Thiruvallur

News April 23, 2025

திருவள்ளூர் விவசாயிகள் குறைத்தீர் கூட்டம் அறிவிப்பு

image

திருவள்ளூர் மாவட்டத்தில் மாதாந்திர விவசாயிகள் நலம் காக்கும் கூட்டம் மாவட்ட ஆட்சியர் கூட்ட அரங்கில் 25.4.2025 அன்று காலை 10 மணி அளவில் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் மு பிரதாப் தெரிவித்தார். இதில் விவசாயம், மின்சாரம் கூட்டுறவு, மீன்வளம், வணிகத்துறை ஆகியவற்றின் மீது மற்றும் பொதுமக்கள் பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்படும் என்று ஆட்சியர் அறிவித்தார். *தெரிந்த விவசாயிகளுக்கு பகிரவும்*

News April 23, 2025

திருவள்ளூர்: கணவன்/மனைவி சண்டை தீரணுமா?

image

திருவள்ளூர் மாவட்டம் ஞாயிறு பகுதியில் கோவில் கொண்டிருக்கிறார் அருள்மிகு புஷ்பரதேஸ்வரர். சித்திரை மாதப்பிறப்பின்போன், முதல் 7 நாட்கள் சாமி மீது சூரிய ஒளி விழுகிறது. சிவனுக்கான பூஜையை சூரியனே செய்வதாக ஐதீகம். இக்கோவிலில் சூரியனுக்கு கோதுமைப் பொங்கல்/பாயாசம் படைத்தால் மட்டும் போதும் எப்பேர்பட்ட கணவன்/மனைவி சண்டையானாலும் தீர்ந்து போகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. *திருமணமான நண்பர்களுக்கு பகிரவும்*

News April 23, 2025

காங்கிரஸ் செயற்குழு கூட்டம்: எம்.பி. பங்கேற்பு

image

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில், சென்னை சத்தியமூர்த்தி பவனில் இன்று (ஏப்ரல் 23) செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், திருவள்ளூர் எம்.பி. சசிகாந்த் செந்தில் பங்கேற்றார். மேலும், அகில இந்திய காங்கிரஸ் தமிழக பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் சூரஜ் எம்.என். ஹெக்டே ஆகியோர் பங்கேற்றனர். பல்வேறு விஷயங்கள் குறித்து கலந்தாலோசித்தனர்.

News April 23, 2025

குறைகளை ‘TN SMART’ தளத்தில் புகாராக அளிக்கலாம்

image

திருவள்ளூர் மாவட்ட பொதுமக்கள், தங்கள் பகுதிகளில் உள்ள குறைகளை ‘<>TN SMART<<>>’ இணையதளத்தில் புகாராக பதிவு செய்யலாம். இதற்கு, ‘புகார் பதிவு’ என்பதை க்ளிக் செய்து, உங்கள் பெயர், முகவரி, மொபைல் எண், புகார் விவரம் மற்றும் அதன் புகைப்படத்தை சமர்ப்பிக்கவும். அவசர நிலைகளுக்கு 1070 அல்லது 1077-ஐ அழைக்கவும். உங்கள் புகாரின் நிலை மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் தெரிந்து கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க

News April 23, 2025

திருவள்ளூர் ரிப்போர்டராக சூப்பர் வாய்ப்பு

image

நமது WAY2NEWS-ல் ரிப்போர்டராக சூப்பர் வாய்ப்பு. நீங்கள் ஆசிரியரா? வானவில் மன்ற கருத்தாளரா? ஊரக வளர்ச்சித் துறையில் ஒப்பந்த ஊழியரா? சுய உதவிக்குழு உறுப்பினரா? ஆம் என்றால் உங்கள் பணி குறித்த நிகழ்வுகளை செய்தியாக வெளியிட்டு பண மழையில் நனையுங்கள். விருப்பமுள்ளவர்கள் <>இங்கு கிளிக் செய்து<<>> உங்கள் தகவல்களை அளிக்கவும். மேலும், தகவலுக்கு 9160322122 என்ற எண்ணிற்கு வாட்ஸ்அப் செய்யவும்.நண்பர்களுக்கும் பகிரவும்

