Thiruvallur

News September 30, 2025

மதுபானக் கடைகளை மூட ஆட்சியர் உத்தரவு!

image

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரதாப் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அக்டோபர் 2-ம் தேதியன்று மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபானக் கடைகளும் மூடப்படும் என அறிவித்துள்ளார். உத்தரவை மீறும் கடைகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

News September 29, 2025

திருவள்ளூரில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம்

image

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கத்தில் இன்று மாவட்ட ஆட்சித் தலைவர் மு.பிரதாப் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாற்றுத்திறனாளி பயனாளிகளிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். உடன் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

News September 29, 2025

திருவள்ளூர்: காது கோளாதோர் தின விழிப்புணர்வு பேரணி

image

திருவள்ளுர் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் இன்று மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் சர்வதேச காது கேளாதோர் தினம் மற்றும் இந்திய சைகை மொழி தினம் ஆகியவற்றை அனுசரிக்கும் விதமாக மாவட்ட ஆட்சித் தலைவர் மு.பிரதாப் 100க்கும் மேற்பட்டவர்கள் கலந்துக்கொண்ட விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். உடன் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் துறை சார்ந்த அலுவலர்கள் உள்ளனர்.

News September 29, 2025

திருத்தணி முருகர் கோயிலுக்கு இப்படி ஒரு சக்தியா!

image

திருவள்ளூர் மாவட்ட வட எல்லையில் அறுபடை வீடுகளில் ஒன்றான திருத்தணிகை மலை அமைத்துள்ளது. அங்கு வீற்றிருக்கும் முருகனை தணிகாசலம் என்று பக்தர்கள் வழிபடுகின்றனர். இந்த கோயிலில் முடி காணிக்கை செய்தால் எதிரிகள் தொல்லை, கடன், நோயிலிருந்து விடுபடலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கை. எதிரிகள், கடன், நோய்களில் பாதிக்கப்பட்டிருக்கும் உங்கள் நண்பர்கள், உறவினர்களுக்கு இதை ஷேர் செய்யவும்.

News September 29, 2025

திருவள்ளூரில் இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்!

image

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று (செப்.29) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News September 29, 2025

திருத்தணி முருகர் கோயிலுக்கு இப்படி ஒரு சக்தியா!

image

திருவள்ளூர் மாவட்ட வட எல்லையில் அறுபடை வீடுகளில் ஒன்றான திருத்தணிகை மலை அமைத்துள்ளது. அங்கு வீற்றிருக்கும் முருகனை தணிகாசலம் என்று பக்தர்கள் வழிபடுகின்றனர். இந்த கோயிலில் முடி காணிக்கை செய்தால் எதிரிகள் தொல்லை, கடன், நோயிலிருந்து விடுபடலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கை. எதிரிகள், கடன், நோய்களில் பாதிக்கப்பட்டிருக்கும் உங்கள் நண்பர்கள், உறவினர்களுக்கு இதை ஷேர் செய்யவும்.

News September 29, 2025

திருவள்ளூரில் TNPSC குரூப்-2 தேர்வு: 10,395 பேர் எழுதினர்

image

திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று (செப். 28) TNPSC குரூப்-2 தேர்வு 34 மையங்களில் நடைபெற்றது. இத்தேர்வுக்கு விண்ணப்பித்த 14,278 தேர்வர்களில் 10,395 பேர் தேர்வு எழுதினர். மாவட்ட ஆட்சியர் பிரதாப் அவர்கள் தேர்வு மையங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

News September 29, 2025

திருவள்ளூர்: கரண்ட் பில் அதிகமா வருதா?

image

திருவள்ளூர் மக்களே கரண்ட் பில் அதிகமா வருதா? கவலையை விடுங்க இதுபோன்ற பிரச்னைகளுக்கு நீங்கள் EB அலுவலகத்துக்கு செல்ல வேண்டும் என்று அவசியல் இல்லை. உரிய ஆவணங்களுடன் தமிழ்நாடு அரசின் TANGEDCO என்ற செயலியில் புகார் அளிக்கலாம்.அல்லது 94987 94987 என்ற கட்டணமில்லா புகார் எண்ணை தொடர்பு கொண்டும் புகார் தெரிவிக்கலாம். இதில் மின் கட்டணத்தையும் செலுத்தலாம். இந்தத் தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.

News September 29, 2025

திருவள்ளூர்: DIPLOMA, B.E முடித்தவர்கள் கவனத்திற்கு!

image

தமிழ்நாடு மோட்டார் வாகன பராமரிப்பு துறையில் 1 வருட தொழிற்பயிற்சிக்கு விண்ணபிக்க அறிவிப்பு வெளியாகியுள்ளது . 2021 முதல் 2025 ஆண்டுகளில் மெக்கானிக்கல், ஆட்டோமொபைல் துறைகளில் டிப்ளமோ,டிகிரி முடித்தவர்கள் <>இந்த <<>>லிங்க் மூலம் அக்.16-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். டிகிரி முடித்தவர்களுக்கு மாதம் ரூ.9000 (ம) டிப்ளமோ முடித்தவர்களுக்கு மாதம் ரூ.8000 உதவித்தொகை வழங்கப்படும். சூப்பர் வாய்ப்பு ஷேர் பண்ணுங்க.

News September 29, 2025

திருவள்ளூர்: பைக், கார் வைத்துள்ளோர் கவனத்திற்கு…

image

திருவள்ளூர் மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். Mparivahan என்ற அரசு செயலியில் உங்கள் விவரம் மற்றும் தகுந்த ஆதாரங்களை இணைத்தால், காவலர்கள் அதை உடனே செக் செய்து உங்கள் அபராதத்தை Cancel செய்வார்கள். மேலும் தகவல்களுக்கு 0120-4925505 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுங்கள். ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!