Thiruvallur

News April 28, 2025

கொசஸ்தலை ஆற்றில் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

image

கனக்கம்மாச்சத்திரம் அடுத்த இலுப்பூர் கிராமத்தில் உள்ள கொசஸ்தலை ஆற்றில் குளிக்க சென்ற உள்ளியம்பாக்கம் பகுதியைச் சார்ந்த அரிபாபு என்ற இளைஞர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து கனக்கம்மாச்சத்திரம் காவல்துறையினர் பிரேதத்தை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உடற்கூர் ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

News April 28, 2025

திருவள்ளூர் ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

திருவள்ளூர் மாவட்ட பள்ளி மாணவ, மாணவியர்கள் விளையாட்டுத் துறையில் சாதனை படைப்பதற்கு ஏற்ப, விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் 28 இடங்களில் விளையாட்டு விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. இவ்விளையாட்டு விடுதியில் சேர விருப்பமுள்ள 7, 8, 9, 11-ஆம் வகுப்பு பயிலும் மாணவ மாணவிகள் <>இங்கு கிளிக் செய்து<<>> 05.05.2026 தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்கலாம் என  ஆட்சியர் தெரிவித்துள்ளார். *மாணவர்களுக்கு பகிரவும்*

News April 28, 2025

உங்க தாசில்தார் நம்பர் உங்ககிட்ட இருக்கா?

image

▶ஆர்.கே.பேட்டை தாசில்தார் – 9384094880, ▶ஆவடி தாசில்தார் – 9445461799, ▶திருவள்ளூர் தாசில்தார் – 9445000494, ▶பூந்தமல்லி தாசில்தார் – 9445000496, ▶ஊத்துக்கோட்டை தாசில்தார் – 9445000495, ▶கும்மிடிப்பூண்டி தாசில்தார் – 9445000491, ▶பொன்னேரி தாசில்தார் – 9445000490, ▶திருத்தணி தாசில்தார் – 9445000492, ▶பள்ளிப்பட்டு தாசில்தார் – 9445000493. சேமித்து வைத்து கொள்ளுங்கள். அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க

News April 28, 2025

சத்துணவு உதவியாளர் பணி: நாளை கடைசி

image

திருவள்ளூர் மாவட்டத்தில் காலியாக உள்ள 236 சமையல் உதவியாளர் பணி நிரப்பப்பட உள்ளன. பெண்கள் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும். 21 – முதல் 40 வயது வரை இருக்கலாம். கணவரை இழந்தவர்கள், கைவிடப்பட்டவர்களுக்கு முன்னுரிமை உண்டு. தமிழில் சரளமாக பேச தெரிந்திருக்க வேண்டும். விருப்பம் உள்ளவர்கள் இன்றைக்குள் இந்த <>லிங்கை <<>>க்ளிக் செய்து விண்ணப்பிக்க வேண்டும். சம்பளம் ரூ.3,000 – ரூ.9,000 வழங்கப்படும். ஷேர் செய்யுங்கள்

News April 28, 2025

ரயில்களை கவிழ்க்க தொடரும் சதி

image

திருவாலங்காடு அருகே கடந்த 25ஆம் தேதி நட்டு, போல்டை கழற்றி ரயிலை கவிழ்க்க சதி திட்டம் தீட்டப்பட்டது. அது முறியடிக்கப்பட்ட நிலையில், நேற்று (ஏப்ரல் 27) அரக்கோணம் தண்டவாளத்தில் 5 இடங்களில் கற்கள் வைக்கப்பட்டிருந்தது. நேற்று முந்தினம் (ஏப்ரல் 26) அம்பத்துார் – பட்டரைவாக்கம் ரயில் நிலையங்களுக்கு இடையே கற்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. மீண்டும் சதி திட்டம் தீட்டப்பட்டதா? என போலீசார் விசாரிக்கின்றனர்.

News April 28, 2025

மனைவி திட்டியதால் கணவன் தற்கொலை

image

ஆா்.கே.பேட்டை, பைவலசா கிராமம் தொம்பர காலனியைச் சோ்ந்தவா் முத்து (36). இவர், கட்டட வேலை, செங்கல்சூளை வேலை செய்து வந்தாா். நேற்று முன்தினம் (சனிக்கிழமை) இரவு 9 மணி அளவில் வேலைக்குச் செல்லாமல் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்துள்ளாா். இதனால் ஆத்திரமடைந்த மனைவி சுதா அவரைக் கண்டித்துள்ளாா். இதனால் மனமுடைந்த முத்து, அன்றிரவே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

News April 27, 2025

கோடை விடுமுறை: நீச்சல் குளத்தில் குவியும் மாணவர்கள்

image

திருவள்ளூர் மாவட்டத்தில், பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. கோடை விடுமுறையை கழிக்கவும், கொளுத்தும் வெயிலில் இருந்து தப்பிக்கவும், மாணவர்கள் திருவள்ளூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் உள்ள நீச்சல் குளத்தில் குவிந்து வருகின்றனர். இந்த நீச்சல் குளத்தில், நீச்சல் கற்றுக்கொள்ளும் திட்டத்தின் கீழ் பயிற்சி முகாம் கடந்த 1ஆம் தேதி முதல் தொடங்கியது. இதனால் காலை முதல் மாலை வரை கூட்டம் அலைமோதி வருகிறது.

News April 27, 2025

திருவள்ளூரில் உள்ள சிவன் கோயில்கள் பட்டியல்

image

▶பொன்னேரி அகத்தீஸ்வரர் திருக்கோயில்
▶தேவி கருமாரி அம்மன் திருக்கோயில்
▶ஊத்துக்கோட்டை பாபஹரேசுவரர் கோயில்
▶கண்ணம்பாக்கம் கைலாசநாதர் கோயில்
▶நசரத்பேட்டை காசிவிஸ்வநாதர் கோயில்
▶திருவாலங்காடு வடாரண்யேசுவரர் கோயில்
▶திருநின்றவூர் இருதயாலய ஈசுவரர் கோயில்
▶பாடியநல்லூர் திருநீற்றீசுவரர் கோயில்
▶கோயில்
▶பெரியபாளையம் ஐமுக்தீஸ்வரர் கோயில்
▶மாதர்பாக்கம் அஞ்சல் காசி விஸ்வநாதர் கோயில்

News April 27, 2025

ரயிலில் தனியாக பயணிக்கும் பெண்கள் கவனத்திற்கு

image

பாலியல் அத்துமீறல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதனால், ரயிலில் தனியாக பயணிக்கும் பெண்கள், ரயில்களில் அல்லது ரயில் நிலையங்களில் பாலியல் சீண்டல்களை எதிர்கொண்டால் 9962500500 என்ற எண்ணுக்கு உடனே அழைக்கவும். ரயில்வே காவல் உதவி எண் 1512 என்ற எண்ணுக்கும் தொடர்பு கொள்ளலாம். தனியாக செல்லும் பெண்கள் இந்த நம்பர்களை உங்கள் மொபைலில் கட்டாயம் வைத்து கொள்ளுங்கள். உங்கள் தோழிகளுக்கு ஷேர் பண்ணுங்க

News April 27, 2025

திருவள்ளூர் இரவு ரோந்து போலீசார் விவரங்கள் வெளியீடு

image

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

error: Content is protected !!