சல், தலைவலி, உடல் சோர்வு, தடிப்புகள், உடல் அரிப்பு ஆகியவை முக்கிய அறிகுறிகளாக உள்ளது. திருவள்ளூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் ‘ஸ்கரப் டைபஸ்’ நோய் பரவல் அதிரித்துள்ளது. விவசாயிகள், புதர்மண்டிய வனப்பகுதிகளுக்கு அருகில் வசிப்பவர்கள், மலையேற்றத்தில் ஈடுபடுபவர்கள், கர்ப்பிணிகள் ஆகியோருக்கு இந்த பாதிப்புகள் ஏற்படுபட வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.

News January 2, 2025

திருவள்ளூர் இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

News January 2, 2025

வரதராஜ பெருமாள் கோவிலில் பகல் பத்து உற்சவம்

image

திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி நகராட்சியில் பழமை வாய்ந்த திருக்கச்சி நம்பிகள் மற்றும் வரதராஜ பெருமாள்கோவில் அமைந்துள்ளது. இங்கு பகல் பத்து உற்சவம் கடந்த 31ம் துவங்கி ஜனவரி 9ம் தேதி நிறைவு பெற உள்ளது. பகல் பத்து உற்சவத்தை முன்னிட்டு தினமும் சேவை, தீபாராதனை, சாற்றுமுறை எனும் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெறுகின்றன. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிப்பட்டு சென்றனர்.

News January 2, 2025

திருவள்ளூரில் நாளை எங்கெல்லாம் மின்தடை?

image

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அத்தி மாஞ்சி சேரிபேட்டை துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் மின் பராமரிப்பு பணி நடைபெறுவதால் கே வி நொச்சிலி, கோரகுப்பம், காபூர் கண்டிகை, போன சமுத்திரம், கர்ப்பகாலம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும். ஷேர் செய்யுங்க

News January 2, 2025

திருத்தணி அருகே 6 கிலோ கஞ்சா பறிமுதல்

image

திருத்தணி பொன்பாடி சோதனைச்சாவடி வழியாக திருப்பதியில் இருந்து சென்னை நோக்கி வந்த அரசு பேருந்தில் நேற்று போலீசார் சோதனை நடத்தினர். அப்போது கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த னேஸ்வரன் என்ற இளைஞரிடம் சோதனை செய்த போது 6 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது.  இதனையடுத்து விக் னேஸ்வரனை கைது செய்த திருத்தணி போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

News January 1, 2025

இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

News January 1, 2025

திருவள்ளூர் ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

திருவள்ளூர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சார்ந்தவர்களுக்கு TNPSC Group-II & IIA முதல் நிலை தேர்வில் (Preliminary exam) தேர்ச்சி பெற்று முதன்மைத் தேர்விற்கு (Main) தேர்ச்சி பெற விரும்பும் மாணாக்கர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
இத்திட்டத்தில் பதிவு செய்வதற்கு www.tahdco.com என்ற தாட்கோ இணையதளத்தில் பதிவு செய்யலாம் என டாக்டர்.த.பிரபுசங்கர்.இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

News January 1, 2025

மின்சார ரயில்களின் நேரம் நாளை முதல் மாற்றம்

image

திருவள்ளூர் மாவட்டம் சென்னை சென்ட்ரல் -கும்மிடிப்பூண்டி மற்றும் சூலூர்பேட்டை வரை செல்லும் மின்சார ரயில்களின் சேவைகள் புத்தாண்டை முன்னிட்டு நாளை 02.01.25 முதல் புதிய நேர அட்டவணை இன்று முதல்அமலுக்கு வருகிறது தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி நாளை முதல் புதிய நேரப்படி மின்சார ரயில்கள் இயங்கும். இதேபோல் கடற்கரை செங்கல்பட்டு மின்சார ரயில்களின் நேரஅட்டவணையும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

News January 1, 2025

குரூப் 4 போட்டித் தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள்

image

திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் செயல்பட்டு வரும், தன்னார்வ பயிலும் வட்டம் வாயிலாக, குரூப் 4 போட்டித் தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் துவக்கப்பட உள்ளன. விருப்பமும், தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள், மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு நேரில் சென்று பதிவு செய்யலாம். மேலும் அறிய 9789714244 ஆகிய எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் பிரபுசங்கர் தெரிவித்துள்ளார்.

News December 31, 2024

இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

error: Content is protected !!