Thiruvallur

News September 30, 2025

BREAKING: எண்ணூரில் கோர விபத்து- 4 பேர் பலி

image

சென்னை எண்ணூர் அனல் மின் நிலையத்தில் கோரவிபத்து ஏற்பட்டு 4 வடமாநில தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். கட்டுமான பணியின்போது கம்பிகள் சரிந்து அசம்பாவிதம் ஏற்பட்டுள்ளது. மேலும் அந்த 4 பேரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

News September 30, 2025

திருவள்ளூர்: நீங்களும் இ-சேவை மையம் தொடங்கலாம்

image

இ-சேவை மையம் தொடங்க விருப்பமா? அதற்கு முதலில், www.tnesevai.tn.gov.in, என்ற தமிழக அரசின் இ-சேவை இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் 18 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். புகைப்படம், கல்வி சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், ஆதார் அட்டை, பான் கார்டு, வங்கிக் கணக்கு புத்தகம், வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்டவற்றை சமர்பித்து விண்ணப்பிக்கவும். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

News September 30, 2025

திருவள்ளூர்: B.E.,MBA போதும்.. ரூ.30,000 சம்பளம்

image

ஆவடியை தலைமை இடமாககொண்டு ராணுவ வாகனங்கள் தயாரிக்கும் நிறுவனம் செயல்படுகிறது. அங்கு காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணிக்கு B.E., MBA முடித்தவர்கள் இங்கு <>கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.30,000 சம்பளம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடைசி நாள் அக்.11-ம் தேதி ஆகும். (நல்ல சம்பளத்தில் வேலை தேடுபவர்களுக்கு SHARE பண்ணுங்க)

News September 30, 2025

திருவள்ளூர்: வீட்டு வரி கட்டுபவர்கள் கவனத்திற்கு

image

திருவள்ளூர் மக்களே வீட்டு வரி, குடிநீர் வரி செலுத்த நீங்கள் இனி எங்கும் போக வேண்டாம்! ஊரக வளர்ச்சித் துறையின் கீழ் உள்ள சொத்து வரி, நிலுவைத் தொகை என அனைத்தையும் வீட்டிலிருந்தே ஆன்லைனில் செலுத்தவும், செலுத்திய விவரங்களை பார்க்கவும் முடியும். இங்கு <>கிளிக் <<>>செய்து அனைத்து சேவைகளையும் பெறுங்கள். மேலும் விவரங்களுக்கு 98849 24299 எண்ணைத் தொடர்பு கொள்ளவும். (இத்தகவலை நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க)

News September 30, 2025

பாடியநல்லூரில் புதிய பேருந்து நிலையம்

image

பாடியநல்லூரில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை சார்பில் ரூ.10 கோடியே 96 லட்சம் மதிப்பில் சுமார் 1 ஏக்கர் பரப்பளவில் புதிதாக பேருந்து நிலையம் கட்டும் பணிக்கு அடிக்கல் நடும் நிகழ்வு நடைபெற்றது. இப்பணியை அமைச்சர் சேகர்பாபு கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். மேலும், இந்நிகழ்வில் கலெக்டர் மு.பிரதாப், மாதவரம் எம்எல்ஏ சுதர்சனம் ஆகியோர் பங்கேற்றனர்.

News September 30, 2025

திருவள்ளூர்: ரேஷன் பொருட்கள் தரமில்லையா?

image

திருவள்ளூர் மக்களே, நீங்கள் ரேஷன் கடையில் வாங்கும் பொருட்களின் தரத்தில் குறைபாடுகள் இருந்தால், ஊழியர் நேரத்திற்கு வரத் தவறினால் அல்லது கூடுதல் தொகை வசூலித்தால் கவலை வேண்டாம்! உங்கள் குறைகளைத் தெரிவிக்க இனி தயங்க வேண்டாம். உடனடியாகப் புகார் அளிக்க, இங்கே கிளிக் செய்யுங்கள். புகாரின் பேரில் சம்பந்தப்பட்ட ஊழியர் மீது அரசு நடவடிக்கை எடுக்கும் எனத் தெரிவித்துள்ளது. இந்த முக்கியத் தகவலை SHARE பண்ணுங்க

News September 30, 2025

திருவள்ளூர்: ரயில்வேயில் வேலை.. ரூ.35,400 சம்பளம்

image

திருவள்ளூர் மக்களே, இந்திய ரயில்வேயில் பணிபுரிய ஆசையா? தற்போது காலியாக உள்ள 368 ’Section Controller’ பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தா போதுமானது. மாதம் ரூ.35,400 சம்பளம் வழங்கப்படும். இதில் பணிபுரிய விருப்பமுள்ளவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்க இங்கே<> கிளிக்<<>> பண்ணுங்க. விண்ணப்பிக்க அக்.14-ம் தேதி கடைசி நாள். (SHARE பண்ணுங்க)

News September 30, 2025

திருவள்ளூர்: இன்று காலை 10 மணி வரை..!

image

தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் கணித்துள்ளது. அதன்படி, தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் திருவள்ளூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு இன்று காலை 10 மணி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. (திருவள்ளூர் மக்களே வெளியே செல்லும் போது குடையுடன் போங்க)

News September 30, 2025

திருவள்ளூர்: Whats’ App இருக்கா? SUPER தகவல்

image

அரசு சேவைகள் (ம) வங்கிப் பணிகளுக்கு அவசியமான ஆதார் அட்டையை இனி வாட்ஸ்அப் வழியாக பதிவிறக்கம் செய்யலாம். இதற்கு ‘MyGov ஹெல்ப் டெஸ்க்’ சாட்பாட் உதவுகிறது. பயனர்கள் 9013151515 என்ற எண்ணை தங்கள் தொடர்பில் சேர்த்து, சாட்பாட்டில் ‘டிஜிலாக்கர்’ சேவையை தேர்வு செய்ய வேண்டும். டிஜிலாக்கர் கணக்கு இல்லாதவர்கள் புதிய கணக்கு தொடங்கி, ஆதார் எண்ணை உள்ளிட்டு OTP மூலம் சரிபார்த்து, PDF வடிவில் பதிவிறக்கம் செய்யலாம்.

News September 30, 2025

திருவள்ளூர் கலெக்டர் எச்சரிக்கை

image

திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அக்டோபர் 2-ம் தேதியன்று மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபானக் கடைகளும் மூடப்படும் என அறிவித்துள்ளார். மேலும், உத்தரவை மீறும் கடைகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

error: Content is protected !!