India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருவள்ளூர் வீரராகவப்பெருமாள் திருக்கோவிலில் சிவபெருமான் தனது தோஷம் நீங்க பெருமாளை வணங்கி தோஷம் நீங்கப் பெற்றதாகவும் தல வரலாற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதனால் தீராத நோயால் வருந்துபவர்கள். இத்தலத்தில் ஒன்பது கரைகளுடன் அமைந்துள்ள தீர்த்தத்தில் நீராடி, பெருமாளைத் தரிசித்தால் நோய்கள் அனைத்தும் நீங்கும், தோஷங்கள் அகலும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.
திருவள்ளூர் மாவட்ட நல்வாழ்வு சங்கம் வேலைவாய்ப்பை அறிவித்துள்ளது. அதன்படி Yoga Instructor வேலைக்கு மொத்தமாக 36 காலியிடங்கள் நிரப்ப பட உள்ளனர். கல்வித்தகுதியான இளங்கலை படித்தவர்கள் இந்த <
திருத்தணி, கே.ஜி.கண்டிகை சிவன் கோவிலுக்கு செல்லும் மலைப்பாதையில், 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற திருத்தணி போலீசார், இறந்தவரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இவர் குறித்த தகவல் கிடைக்காததால் இச்சம்பவம் குறித்து காவல்துறை விசாரணை செய்து வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்ட காவல்துறை தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் இணைய மோசடிகாரர்கள் சமூக ஊடக கணக்குகளில் தள்ளுபடியில் IPL டிக்கெட்டுகள் வைத்திருப்பதாகக் கூறி, QR லிங்க் மூலம் பணத்தை பெற்றுக்கொண்டு மோசடி செய்கிறார். எனவே தெரியாத இணைப்புகளை கிளிக் செய்யாதீர்கள். QR குறியீடுகள் மூலம் அவர்களுக்கு பணம் செலுத்த வேண்டாம் என எச்சரிக்கை பதிவு செய்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி மற்றும் கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகத்திற்கு புதிய வட்டாட்சியர்கள் நியமனம் பொன்னேரி வட்டாட்சியராக இருந்த சிவகுமார் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டு புதிய வட்டாட்சியராக டி ஆர் சோமசுந்தரம் நியமிக்கப்பட்டுள்ளார் மேலும் கும்முடிபூண்டி வட்டாட்சியராக கே சுரேஷ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்
திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ள மத்திய அரசு கல்வித்துறையின் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 2025-26 கல்வி ஆண்டிற்கான மாணவர்கள் சேர்க்கை தொடங்கி நடைபெற்று வருகிறது. Pre-KG, UKG ஆகிய வகுப்புகள் உட்பட முதலாம் வகுப்பிற்கும் மாணவர்கள் சேர்க்கை மார்ச் 7-ம் தேதி தொடங்கி 21 ஆம் தேதி முடிந்தது. மேலும் மீதம் உள்ள இடங்களுக்கு ஏப்ரல் 2ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ளது .
இந்தியன் ரயில்வேயில் ALP எனப்படும் உதவி லோகோ பைலட் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 9,900 காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. வரும் ஏப்ரல் 10ஆம் தேதி முதல் இந்த <
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், நேற்று (மார்.25) மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இதில், நிலம் சம்பந்தமாக 235, வேலைவாய்ப்பு சம்பந்தமாக 94, சமூக பாதுகாப்பு திட்டம் சம்பந்தமாக 108, அடிப்படை வசதிகள் வேண்டி 153 என மொத்தம் 736 மனுக்கள் பெறப்பட்டன. மாவட்ட ஆட்சியர் பிரதாப் தலைமை தாங்கி, மனுக்கள் அனைத்தையும் பெற்றுக் கொண்டார். மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
கும்மிடிப்பூண்டி அடுத்த குருவராஜகண்டிகை கிராமத்தைச் சேர்ந்த கந்தசாமி (57), தனியார் தொழிற்சாலையில் காவலாளியாக பணிபுரிந்து வந்தார். கடந்த 22ஆம் தேதி பணிக்கு சென்றவர் நேற்று முன்தினம் மாலை உடல்நலக்குறைவு ஏற்பட்டு அரசு மருத்துவமனைகளுக்குச் சென்றபோது இறந்துவிட்டார். இதையடுத்து, தொழிற்சாலையில் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதால் போராட்டம் முடிவுக்கு வந்தது.
திருத்தணி, சாய்பாபா நகரைச் சேர்ந்தவர் சுவாதி – பிரித்திவிராஜ் தம்பதியினர். இவர்களுக்கு 2 மாதமான பெண் குழந்தை உள்ளது. குழந்தைக்கு நேற்று (மார்.25) தாய்ப்பால் கொடுத்தபோது மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. உடனடியாக குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டு சென்று பார்த்தபோது, குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர் தெரிவித்தார். இதனால் குழந்தையின் பெற்றோர் கதறி துடித்தது பார்ப்போரை கண்கலங்க வைத்தது.
Sorry, no posts matched your criteria.