India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருவள்ளூர் மாவட்ட விவசாயிகளுக்கான மாதாந்திர குறைதீர் கூட்டம், நாளை (பிப்.28) வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது. இந்த குறைதீர் கூட்டத்தில், விவசாய சங்க பிரதிநிதிகள், நிர்வாகிகள் மற்றும் விவசாய பெருமக்கள் அனைவரும் கலந்து கொண்டு தங்கள் பிரச்னைகள் மற்றும் கோரிக்கைகளை மனுக்களாகவும் நேரடியாகவும் தெரிவித்து பயன் பெறுங்கள் என மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் கேட்டுக் கொண்டுள்ளார். ஷேர் பண்ணுங்க
சென்னை சென்ட்ரலில் இருந்து கும்மிடிப்பூண்டிக்கு வரும், 18 புறநகர் ரயில்கள் வருகின்ற பிப்.27ஆம் தேதி முதல் மார்ச் 1ஆம் தேதி வரை 3 நாட்களுக்கு ரத்து செய்யப்படுவதாக தென்னக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி, 3 நாட்களும் காலை 9.15 மணி முதல் பிற்பகல் 3.15 வரை இயங்கும் மின் ரயில்கள் இயங்காது. அதேநேரம், பொன்னேரி வரை 8 சிறப்பு ரயில்களும், மீஞ்சூர், எண்ணூர் வரை தலா 4 மின்ரயில்களும் இயங்கும்.
பலத்த காயமடைந்த கிருஷ்ணமூர்த்திக்கு, சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதனையடுத்து, மகனை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை செய்த தாய் ஜெயந்தியை மப்பேடு காவல் துறையினர் கைது செய்தனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த கிருஷ்ணமூர்த்திக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளன.
திருவள்ளூர் அடுத்த தொடுகாடு நமச்சிவாயபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (27). இவர், தொழில் செய்வதற்காக தனது தாய் ஜெயந்தியிடம் தினமும் மது போதையில் வந்து பணம் கேட்டு தொந்தரவு செய்து வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. கடந்த 24ஆம் தேதி அவ்வாறு பணம் கேட்டு தகராறில் ஈடுபட்டபோது, மகன் மீது தாய் ஜெயந்தி பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொலை செய்துள்ளார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தொடுகாடு கிராமத்தில், கிருஷ்ணமூர்த்தி (27) வேலைவாய்ப்பின்றி தாய் ஜெயந்தியிடம் தொடர்ந்து பணம் கேட்டு தகராறாக மிரட்டினார். பணம் தர முடியாது என்ற தாயுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில், ஜெயந்தி கிருஷ்ணமூர்த்திக்கு பெட்ரோல் ஊற்றி தீவைத்து எரித்தார். காயமடைந்த கிருஷ்ணமூர்த்தி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார். மப்பேடு போலீசில் புகாரின் பேரில் ஜெயந்தி கைது செய்யப்பட்டார்.
திருவாலங்காடு அடுத்த முத்துக்கொண்டாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன். முன்னாள் ராணுவ வீரரான இவர், கடந்த சில தினங்களுக்கு முன்பு பைக்கில் சென்றபோது கார் மோதி உயிரிழந்தார். விசாரணையில், வெங்கடேசனை அவரது மனைவி சந்தியா, சகோதரர் சண்முகம் மற்றும் கள்ளக்காதலன் லோகேஷ் உள்ளிட்ட 8 பேர் உடன் இணைந்து கார் ஏற்றி ராடால் அடித்து கொலை செய்தனர். 8 பேரும் கைது செய்து செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
தொடுகாடு அடுத்த நமச்சிவாயபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (27. இவருக்கு, வேலை கிடைக்காததால் குடித்துவிட்டு ஊர்சுற்றி வந்துள்ளார். தொழில் தொடங்க பணம் கேட்டு தாய் ஜெயந்தி (45) உடன் அவ்வப்போது சண்டையிட்டு வந்துள்ளார். அவ்வாறு, கடந்த 24ஆம் தேதி பணம் கேட்டு சண்டையிட, தாய் ஆத்திரமடைந்து பெட்ரோல் ஊற்றி எரித்து மகனை கொலை செய்தார். இதுகுறித்த புகாரின் பேரில் தாய் கைது செய்யப்பட்டார்.
திருவள்ளூர் திருகண்டலதில் அமைந்துள்ளது அருள்மிகு சிவாநந்தீஸ்வரர் திருக்கோவில்.இக்கோவிலில் சிவ பெருமான், சக்தி தட்சிணாமூர்த்தியாக தனி சன்னதியில் இருக்கிறார்.பிரிந்து இருக்கும் தம்பதிகள் இங்கு கள்ளி மலர்கள் கொண்டு அர்ச்சனை செய்து வழிபட்டால் குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும்.திருமணத்தடைகள் நீங்கும், வறுமை நீங்கி செல்வ செழிப்பு உண்டாகும் என்பது நம்பிக்கை.நாளை சிவராத்திரிக்கு இங்கு ஒரு விசிட் அடியுங்கள்.
திருவள்ளூர் ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட அளவிலான விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் பிப். 28 தேதி நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் பிரதாப் அறிவித்துள்ளார். இதில் வேளாண்மை, தோட்டக்கலை, கால்நடை பராமரிப்பு, மீன்வளம், வங்கிகள், மின்வாரியம் உள்ளிட்ட துறை அலுவலர்கள் பங்கேற்கின்றனர். திருவள்ளூர் மாவட்ட விவசாயிகள் இதில் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும் என கலெக்டர் பிரதாப் அறிவித்துள்ளார். ஷேர் பண்ணுங்க.
ஊத்துக்கோட்டை அடுத்த எல்லம்பெட்டை கிராமத்தை ரவிச்சந்திரன்(35)- நாகேஸ்வரி(30) தம்பதிக்கு சாருலதா என்ற 2 மாத பெண் குழந்தை உள்ளது. நாகேஸ்வரி குழந்தைக்கு பால் கொடுத்தவாரே அசந்து துங்கியுள்ளார். நேற்று காலையில் எழுந்து பார்த்தபோது குழந்தை அசைவின்றி இருந்துள்ளது. பதறிபோன பெற்றோர் மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் தாய்ப்பால் குடிக்கும்போது மூச்சுத்திணறி குழந்தை இறந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.