Thiruvallur

News March 3, 2025

கொசவன்பேட்டையில் ஆண் சடலம் மீட்பு

image

ஊத்துக்கோட்டை, பெரியபாளையம் அருகே கொசவன்பேட்டை பேருந்து நிலையம் அருகே அடையாளம் தெரியாத 70 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கிடப்பதாக அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தன. இதையடுத்து பெரியபாளையம் போலீசார்  உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இச்சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதி பரப்பரப்பாக காணப்பட்டது.

News March 3, 2025

திருவள்ளூர் இரவு ரோந்து போலீசார் விவரங்கள் வெளியீடு

image

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

News March 3, 2025

டச்சு கல்லறைகளை பார்வையிட்ட நெதர்லாந்து குடும்பம்

image

திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு ஏழைகளின் சுற்றுலா தளங்களில் ஒன்று. அங்கு 1700 இல் டச்சுக்காரர்களின் கல்லறை உள்ளது. அதில் பல்வேறுபட்ட வசனங்கள் எழுதப்பட்டுள்ளன. இங்கிருந்து, நெதர்லாந்து சென்ற டச்சு குடும்பத்தை சார்ந்தவர்கள் Google மூலம் தனது மூதாதையர்கள் வாழ்க்கை வரலாற்றை படித்து, பழவேற்காட்டில் மிகவும் பழமை வாய்ந்த டச்சு கல்லறைகள் உள்ளது என்று வந்து அந்த இடத்தை பார்வையிட்டனர்.

News March 2, 2025

ஆவடி கும்மிடிப்பூண்டிக்கு புதிதாக மின்சார ரயில் அறிவிப்பு

image

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி கும்மிடிப்பூண்டிக்கு புதிதாக இரு ரயில்கள் இயக்கப்படும் என சென்னை ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது. சென்னை சென்ட்ரல், கடற்கரையிலிருந்து செங்கல்பட்டு, ஆவடி, கும்மிடிப்பூண்டி வழித்தடத்தில் 5 முதல் 10 நிமிடங்களுக்கு ஒரு மின்சார ரயில் இயக்கப்படுகிறது. இந்நிலையில், சென்னை சென்ட்ரலிலிருந்து ஆவடி மற்றும் கும்மிடிப்பூண்டிக்கு புதிதாக இரு மின்சார ரயில்கள் விடப்படும்.

News March 2, 2025

புற்றுநோய் தாக்கத்தை குணமாக்கும் கற்கடேஸ்வரர்

image

திருவள்ளூர் மாவட்டம், மணவூர் கிராமத்தில் ஆதி காமாட்சி அம்மன் சமேத கற்கடேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. திங்கட்கிழமைகளில், தொடர்ச்சியாக 9 வாரங்கள் இத்தலம் வந்து, இறைவனுக்கு வெல்லம் வைத்து வழிபாடு செய்தால், புற்றுநோய் தாக்கம் குறையும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது. இந்த ஆலயம் தினமும் காலை 9 மணி முதல் பகல் 12 மணி வரை திறந்து வைக்கப்பட்டிருக்கும். ஷேர் பண்ணுங்க.

News March 2, 2025

போஸ்ட் ஆபிசில் வேலை; நாளையே கடைசி

image

சென்னை. செங்கல்பட்டில் உள்ள கிளை போஸ்ட் மாஸ்டர், உதவி கிளை போஸ்ட் மாஸ்டர் பதவிகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். 91 பணியிடங்கள். கணினி அறிவு, சைக்கிள் ஓட்ட தெரிந்திருக்க வேண்டும். 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும். போஸ்ட் மாஸ்டருக்கு ரூ.12,000 – ரூ.29,380, உதவி போஸ்ட் மாஸ்டருக்கு ரூ.10,000 – ரூ.24,470 வரை சம்பளம். நாளைக்குள் (மார்.3) இந்த லிங்கை <>க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்க வேண்டும்

News March 2, 2025

109 தேர்வு மையங்களில் அனைத்து ஏற்பாடுகள் தயார்

image

திருவள்ளூர் மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு நாளை (மார்.3) 109 மையங்களில் தொடங்குகிறது. தேர்வை 28,514 மாணவர்கள் எழுதுகின்றனர். பிளஸ் 1 பொதுத்தேர்வுகள், மார்ச் 5 முதல் 27ஆம் தேதி வரை நடைபெறும். 29,625 மாணவர்கள் பிளஸ் 1 தேர்வுகளை எழுதுகின்றனர். தேர்வுகள் நன்றாக நடைபெற, 24 மணிநேரமும் பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. வினாத்தாள் மற்றும் விடைத்தாள் பாதுகாப்பிற்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

News March 2, 2025

திருவள்ளூர் ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

போதைப்பழக்கம் இல்லாத திருவள்ளூரை உருவாக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, தமிழக அரசால் ‘DRUG FREE TN’ என்ற செயலி அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இந்த செயலியை பொதுமக்கள், மாணவர்கள் தங்களது செல்போனில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தங்கள் பகுதிகளில் தடை செய்யப்பட்ட போதைப்பொருட்கள் பயன்பாடு புழக்கத்தில் இருப்பது கண்டறியப்பட்டால், ,புகார்களாக பதிவேற்றம் செய்யலாம் என கலெக்டர் பிரதாப் தெரிவித்துள்ளார்.

News March 2, 2025

46 வழித்தடத்தில் மினி பஸ் இயக்க முடிவு

image

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 2,600 குக்கிராமங்களில், மினி பேருந்துகள் சேவையை தமிழக அரசு அறிமுகப்படுத்துகிறது. அதன்படி, 46 புதிய வழித்தடங்கள் கண்டறியப்பட்டு, 7 முதல் 25 கி.மீ., தூரத்திற்கு மினி பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. மின் பேருந்துகளை இயக்க விருப்பம் உள்ளவர்கள் திருவள்ளூர் மாவட்ட இணையதளத்தில் சென்று விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து, வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் சமர்ப்பிக்க வேண்டும்.

News March 2, 2025

சாலை விபத்தில் சிக்கிய பைக்: நண்பர்கள் கண்முன்னே பலி

image

பழவேற்காடு ஜமீலாபாத் மீனவ கிராமத்தைச் சேர்ந்த அப்துல் காசிம், நிஜாமுதின், அரோன் ஆகியோர் சமையல் தொழிலாளர்களாக பணியாற்றி வந்தனர். நேற்று (மார்.1) தேவம்பட்டு பகுதியில் சமையல் வேலையை முடித்துவிட்டு மூவரும் பைக்கில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது, கோளூர் கிராமம் அருகே பைக் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தறிகெட்டு ஓடி விபத்துக்குள்ளானது. இதில், அப்துல் காசிம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

error: Content is protected !!