India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மத்திய தொழில் பாதுகாப்பு படையான CISFல் 1161 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 10th பாஸ் போதும். 18- 23(1.8.25) வயது உடையவர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.21,700- ரூ.69,100 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் https://cisfrectt.cisf.gov.in/ என்ற இணையதளத்தில் 5-03-2025- 3-04-2025க்குள் விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க.
பூந்தமல்லி, குமணன்சாவடி பகுதியை சேர்ந்த கோபிகிருஷ்ணன்(49) தனது உறவினர்கள் 4 பேருடன் சித்தூரில் இருந்து காரில் சென்னை நோக்கி வந்தார். அப்போது திருவள்ளூர் அடுத்த பாண்டூர் சாலையில் எதிரே திருத்தணி நோக்கி வந்த மற்றொரு கார் மீது நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ஒருவர் பலியான நிலையில் படுகாயம் அடைந்த 6 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், இரு கார்களும் அப்பளம் போல் நொறுங்கியது.
திருவள்ளூர் மாவட்டத்தில் 33 முதல்வர் மருந்தகங்கள் நாளை திறக்கப்பட உள்ளது. தமிழகத்தில் குறைந்த விலையில் மருந்துகளை வழங்க 1,000 மருந்தகங்கள் திறக்கப்படும். இங்கு ‘ஜெனெரிக்’ மருந்துகள், ‘சர்ஜிக்கல்ஸ்’, சித்தா, ஆயுர்வேதம், யுனானி மருந்துகள் 25% தள்ளுபடியில் கிடைக்கும். திருவள்ளூரில் 18 கூட்டுறவு சங்கங்கள், 15 தொழில்முனைவோர் மூலமாக இயங்கவுள்ளது என கலெக்டர தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்ட முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு பயன்பெறும் வகையில், மார்ச் 7-ஆம் தேதி மாலை 3 மணிக்கு மாவட்ட ஆட்சியர் தலைமையில் சிறப்பு குறைதீர் கூட்டம் நடைபெறும். இதில், திறன் பயிற்சி திட்டங்கள் மற்றும் முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டம் குறித்து விழிப்புணர்வு அளிக்கப்படும். முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் இதில் மனு வழங்கலாம். பகீரவும்
திருவள்ளூர் மாவட்டத்தில், உரிய அனுமதியின்றி தென்னை, காய்கறி விதை மற்றும் கன்றுகளை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என விதை ஆய்வு துணை இயக்குநர் ரவி தெரிவித்துள்ளார். உரிமம் இல்லாமல் விற்பனை செய்வதோ, ரசீது வழங்காதோ, பதிவு மேற்கொள்ளாதோ செய்யப்பட்டால் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும். புதிய உரிமம் பெற seedcertification.tn.gov.in இணையதளத்தில் பதிவு செய்யலாம்.
திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட அளவிலான ஆலோசனைக் கூட்டத்தில் கலெக்டர் பிரதாப் தலைமையில் உணவுப் பொருட்களின் தரத்தை மேம்படுத்தும் நடவடிக்கைகள் குறித்து பேசப்பட்டது. கடைகளில் அடிக்கடி நடத்த உணவு பாதுகாப்பு அலுவலர் மற்றும் காவல் துறை இணைந்து கள ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்.
இந்திய ரயில்வேயில் உள்ள குரூப்: D பிரிவில் மொத்தமுள்ள 32,438 காலிப்பணியிடங்கள் நிரப்பப்ட உள்ளன. 10 மற்றும் ITI முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். குறிப்பாக தென்னக ரயில்வே கோட்டத்தில் மட்டும் 2,694 பணியிடங்கள் உள்ளன. வயது 18-36க்குள் இருக்க வேண்டும். தொடக்கத்தில் 18,000 சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் வரும் மார்ச்.1க்குள் இந்த இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க
கும்மிடிப்பூண்டி புறநகர் ரயில்கள் நாளை( பிப்.24) ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சிக்னல் சீரமைப்பு பணிகள் காரணமாக சென்னை சென்ட்ரல் – கும்மிடிப்பூண்டி ரயில்கள் இன்று காலை 9.50 மதியம் 3.50 மணி வரை ரத்து செய்யப்படுகிறது. மேலும், சென்னை சென்ட்ரல்- பொன்னேரி வரை மட்டும் 14 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தெரிந்தவர்களுக்கு உடனே ஷேர் பண்ணுங்க.
திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் சட்டம் ஒழுங்கு, போதைப் பொருட்கள் தடுப்பு, மற்றும் சாலை பாதுகாப்பு தொடர்பான ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் பிரதாப் தலைமையில் நடைபெற்ற இதில், போதைப் பொருட்கள் விற்பனை கண்காணிக்க நடவடிக்கை எடுக்கவும், விதிமுறைகள் மீறிய கடைகளின் உரிமம் ரத்து செய்யப்படும் என தீர்மானிக்கப்பட்டது.
திருவள்ளூர் மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் எம்.வெங்கடாசலபதி தலைமையில் திருவொற்றியூர் மற்றும் செங்குன்றம் பகுதிகளில் உள்ள நகை கடைகளில் ஆய்வு நடத்தப்பட்டது. 26 நகைக்கடைகளில் தராசுகள் மற்றும் எடைகளுக்கு முத்திரையிடப்படாததும், சான்று வழங்கப்படாததும் கண்டறியப்பட்டது. இதன் பேரில் கடை உரிமையாளர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
Sorry, no posts matched your criteria.