Thiruvallur

News February 7, 2025

பணியின்போது போக்குவரத்து அலுவலர் மரணம்

image

பூந்தமல்லி, சென்னீர்குப்பம் பகுதியில் வசித்தவர் செந்தில்குமரன் (54). கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூரில் உள்ள மாநில எல்லையோர ஒருங்கிணைந்த சோதனைச்சாவடியில், வட்டார போக்குவரத்து அலுவலராக வேலை பார்த்து வந்தார். நேற்று (பிப்.6) பணியில் இருந்தபோது, அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. பின்னர், தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

News February 6, 2025

பைக்குகள் மீது லாரி மோதியது: 2 பேர் பலி

image

காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த பானுப்பிரியா (32), செம்பரம்பாக்கத்தில் உள்ள தாய் வீட்டிற்கு தனது மகள், உறவினர் மாரி உடன் பைக்கிள் சென்று கொண்டிருந்தார். செம்பரம்பாக்கம் சிக்னலில் நின்ற கொண்டிருந்தபோது பின்னால் வந்த லாரி ஒன்று அவர் மீது மோதியது. இதில் பானுப்பிரியா மற்றும் மற்றொரு பைக்கிள் நின்று கொண்டிருந்த ஸ்ரீபெரும்புதூரை சேர்ந்த அரவிந்தகுமார் (25) ஆகிய 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

News February 6, 2025

நீங்களும் Way2News-இல் நிருபர் ஆகலாம்

image

உங்கள் பகுதியில் நிலவும் சாலை, குடிநீர், மின்சாரம், பேருந்து வசதி உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து யாரும் கண்டு கொள்ளவில்லையா? கவலை வேண்டாம், இப்போதே Way2News செயலியில் நிருபராக மாறி உங்கள் பகுதி மக்களின் கோரிக்கைகளை செய்திகளாக பதிவிட்டு அரசு அதிகாரிகள் மற்றும் மக்களின் கவனத்திற்கு கொண்டு செல்லுங்கள். நிருபராக பதிவு செய்ய இங்கே <>கிளிக் <<>>செய்யவும். இதனை உங்களது நண்பர்களுக்கும் பகிரவும்.

News February 6, 2025

கோல் இந்தியா நிறுவனத்தில் 434 காலிப்பணியிடங்கள்

image

மத்திய அரசின் கோல் இந்தியா நிறுவனத்தில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பல்வேறு பிரிவுகளில் மொத்தம் 434 மேனேஜ்மெண்ட் டிரைய்னி பணியிடங்கள் உள்ளன. இப்பணியிடங்களுக்கு கணினி வழி தேர்வு நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். சம்பளம் ரூ.50,000 முதல் – ரூ.1,80,000 வரை வழங்கப்படும். வரும் 14ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். <>ஷேர் செய்யுங்கள்<<>>

News February 6, 2025

போலீஸ் சீருடையில் வீடியோ கால் மூலம் மோசடி

image

போலீஸ் சீருடையில் வீடியோ கால் மூலம் அதிகளவில் பணமோசடி நடப்பதாக எஸ்.பி. ரா.சீனிவாசபெருமாள் தெரிவித்துள்ளார். “உங்களை குற்றவாளிபோல் சித்தரித்து, உங்கள் விவரங்களை பெற்றுக்கொண்டு, உங்களுக்கு வங்கியில் உள்ள பணத்தை அனுப்புமாறு கூறுவார்கள். விசாரணை முடிந்த பிறகு பணத்தை திருப்பி அனுப்பிவிடுவதாக கூறி, மக்களை ஏமாற்றி வருகின்றனர். பணமோசடி அழைப்புகள் குறித்து பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்” என்றார்.

News February 5, 2025

GBS குறித்து அச்சப்பட வேண்டாம்

image

GBS நோய் குறித்து அச்சப்பட வேண்டாம் என மருத்துவர்கள் கூறுகிறார்கள். கொரோனாபோல தொற்றுநோய் பாதிப்பு இந்த நோய்க்கு இல்லை. சிகிச்சை எடுத்துக் கொண்டால் குணமடையலாம். பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் வீடு திரும்பிவிட்டனர். வேறு சில பாதிப்புகளால் ஓரிருவர் உயிரிழக்கிறார்கள். அதன்படி, திருவள்ளூர் மைதீஸ்வரனுக்கு அவரது உடலில் ஜிபிஎஸ் நோயுடன் இதய நோயும் ஏற்பட்டதால் அவரை காப்பாற்ற முடியாமல்போனது .

News February 5, 2025

GBS நோய் என்றால் என்ன?

image

GBS நோய் என்பது பாக்டீரியா / வைரஸால் ஏற்படும் பாதிப்பாகும். தரமற்ற உணவு, மாசுபட்ட நீர், மருந்துகளால் ஏற்படும் பக்க விளைவுகள், தடுப்பூசியால் ஒவ்வாமை உள்ளிட்ட காரணங்களால் ஏற்படுகிறது. வாந்தி, வயிற்றுப்போக்கு, காய்ச்சல் ஆகிய அறிகுறிகள் முதலில் ஏற்படும். பிறகு நரம்பு மண்டலத்தை பாதிக்கும். இதனால் மூட்டு வலி, முதுகு வலி, கை, கால்கள் மரத்து போதல், மூச்சு விடுதலில் சிரமம், பேசுவதிலும் சிரமம் ஏற்படும்.

News February 5, 2025

ரூ.10 லட்சம் இழந்த வாலிபர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை

image

பூந்தமல்லி ஒன்றியத்துக்குட்பட்ட வயலாநல்லுாரைச் சேர்ந்தவர் தமிழ்செல்வன். இவர், சுங்குவார்சத்திரத்தில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்துள்ளார். ‘ஆன்லைன் ரம்மி’ விளையாடி வந்த இவர், ரூ.10 லட்சம் வரை பணத்தை இழந்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த தமிழ்செல்வன், நேற்று முன்தினம் (பிப்.3) திருவள்ளூர் – ஏகாட்டூர் இடையே ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

News February 5, 2025

மத்திய அரசு நிறுவனத்தில் 400 காலிப்பணியிடங்கள்

image

பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட்டில் உள்ள இன்ஜினியர், மேற்பார்வையாளர் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இன்ஜினியரிங் டிரைய்னி – 150, மேற்பார்வையாளர் டிரைய்னி – 250 என மொத்தம் 400 பணியிடங்கள் உள்ளன. 27 வயது உடைய முதுகலை பட்டம் முடித்தவர்கள் வரும் 28ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். ஏப்ரல் 11, 12, 13 தேதிகளில் தேர்வு நடைபெறும். சம்பளம் ரூ.30,000 முதல் ரூ.1,60,000 வரை வழங்கப்படும். <>ஷேர் பண்ணுங்க<<>>

News February 5, 2025

GBS நோயால் 9 வயது சிறுவன் பலி

image

திருவள்ளூரை சேர்ந்த பிரேம்குமார் என்பவரது மகன் மைதீஸ்வரன், அங்குள்ள பள்ளியில் 4ஆம் வகுப்பு படித்து வந்தான். அவனுக்கு, கால்களில் உணர்ச்சியின்மை ஏற்பட்டதால், எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அச்சிறுவன் 3 நாட்களுக்கு முன்பு உயிரிழந்தான். பரிசோதனையில் ‘கிலன் பா சின்ட்ரோம்’ எனும் GBS நோய் பாதிப்பு இருந்தது தெரியவந்தது.

error: Content is protected !!