India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருவள்ளுர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் அடங்கியுள்ள 10 சட்டமன்றத் தொகுதிகளின் இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டார். அப்போது, மாவட்ட அலுவலர் இராஜ்குமார், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மற்றும் அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அருகே தினேஷ் என்ற இளைஞர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். ஆவடி டேங்க் பேக்டரி பகுதியில் வெட்டி படுகொலை செய்யப்பட்ட தினேஷ் சரித்திர பதிவேடு குற்றவாளி என போலீசார் கூறியுள்ளனர். தினேஷை கொடூரமாக கொலை செய்த மர்ம கும்பல் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முன்பகை காரணமாக தினேஷ் கொல்லப்பட்டதாக போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
திருவள்ளூர் மாவட்ட விளையாட்டு துறை சார்பில் மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்ற பேரறிஞர் அண்ணா மராத்தான் போட்டியை இன்று காலை அமைச்சர் ஆவடி நாசர் கொடியாசித்து தொடங்கி வைத்தார். உடன், திருவள்ளூர் எம்.பி. சசிகாந்த் செந்தில் மற்றும் திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் சந்திரன் மற்றும் பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர், மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
மாற்றுத்திறனாளிகளுக்கான, பாராலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற, திருவள்ளூர் வீராங்கனைக்கு, அர்ஜுனா விருது கிடைத்துள்ளது. விளையாட்டுத் துறையில் சாதனை படைத்த வீரர்களுக்கு மத்திய அரசு உயர் விருது பட்டியலை வெளியிட்டு உள்ளது. அந்த பட்டியலில், ஆசிய விளையாட்டு போட்டியில், பாராலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற, திருவள்ளூரைச் சேர்ந்த மனிஷா இடம் பெற்றுள்ளார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இன்று (04.01.2025) சுகாதார துறை சார்பில் 24 மணி நேர தாய் சேய் நல கண்காணிப்பு மையத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.த.பிரபு சங்கர் இ.ஆ.ப., அவர்கள் திறந்து வைத்து செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார். உடன் அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
மாதாந்திர மின்பராமரிப்பு காரணமாக ஹவுசிங் போர்டு, காக்களூர், வளாகம், பஸ் நிலையம், காமராஜபுரம், ராஜாஜிபுரம், எம்.ஜி.ஆர்.நகர், பட்டரை, அதிகத்தூர், கும்மிடிப்பூண்டி பஜார், தபால் தெரு, வேற்காடு. வி.எம்.தெரு, தேர்வழி, மா.பொ.சி நகர், சோழியம்பாக்கம், அப்பாவரம், ஆரம்பாக்கம், மாதர்பாக்கம் தண்டலம் ஆகிய பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு கடம்பத்தூர் மேற்கு ஒன்றியம் எறையா மங்கலம் ஊராட்சியில் அமைந்துள்ள சினேகிதரம் ஆதரவற்ற முதியோர் இல்லத்தில் பயனாளிகளுக்கு நல திட்ட உதவிகளை வழங்கினார் திருவள்ளூர் எம்எல்ஏ ராஜேந்திரன் அவர்கள். உடன் திருத்தணி எம்எல்ஏ சந்திரன் உட்பட கட்சி நிர்வாகிகள் இருந்தனர்.
Sorry, no posts matched your criteria.