News April 23, 2025

அங்கன்வாடி வேலை: இன்றே கடைசி நாள்

image

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள குழந்தைகள் மையங்களில் காலியாக உள்ள 301 அங்கன்வாடி பணியிடங்கள், 68 அங்கன்வாடி உதவியாளர் பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நியமனம் செய்யப்பட உள்ளன. பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம். தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். 25-35 வயதுடைய 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பெண்கள் விண்ணப்பம் செய்யலாம். இன்றைக்கும் இந்த லிங்கை <>க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க

News April 23, 2025

லாரி ஏறியதில் உடல் நசுங்கி பலி

image

உ..பி.,யைச் சேர்ந்த பிரேஜேஷ்குமார் (38) பாப்பன்குப்பம் கிராமத்தில் தங்கி அங்குள்ள தனியார் தொழிற்சாலையில் ஒப்பந்த அடிப்படையில் வேலை பார்த்து வந்தார். இவர், நேற்று முன்தினம் (ஏப்ரல் 21) கும்மிடிப்பூண்டி சிப்காட் வடக்கு சாலையோரம் நின்றுக் கொண்டிருந்தபோது, பின்னால் இயக்கப்பட்ட லாரி ஒன்று அவர் மீது ஏறி இறங்கியது. இதில், உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News April 22, 2025

திருவள்ளூர்: தீராத கடனை தீர்த்து வைக்கும் பெருமாள்

image

படத்தில் இருப்பவர் தான் திருவள்ளூர், சத்தரையில் கோவில் கொண்டிருக்கும் கருமாணிக்கப் பெருமாள். சுமார் 600 ஆண்டுகள் பழமையான இக்கோவிலில், கருமாணிக்கப் பெருமாள், லக்ஷ்மி நரசிம்மர், ஆண்டாள் ஆகியோர் உள்ளனர். இங்கு சனிக்கிழமை தோறும் நெய் தீபம் ஏற்றி வழிப்பட்டால் மட்டும் போதுமாம். எவ்வளவு பெரிய தீராத கடனும் தீர்ந்து போகும் என பக்தர்கள் அடித்து சொல்கின்றனர். *தீராத கடனில் சிக்கிய உறிவனர்களுக்கு பகிரவும்*

News April 22, 2025

திருவள்ளூர் ரயில் தடம் புரண்டது

image

சென்னை ராயபுரம் அருகே மின்சார ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆவடியில் இருந்து கடற்கரை நோக்கி சென்ற மின்சார ரயிலின் 3ஆவது பெட்டியின் சக்கரங்கள் தடம் புரண்டது. நல்வாய்ப்பாக யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. ரயில் பாதையில் இருந்து இறங்கிய ரயில் பெட்டியை மீண்டும் ரயில் பாதையில் ஏற்றும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

News April 22, 2025

மின்தடையா? இந்த எண்களுக்கு கால் பண்ணுங்க

image

கோடைக்காலம் தொடங்கிவிட்டதால், அடிக்கடி மின்வெட்டும் ஏற்படும். அவ்வாறு, முன்னறிவிப்பின்றி ஏற்படும் மின்வெட்டு குறித்து புகார் அளிக்க மின்னகத்தின் (9498794987) எண்ணை தொடர்வு கொள்ளவும். ஒருவேளை லைன் கிடைக்கவில்லை அல்லது பிசியாக இருந்தால், 9444371912 என்ற திருவள்ளூர் மாவட்ட வாட்ஸ்-அப் எண்ணில் புகார் தெரிவிக்கலாம். மின்சார வாரியத்தின் <>அதிகாரப்பூர்வ <<>>X பக்கத்திலும் புகார் கொடுக்கலாம். ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!