Thiruvallur

News February 27, 2025

மகனை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற தாய்

image

தொடுகாடு கிராமத்தில், கிருஷ்ணமூர்த்தி (27) வேலைவாய்ப்பின்றி தாய் ஜெயந்தியிடம் தொடர்ந்து பணம் கேட்டு தகராறாக மிரட்டினார். பணம் தர முடியாது என்ற தாயுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில், ஜெயந்தி கிருஷ்ணமூர்த்திக்கு பெட்ரோல் ஊற்றி தீவைத்து எரித்தார். காயமடைந்த கிருஷ்ணமூர்த்தி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார். மப்பேடு போலீசில் புகாரின் பேரில் ஜெயந்தி கைது செய்யப்பட்டார்.

News February 26, 2025

முன்னாள் ராணுவ வீரர் கொலை: மனைவி உள்பட 8 பேர் கைது

image

திருவாலங்காடு அடுத்த முத்துக்கொண்டாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன். முன்னாள் ராணுவ வீரரான இவர், கடந்த சில தினங்களுக்கு முன்பு பைக்கில் சென்றபோது கார் மோதி உயிரிழந்தார். விசாரணையில், வெங்கடேசனை அவரது மனைவி சந்தியா, சகோதரர் சண்முகம் மற்றும் கள்ளக்காதலன் லோகேஷ் உள்ளிட்ட 8 பேர் உடன் இணைந்து கார் ஏற்றி ராடால் அடித்து கொலை செய்தனர். 8 பேரும் கைது செய்து செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

News February 26, 2025

மகனை எரித்துக் கொன்ற தாய்

image

தொடுகாடு அடுத்த நமச்சிவாயபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (27. இவருக்கு, வேலை கிடைக்காததால் குடித்துவிட்டு ஊர்சுற்றி வந்துள்ளார். தொழில் தொடங்க பணம் கேட்டு தாய் ஜெயந்தி (45) உடன் அவ்வப்போது சண்டையிட்டு வந்துள்ளார். அவ்வாறு, கடந்த 24ஆம் தேதி பணம் கேட்டு சண்டையிட, தாய் ஆத்திரமடைந்து பெட்ரோல் ஊற்றி எரித்து மகனை கொலை செய்தார். இதுகுறித்த புகாரின் பேரில் தாய் கைது செய்யப்பட்டார்.

News February 25, 2025

தம்பதி ஒற்றுமையை ஏற்படுத்தும் சிவாநந்தீஸ்வரர் திருக்கோவில்

image

திருவள்ளூர் திருகண்டலதில் அமைந்துள்ளது அருள்மிகு சிவாநந்தீஸ்வரர் திருக்கோவில்.இக்கோவிலில் சிவ பெருமான், சக்தி தட்சிணாமூர்த்தியாக தனி சன்னதியில் இருக்கிறார்.பிரிந்து இருக்கும் தம்பதிகள் இங்கு கள்ளி மலர்கள் கொண்டு அர்ச்சனை செய்து வழிபட்டால் குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும்.திருமணத்தடைகள் நீங்கும், வறுமை நீங்கி செல்வ செழிப்பு உண்டாகும் என்பது நம்பிக்கை.நாளை சிவராத்திரிக்கு இங்கு ஒரு விசிட் அடியுங்கள்.

News February 25, 2025

திருவள்ளூர் மாவட்ட விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு

image

திருவள்ளூர் ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட அளவிலான விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் பிப். 28 தேதி நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் பிரதாப் அறிவித்துள்ளார். இதில் வேளாண்மை, தோட்டக்கலை, கால்நடை பராமரிப்பு, மீன்வளம், வங்கிகள், மின்வாரியம் உள்ளிட்ட துறை அலுவலர்கள் பங்கேற்கின்றனர். திருவள்ளூர் மாவட்ட விவசாயிகள் இதில் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும் என கலெக்டர் பிரதாப் அறிவித்துள்ளார். ஷேர் பண்ணுங்க. 

News February 25, 2025

தாய்ப்பால் குடிக்கும்போதே இறந்த பிஞ்சு குழந்தை

image

ஊத்துக்கோட்டை அடுத்த எல்லம்பெட்டை கிராமத்தை ரவிச்சந்திரன்(35)- நாகேஸ்வரி(30) தம்பதிக்கு சாருலதா என்ற 2 மாத பெண் குழந்தை உள்ளது. நாகேஸ்வரி குழந்தைக்கு பால் கொடுத்தவாரே அசந்து துங்கியுள்ளார். நேற்று காலையில் எழுந்து பார்த்தபோது குழந்தை அசைவின்றி இருந்துள்ளது. பதறிபோன பெற்றோர் மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் தாய்ப்பால் குடிக்கும்போது மூச்சுத்திணறி குழந்தை இறந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

News February 24, 2025

CISFல் வேலை- கைநிறைய சம்பளம்!

image

மத்திய தொழில் பாதுகாப்பு படையான CISFல் 1161 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 10th பாஸ் போதும். 18- 23(1.8.25) வயது உடையவர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.21,700- ரூ.69,100 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் https://cisfrectt.cisf.gov.in/ என்ற இணையதளத்தில் 5-03-2025- 3-04-2025க்குள் விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க.

News February 24, 2025

கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து- ஒருவர் பலி

image

பூந்தமல்லி, குமணன்சாவடி பகுதியை சேர்ந்த கோபிகிருஷ்ணன்(49) தனது உறவினர்கள் 4 பேருடன் சித்தூரில் இருந்து காரில் சென்னை நோக்கி வந்தார். அப்போது திருவள்ளூர் அடுத்த பாண்டூர் சாலையில் எதிரே திருத்தணி நோக்கி வந்த மற்றொரு கார் மீது நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ஒருவர் பலியான நிலையில் படுகாயம் அடைந்த 6 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், இரு கார்களும் அப்பளம் போல் நொறுங்கியது.

News February 23, 2025

திருவள்ளூரில் முதல்வர் மருந்தகம் நாளை திறப்பு

image

திருவள்ளூர் மாவட்டத்தில் 33 முதல்வர் மருந்தகங்கள் நாளை திறக்கப்பட உள்ளது. தமிழகத்தில் குறைந்த விலையில் மருந்துகளை வழங்க 1,000 மருந்தகங்கள் திறக்கப்படும். இங்கு ‘ஜெனெரிக்’ மருந்துகள், ‘சர்ஜிக்கல்ஸ்’, சித்தா, ஆயுர்வேதம், யுனானி மருந்துகள் 25% தள்ளுபடியில் கிடைக்கும். திருவள்ளூரில் 18 கூட்டுறவு சங்கங்கள், 15 தொழில்முனைவோர் மூலமாக இயங்கவுள்ளது என கலெக்டர தெரிவித்துள்ளார்.

News February 23, 2025

திருவள்ளூர்: முன்னாள் படைவீரா் குறைதீா் முகாம்

image

திருவள்ளூர் மாவட்ட முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு பயன்பெறும் வகையில், மார்ச் 7-ஆம் தேதி மாலை 3 மணிக்கு மாவட்ட ஆட்சியர் தலைமையில் சிறப்பு குறைதீர் கூட்டம் நடைபெறும். இதில், திறன் பயிற்சி திட்டங்கள் மற்றும் முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டம் குறித்து விழிப்புணர்வு அளிக்கப்படும். முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் இதில் மனு வழங்கலாம். பகீரவும்

error: Content is protected !!