India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

ஆவடி அருகே முத்தாபுதுப்பேட்டை கிருஷ்ணா நகை கடையில் ஏப்.16ஆம் தேதி 5 பேர் கொண்ட கும்பல் துப்பாக்கி முனையில் நகைகளை கொள்ளையடித்து தப்பி சென்றனர். கொள்ளையடிக்கப்பட்ட 2.5 கிலோ தங்கத்தில் 700 கிராம் தங்கம், 4 கிலோ வெள்ளி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட 8 குற்றவாளிகளில் 4 பேர் கைது செய்துள்ளனர். மேலும் 4 பேரை தேடி வருவதாக ஆவடி காவல் ஆணையாளர் சங்கர் தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர் அடுத்த தண்ணீர்குளம் தண்டலம் பகுதியைச் சேர்ந்தவர் அஜித் குமார் (27). தனியார் நிதி நிறுவன ஊழியரான இவரிடம் கடன் தவணை தருவதாக திருவள்ளூர் அடுத்த ICMR பகுதிக்கு வர வைத்து முகத்தில் மிளகாய் பொடி தூவி சரமாரியாக வெட்டி விட்டு மர்ம கும்பல் தப்பியுள்ளது. ஆபத்தான நிலையில் அஜித் குமார் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளார்.

திருவெற்றியூரில் உள்ள வடிவுடையம்மன் உடனுறை தியாகரஜசுவாமி கோவில், 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. அப்பர், சுந்தரர், சம்பந்தர் ஆகியோரால் தேவாரம் பாடப்பெற்ற தலமாகும். 7 அடுக்கு நுழைவாயில் கோபுரத்துடன் 1 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. 51 சக்தி பீடங்களில் ஒன்றானது இத்தலம் தொண்டைமண்டலத்தின் முக்கோண கோயிலில் ஒன்று. இங்கு கிடைத்த பல்லவர் கால கல்வெட்டுகள் இக்கோயிலின் வரலாற்றை பறைசாற்றுகின்றன.

திருவள்ளூர் ஆட்சியர் அலுவலகத்தில் நான் முதல்வன் திட்டத்தின்கீழ் 2023-24ஆம் கல்வியாண்டில் அரசு பள்ளிகளில் பயின்ற மாணவர்களை உயர்கல்வியில் சேர்ப்பதில் சிறப்பாக செயல்பட்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஷோபாவை பாராட்டி தமிழக அரசு சார்பில் உயர்கல்வி வழிகாட்டி விருது மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. இதை ஷோபா நேற்று திருவள்ளூர் ஆட்சியர் பிரபுசங்கரிடம் காண்பித்து வாழ்த்து பெற்றார்.

திருவள்ளூர் ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நான் முதல்வன் திட்டத்தின் கீழ் 2023-24 ஆம் கல்வியாண்டில் அரசு பள்ளிகளில் பயின்ற மாணவர்களை உயர்கல்வியில் சேர்ப்பதில் சிறப்பாக செயல்பட்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஷோபா அவர்களை பாராட்டி உயர்கல்வி வழிகாட்டி விருது மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டதை மாவட்ட ஆட்சித்தலைவர் பிரபுசங்கர் அவர்களிடம் காண்பித்து வாழ்த்து பெற்றார்.

திருவள்ளூர் மாவட்டம் பெருமாள்பட்டு தனியார் பள்ளியிலுள்ள வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையத்தை திருவள்ளூர் (தனி) நாடாளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரபுசங்கர் அவர்கள் இன்று (02.05.2024 ) பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் துறை சார்ந்த அலுவலர்களும் உடனிருந்தனர்.

பொன்னேரியை அடுத்த சிறுவாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் எஸ்.கோபால். இவரது தாயார் முத்தம்மாள் (72), வயது மூப்பின் காரணமாக இயற்கை எய்தினார். அவரது விருப்பத்தின்படி, அவரது உடல் திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லுாரிக்கு தானமாக மாணவர்களின் ஆய்விற்கு பயன்படுத்திக் கொள்ள அனுப்பிவைக்கப்பட்டது.

திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அடுத்த கல்பாக்கம் ஏரியில் தனியார் கல்லூரி இன்ஜினியரிங் மாணவர் கரண் (21) தனது நண்பர்களுடன் நேற்று ஏரியில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது ஆழமான பகுதிக்கு சென்ற கரண் சிறிது நேரத்தில் மாயமானார். நண்பர்கள் தேடியும் கிடைக்காததால் பொன்னேரி தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்ததன் பேரில் பொன்னேரி தீயணைப்பு துறையினர் தண்ணீரில் மூழ்கிய கரணை தேடி வருகின்றனர்.

வடசென்னை, அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம் சார்பில் கவுர நிதாய் ரத யாத்திரை திருநின்றவூரில் நேற்று இரவு வெகுவிமரிசையாக நடைபெற்றது. இந்த ரத யாத்திரையை சிடிஎச் சாலையில் திருநின்றவூர் நகராட்சித்தலைவர் உஷாராணி ரவி தொடங்கி வைத்தார். தொடர்ந்து, ரதம் திருநின்றவூர் மேம்பாலம், பெரியபாளையம் சாலை, கோமதிபுரம் பிரதான சாலை, கோமதிபுரம் 3வது குறுக்குத் தெரு வழியாகச் சென்று திருநின்றவூர் இஸ்கானை அடைந்தது.

திருவள்ளூர் மாவட்டம் பெருமாள்பட்டு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட தனியார் பள்ளியிலுள்ள வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையத்தில் இன்று “தொழிலாளர் தினத்தை” முன்னிட்டு தேர்தல் பணி மேற்கொள்ளும் காவல்துறையினர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பாக துறை சார்ந்த அலுவலர்களால் உணவு வழங்கப்பட்டது.
Sorry, no posts matched your criteria.