Thiruvallur

News August 17, 2025

திருவள்ளூரில் பைக், கார் ஓட்டுவோர் கவனத்திற்கு… 1/2

image

திருவள்ளூரில் உள்ள பெட்ரோல் பங்குகளில் முறைகேடா? பெட்ரோலின் அளவு குறைவு, பெட்ரோல் தரமானதாக இல்லை, பெட்ரோல் சரியான நிறத்தில் இல்லை, அதிக கட்டணம், கட்டணத்தில் முறைகேடு உள்ளிட்ட அனைத்து புகார்களையும் பாரத் பெட்ரோலியம் என்றால் இந்த எண்ணில் 1800 22 4344 புகார் அளிக்கலாம். இந்தியன் ஆயில் என்றால் இந்த <>இணையதளத்தில் <<>>புகார் அளிக்கலாம். ஆதாரத்துடன் புகார் அளியுங்கள். ஷேர் செய்யுங்கள். <<17432227>>தொடர்ச்சி<<>>

News August 17, 2025

திருவள்ளூரில் குடும்பத்துடன் இன்று இங்கே போங்க!

image

திருவள்ளூரில் உள்ள திருப்பாச்சூர் வாசீஸ்வரர் கோயில் மிகவும் புகழ்பெற்ற சிவன் கோயிலாகும். ஒரு மாடு தினமும் ஒரு குறிப்பிட்ட இடத்தில் பால் சுரந்துள்ளது. அதைக் கண்டவர், அந்த இடத்தை தோண்டியபோது, சிவலிங்கம் சுயம்புவாகக் கிடைத்ததாக கூறப்படுகிறது. அதுவே வாசீஸ்வரர் என வழிபடப்படுகிறது.குழந்தை பாக்கியம் கிடைப்பதற்கு இங்கு வந்து வழிபடுகின்றனர். ஞாயிற்றுகிழமையான இன்று குடும்பத்துடன் சென்று வாருங்கள். ஷேர்!

News August 16, 2025

திருவள்ளூர் மக்களே உங்களுக்காக தான் இந்த செய்தி

image

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று இரவு 11 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில், ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

News August 16, 2025

திருவள்ளூரின் முதல் ரயில் சேவை எது தெரியுமா?

image

தென்னிந்தியாவின் முதல் ரயில் சேவை 1856ம் ஆண்டு ராயபுரத்தில் இருந்து வாலாஜாபேட்டைக்கு இயக்கப்பட்டது. சிறிது நேரம் கழித்து இரண்டாவது ரயில் திருவள்ளூருக்கு இயக்கப்பட்டது. முதலில் இயக்கப்பட்டு இருந்தால், தென்னிந்தியாவின் முதல் ரயில் சேவை இயக்கப்பட்ட பெருமை திருவள்ளூருக்கு கிடைத்திருக்கும். தற்போதும் இரண்டாவது ரயில் சேவை, திருவள்ளூரின் முதல் ரயில்சேவை என்ற பெருமை உள்ளது. ஷேர் பண்ணுங்க

News August 16, 2025

திருவள்ளூர் இளைஞர்களுக்கு கான்ஸ்டபிள் வேலை!

image

மத்திய பாதுகாப்பு துறையின் கீழ் எல்லை பாதுகாப்பு படையில் உள்ள கான்ஸ்டபிள் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தாண்டு மொத்தம் 3,588 கான்ஸ்டபிள் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. ரூ.69,100 வரை சம்பளம் வழங்கப்படும். 10ஆம் வகுப்பு தேர்ச்சி & ஐடிஐ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். 23ஆம் தேதிக்குள் ஆண், பெண் இருபாலரும் இந்த <>இணையதளத்தில் <<>>விண்ணப்பிக்கலாம். திருவள்ளூரில் உள்ளவர்களுக்கு ஷேர் செய்யுங்கள்!

News August 16, 2025

திருவள்ளூரில் வாடகை வீட்டில் வசிப்பவரா நீங்கள்?

image

திருவள்ளூரில், வாடகைக்கு குடியேறுபவர்கள் இதை தெரிந்து கொள்ளுங்கள். ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கேட்க வேண்டும். 11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும். வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன் அறிவிப்பு தர வேண்டும். இதை மீறுபவர்களை அதிகாரிகளிடம் (1800 599 01234) புகார் செய்யலாம். ஷேர் பண்ணுங்க!

News August 16, 2025

திருவள்ளூர்: தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்!

image

திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரியில் இன்று (ஆக.16) காலை தூய்மை பணியில் ஈடுபட்டிருந்த மாலா என்பவரை செவிலியர் மீரா, கன்னத்தில் அறைந்துள்ளார். மருத்துவர் அறையை சுத்தம் செய்வதில் ஏற்பட்ட தகராறு காரணமாக செவிலியர் மீரா அறைந்ததாக கூறப்படுகிறது. இதனை கண்டித்து 50க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரியில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

News August 16, 2025

திருவள்ளூரில் உள்ளவர்களுக்கு சூப்பர் வாய்ப்பு!

image

திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு & தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் சார்பில் ஆகஸ்ட் 30ம் தேதி வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. பூந்தமல்லி அறிஞர் அண்ணா அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறும். இதில், 12th, ITI, டிப்ளமோ, டிகிரி படித்தவர்கள் கலந்து கொள்ளலாம். இதற்கு முன்பதிவு அவசியம். <>இந்த லிங்க்<<>> மூலம் ஆகஸ்ட் 27ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். தொடர்புக்கு (7904569717) ஷேர்!

News August 15, 2025

திருவள்ளூர் இரவு ரோந்து போலீசார் விவரம்

image

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் இன்று (15/08/2025) இரவு 11 மணி முதல், காலை 7 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள பகுதிகளில், ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரியின் எண்கள், மேலே கொடுக்கப்பட்டுள்ளன. இரவில் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு பகிரவும்.

News August 15, 2025

திருவள்ளூர்: திருமண தடை நீங்க நாளை இத பண்ணுங்க

image

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயிலில் நாளை ஆடி கிருத்திகை விழா கொண்டாடப்பட உள்ளது. முருகன் வள்ளியை மணந்து சாந்தமாக அமர்ந்த மலை என்பதால், முருகனுக்கு உகந்த தினமான ஆடி கிருத்திகை தினத்தில் விரதம் இருந்து, முருகன் கோயிலுக்கு சென்று தீபம் ஏற்றி வழிபட்டால், திருமண தடை நீங்கும் என்பது நம்பிக்கை. திருமண வரன் பார்க்கும் உங்க நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!