Thiruvallur

News April 5, 2025

டீம் லீடர் பணிக்கு வேலைவாய்ப்பு

image

திருவள்ளுர் ஆதித்யா பிர்லா சன் லைப் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் டீம் லீடர் பணிக்கு வேலை வாய்ப்பு. இவ்வேலைக்கு உயர்கல்வி (12வகுப்பு) தகுதி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளம் ரூ.15,000-25,000 வழங்கப்படும். இப்பணிக்கு 50 காலி பணியிடங்கள் உள்ளது. இவ்வேலையில் இணைய விருப்பமுள்ளவர்கள் இந்த லிங்கை<> கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்.

News April 5, 2025

தரை பாலத்தின் கீழ் கிடந்த ஆண் சடலம்

image

திருவள்ளூர், ஆர்கே பேட்டை அடுத்த அம்மையார் குப்பத்தை சார்ந்த ராமலிங்கம் மகன் விஜயகாந்த் 34 நேற்று முன்தினம் வீட்டை விட்டு வெளியே சென்றவர் மீண்டும் திரும்பவில்லை. கீழ்மோசூர் செல்லும் சாலையில் இறந்த கிடப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. சடலத்தை மீட்டு திருத்தணி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்ததில் சடலமாக இருந்தவர் விஜயகாந்த் என தெரியவந்துள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News April 5, 2025

திருவள்ளூரில் 2லட்சம் ஆண்டுகள் பழமையான தொல்லியல் சின்னம்

image

பூண்டி நீர்த்தேக்கத்தை தாண்டி அமைந்துள்ளது குடியம் கிராமம். இக்கிராமத்தை ஒட்டி இருக்கும் குகைகளில் பழைய கற்கால மனிதர்கள் வாழ்ந்தனர். இப்பகுதியை ஆங்கிலேய தொல்லியல் அறிஞரான ராபர்ட் ப்ருஸ் ஃபுட் முதன்முதலில் கண்டறிந்தார். அதுமட்டுமின்றி இவ்விடம் பழைய கற்கால மனிதர்கள் கை கோடாரி செய்யும் பகுதியாக இருந்தது. அதற்கு ஏற்ப இவ்விடத்தில் அதிகமான அளவில் மிக பழமையான கை கோடாரிகளை காணலாம். ஷேர் பண்ணுங்க

News April 4, 2025

திருவள்ளூர் மக்களுக்கு தெரிய வேண்டிய எண்கள்

image

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரக உதவி எண்- 18005997626 , 9840327626, ஆட்சியரக கட்டுப்பாட்டு அறை- 044 – 27666746, பேரிடர் கால உதவி- 044-27664177, 9444317862, 1077, காவல் கட்டுப்பாட்டு அறை- 100, விபத்து உதவி எண்- 108, தீ தடுப்பு- 101, விபத்து அவசர வாகன உதவி- 102, குழந்தைகள் பாதுகாப்பு-1098, பாலின துன்புறுத்தல் தடுப்பு- 1091, BSNL ஹெல்ப் லைன்- 1500. *மிக முக்கிய எண்களான இவற்றை நண்பர்களுக்கும் பகிரவும்

News April 4, 2025

திருவள்ளூர் மாவட்ட இளைஞர்களுக்கு முக்கிய அறிவிப்பு

image

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரகத்தில் 15.04.2025 அன்று மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டி மையம் சார்பில் பிரதமர் அப்ரண்டீஸ் பயிற்சி மேளா நடைபெற உள்ளது. இதில் மத்திய மாநில தனியார் நிறுவனங்கள், தொழில் நிறுவன கூட்டமைப்புகள் கலந்து கொள்கின்றன. இதில் கலந்துகொண்டு மத்திய அரசின் நாக் சான்றிதழ் பெற்று பயனடையலாம். 9499055663, 8778452515, 9444139373 எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம். SHARE TO FRIENDS

News April 4, 2025

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொழில் பழகுனர் பயிற்சி முகாம்

image

திருவள்ளூர் மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 15.04.2025 அன்று மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டி மையம் சார்பில் பிரதமர் அப்ரண்டீஸ் பயிற்சி மேளா நடைபெற உள்ளது. இதில் மத்திய மாநில தனியார் நிறுவனங்கள், தொழில் நிறுவன கூட்டமைப்புகள் கலந்து கொள்கின்றன. இதில் கலந்துகொண்டு மத்திய அரசின் நாக் சான்றிதழ் பெற்று பயனடையலாம் 9499055663,8778452515,9444139373 எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.

News April 4, 2025

தட்டுப்பாடு இல்லாமல் குடிநீர் வழங்க அறிவுறுத்தல்

image

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அம்ருத் 2.0 திட்டத்தின் கீழ் குடிநீர் திட்டப்பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் பிரதாப் தலைமையில் நடைபெற்றது. ஆரணி, திருமழிசை பேரூராட்சிகளில் அம்ருத் 2.0 திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அப்பணியை விரைந்து முடித்து பொதுமக்களுக்கு தட்டுப்பாடு இல்லாமல் குடிநீர் வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்தார்.

News April 4, 2025

1,299 SI பணியிடங்கள்: 7ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்

image

தமிழ்நாட்டில் உள்ள 1,299 எஸ்.ஐ. பணியிடங்களுக்கான தேர்வுக்கு வரும் 7ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தாலுகாவில் 933 காலிப் பணியிடங்களும். ஆயுதப்படையில் 366 காலிப் பணியிடங்களும் உள்ளன. ஏதாவது ஒரு இளங்கலை பட்டம் பெற்றவர்கள் வரும் மே 3ஆம் தேதி வரை இந்த <>லிங்கை க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். வாரிசுதாரர்கள் மற்றும் விளையாட்டு வீரர்களுக்கு 10% ஒதுக்கீடு உள்ளது. ஷேர் செய்யுங்கள்

News April 4, 2025

திருவள்ளூர் மாவட்டத்தில் தொழில் பயிற்சி

image

திருவள்ளூர் மாவட்டத்தில் ஏப்ரல் 15, 2025 (செவ்வாய்க்கிழமை) காலை 9:00 மணிக்கு PM Apprenticeship Mela (PMNAM) நடைபெற உள்ளது. வேலைவாய்ப்பு மற்றும் தொழில் பயிற்சிக்கான வாய்ப்புகளை வழங்கும் இந்த நிகழ்வில், அரசு, தனியார் நிறுவனங்கள் மற்றும் தொழில் கூட்டமைப்புகள் பங்கேற்கின்றன. ITI தேர்ச்சி பெற்றவர்களும் NAC சான்றிதழ் பெற்றவர்களும் இதில் கலந்து கொள்ளலாம்.

News April 4, 2025

மூதாட்டியை தாக்கி கொன்ற தாய், மகள் கைது

image

சோழவரம் அருகே, பொதுக் கழிப்பறையில் தண்ணீர் சரியாக வரவில்லை என்று ஏற்பட்ட தகராறில், லட்சுமி (65) மீது சுந்தரி (55) மற்றும் அவரது மகள் கோமதி (30) சரமாரியாக தாக்குதல் நடத்தினர். லட்சுமி மயக்கமடைந்து விழுந்த நிலையில், அருகிலுள்ளவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றும் பலனின்றி, அவர் உயிரிழந்தார். சம்பவம் தொடர்பாக சோழவரம் போலீசார் வழக்குப் பதிந்து, தாய், மகளைக் கைது செய்து விசாரிக்கின்றனர். 

error: Content is protected !!