India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

செங்குன்றம், ஜி.எல்.பி புறவழிச்சாலையில் பழைய பத்திரப்பதிவு அலுவலகம் அருகே தனியார் வங்கியின் ஏ.டி.எம் மையம் செய்யப்பட்டு வருகிறது. நேற்று நள்ளிரவு இந்த ஏ.டி.எம் மையத்திற்குள் புகுந்த மர்ம நபர் ஒருவர், ஏ.டி.எம் இயந்திரத்தை கல்லால் உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டார். இதுகுறித்து விசாரணை நடத்திய செங்குன்றம் போலீசார் வடகரையை சேர்ந்த அலெக்ஸாண்டர் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவள்ளூர் நகராட்சிக்கு உட்பட்ட ராஜாஜிபுரம், பூங்கா நகர், காக்களூர் ஊராட்சிகள் உள்ளது. இந்த பகுதிகளில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்கிருந்து தினசரி ஏராளமானோர் அரசு, தனியார் நிறுவனங்களில் வேலைக்கு செல்கின்றனர். மினி பேருந்துகள் இயக்கினால் வேலைக்கு செல்கின்றவர்கள், மாணவ, மாணவிகள் என அனைவரும் பயனடைவார்கள். எனவே, பஸ் இயக்க வேண்டும்’என மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்

தமிழகத்தில் மக்களவை தேர்தல் (ஏப்.19) முடிவடைந்த நிலையிலும் 13 மாவட்டங்களில் மட்டும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன. அண்டை மாநிலங்களில் தேர்தல் நடைபெறும் நிலையில், அவற்றை ஒட்டியுள்ள எல்லையோர மாவட்டங்களில் மட்டும் பறக்கும் படைகளும், நிலைக்குழுக்களும் கண்காணிப்பில் ஈடுபட்டுவருவதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார். அதன்படி திருவள்ளூர் மாவட்டத்திலும் கண்காணிப்பு தொடர்கிறது.

பாடியநல்லூர் பெரியார் நகரை சேர்ந்தவர் சங்கர் கோவிந்தம்மாள் தம்பதியரின் மகன் சிவா (வயது 7). இவர் கடந்த சில நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதையடுத்து அவரது பெற்றோர்கள் அருகிலுள்ள மருந்தகத்தில் சிறுவனுக்கு மருந்து வாங்கி கொடுத்துள்ளனர். இந்நிலையில் நேற்று காலை சிறுவனுக்கு மீண்டும் காய்ச்சல் அதிகமாகி வீட்டிலேயே மயங்கி விழுந்து உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

செங்குன்றம், அண்ணா பேருந்து நிலையம் மற்றும் நேதாஜி நகர் உள்ளிட்ட இரு வேறு இடங்களில் கோடை வெயில் காரணமாக 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவரும், 55 வயதுடைய முதியவர் ஒருவரும் நேற்று மயங்கி விழுந்து உயிரிழந்தனர். மேற்கண்ட இருவரின் உடல்களை மீட்ட செங்குன்றம் போலீசார், பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இறந்தவர்கள் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொன்னேரி அடுத்த பழவேற்காடு செம்பாசிபள்ளி குப்பம் பகுதியை சேர்ந்தவர் ஆனந்தன் (26). இவர் நேற்று பெரியபாளையத்தில் உறவினரின் திருமணத்திற்கு சென்றுவிட்டு விடியற்காலை வீட்டிற்கு பைக்கில் பழவேற்காட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது பொன்னேரி அடுத்த பிரளயம்பாக்கம் சாலை கல்வெட்டில் மோதி பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார். இதுகுறித்து திருப்பாலைவனம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

பழவேற்காடு, கோட்டைக்குப்பத்தில் 82 பேரின் மீன் வலைகள் நேற்று முன் தினம் இரவு மர்மமான முறையில் எரிந்துள்ள நிலையில் அப்பகுதிக்கு பொன்னேரி எம்எல்ஏ துரை சந்திரசேகர் நேரில் சென்று எரிந்த மீன்வலைகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு ஆறுதல் கூறி மாவட்ட ஆட்சியர், மீன்வளத்துறை அதிகாரியிடம் இதுகுறித்து உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்வதாக தெரிவித்தார்.

பழவேற்காடு: கோட்டைக்குப்பம் மீனவ கிராமத்தில் பாதுகாப்பான இடத்தில் வைக்கப்பட்ட மீன்பிடி வலைகள் நேற்று அதிகாலை மர்மமான முறையில் தீப்பற்றி எரிந்தது. இதனை கண்ட மீனவர்கள் ஓடிவந்து தீயை அணைக்க முயன்றும் முடியவில்லை. இந்த விபத்தில் மீனவர்களின் வலைகள், மீன்பிடி உபகரணங்கள் உட்பட 15 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து நாசமாகின. இச்சம்பவம் குறித்து திருப்பாலைவனம் போலீசார் விசாரிக்கின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த தசரத நகரில் மரங்களின் காவலன் மற்றும் சிரிப்பு நடிகர் விவேக் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு நேதாஜி சோசியல் ஆர்க், மற்றும் மர வங்கி சார்பில் இயற்கை வளத்தினை பாதுகாக்கவும் காற்று மாசுபாட்டினை தடுக்கவும் மரக்கன்று நடும் நிகழ்வு நடைபெற்றது. இதில் நேதாஜி சோசியல் ஆர்க் மர வங்கி தலைவர் ஸ்ரீதர் பாபு மற்றும் உடன் ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்

பொன்னேரி அருகே உள்ள காட்டூர் கிராமத்தில் அமைந்துள்ள பழமை வாய்ந்த அருள்மிகு ஶ்ரீ செல்வ விநாயகர் திருக்கோவிலில் இன்று கும்பாபிஷேக விழா வெகு சிறப்பாக நடைபெற்றது முன்னதாக யாக கலச பூஜைகளுடன் மேளதாளங்கள் முழங்க கலசநீர் ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடத்தப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு விநாயகப் பெருமானை இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
Sorry, no posts matched your criteria.