India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

ஆவடி காவல் ஆணையரகப் பகுதிகளில் கடந்த சில மாதங்களில் நடைபெற்ற 28 குற்ற வழக்குகளில் மீட்கப்பட்ட தங்க நகைகள் உள்ளிட்டவைகளை பொதுமக்களிடையே ஒப்படைக்கும் நிகழ்வு இன்று ஆவடியில் நடைபெற்றது. இதில் காவல் ஆணையர் கி.சங்கர் கலந்து கொண்டு 185 பவுன் தங்க நகைகள், 5 கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் 398 கைப்பேசிகளை உரியவரிடம் வழங்கினார். நிகழ்ச்சியில் காவல் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

ஆவடி அருகே முத்தாபுதுப்பேட்டையில் பிரகாஷ் என்பவர் நடத்தி வந்த நகைக்கடையில் கடந்த மாதம் 15 ஆம் தேதி மர்ம கும்பல் துப்பாக்கியால் மிரட்டி ரூ.1.50 கோடி மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர். இது தொடர்பாக போலீசார் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த 4 பேரை ஏற்கனவே கைது செய்து 88 பவுன் நகைகளை பறிமுதல் செய்தனர். இந்த நிலையில் இன்று அதே பகுதியைச் சேர்ந்த பஜன்லால் (26) என்பவரை கைது செய்துள்ளனர்.

செங்குன்றம் அருகே பாடியநல்லூரில் சின்னத்துரை என்பவர் புதிதாக கட்டி வரும் அடுக்குமாடி குடியிருப்பில் மேற்கு வங்காள மாநிலத்தைச் சேர்ந்த 5 பேர் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் அங்கு பணியாற்றி ரபிக் இஸ்லாம் (35) மதுபோதையில் 2-வது மாடியில் இருந்து நிலை தடுமாறி கீழே விழுந்ததில் தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே பலியானார். செங்குன்றம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவள்ளூர், திருவேற்காட்டில் அமைந்துள்ளது கருமாரியம்மன் கோயில். புராணக் கதைகளைக் கொண்ட இக்கோவிலில் அம்மன் நாகபுற்றுள் எழுந்தருளியுள்ளார். இக்கோயில், திருஞானசம்பந்தர் தேவாரம் தலத்தைப் பற்றிப் பாடியுள்ளார். அருணகிரிநாதரும் இத்தலம் குறித்து தனது பாடல்களில் பாடியுள்ளார். இங்கு பலரும் நேர்த்திகடன் செலுத்தி வேண்டுதலை நிறைவேற்றி வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று (மே.14) இரவு ரோந்துப் பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் விவரம் மற்றும் தொடர்பு கொள்ள கைப்பேசி எண்கள் வெளியிடப்பட்டு உள்ளது. பொதுமக்கள் குற்றச்சம்பவங்கள் மற்றும் அவசர உதவிக்கு மேற்கண்ட காவல் அதிகாரிகளை தொடர்புக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை திருவள்ளூர் மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது.

பூந்தமல்லி அருகே முகலிவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் தனியார் கம்பெனி ஊழியர் சீனிவாசன் (31). இதற்கிடையில் சீனிவாசன், தனது மனைவி பூஜா குமாரின் நகைகளை அடகு வைத்து ஆன்லைன் சூதாட்டம் விளையாடி பணத்தை இழந்துள்ளார். இந்த நிலையில் சீனிவாசன் இன்று காலை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். புகாரின் பேரில் மாங்காடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவேற்காடு, கீழ் அயனம்பாக்கம் பகுதியில் கடந்த 10-ஆம் தேதி தனியார் இன்டர்நெட் கேபிளை அமைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த அதிமுக முன்னாள் அமைச்சர் பா.பெஞ்சமின் அக்காவின் மகன் சந்திரகுமார் (30) நிறுவனத்தின் மேற்பார்வையாளர் பாலகிருஷ்ணனிடம் தகராறு செய்து அவரை இரும்புக் கம்பியால் தாக்கியுள்ளார். திருவேற்காடு போலீசார் நேற்று இரவு வழக்கு பதிந்து சந்திரகுமாரை தேடி வருகின்றனர்.

குமரிக்கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பரவலாக மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி மாலை 4 மணி வரை திருவள்ளூர் மாவட்டத்தில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பதினோராம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டன. திருத்தணி தளபதி கே.விநாயகம் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி மாணவி உமா மகேஸ்வரி 574, ஆபிநயா 568 மற்றும் மோனிகா 556 மதிப்பெண்களை பெற்று முதல் மூன்று இடங்களை பிடித்தனர். மேலும் 21 மாணவர்கள் நல்ல மதிப்பெண் பெற்று அசத்தியுள்ளனர். மாணவர்களுக்கு பள்ளி நிர்வாகம் சார்பில் வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்

11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவில், அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதத்தில் திருவள்ளூர் மாவட்டம் 36ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. மாவட்டத்தில் மொத்தமாக 75.51% தேர்ச்சி பதிவாகியுள்ளது. இதில் மாணவர்கள் 64.16 சதவீதத்தில் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவியர் 85.05 சதவீதத்தில் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.