Thiruvallur

News April 30, 2024

திருவள்ளூர் மாவட்டத்தின் நேற்றைய வெப்பநிலை

image

திருவள்ளூர், திருத்தணியில் நேற்று (ஏப்.29) 104.18 டிகிரி பாரன்ஹீட் பதிவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதிக வெப்ப அலை வீசக்கூடும் என்பதால், மக்கள் நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெளியில் செல்வதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், அடுத்த 4 நாட்களுக்கு வெப்பநிலை 2-3° செல்சியஸ் வரை உயர வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை, 39° – 43° செல்சியஸ் பதிவாகக்கூடும்.

News April 30, 2024

திருவள்ளூர்: போதை இளைஞர்கள் அட்டகாசம்

image

மாதவரம் பால்பண்ணை, மாத்தூர் எம்.எம்.டி.ஏ மூன்றாவது தெருவில் நேற்று மதியம் மதுபோதையில் வந்த 8-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் அப்பகுதியில் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களின் கண்ணாடிகள் மற்றும் வீட்டு ஜன்னல் கண்ணாடிகளை கல்லால் அடித்து பொதுமக்களை அச்சுறுத்தினர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

News April 30, 2024

திருவள்ளூர்: டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை

image

மே ஒன்றாம் தேதி தொழிலாளர் தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டத்தில் தமிழ்நாடு வாணிப கழகத்தின் கீழ் இயங்கும் மதுபான கடைகள் மற்றும் மதுபான விடுதிகள் ஆகியவற்றை நாள் முழுவதும் அடைக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. உத்தரவை மீறி செயல்படுபவர்கள் மீது சட்டப்பிரிவுகளுக்கு கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

News April 30, 2024

திருவள்ளூர்: போதை இளைஞர்கள் அட்டகாசம்

image

மாதவரம் பால்பண்ணை, மாத்தூர் எம்.எம்.டி.ஏ மூன்றாவது தெருவில் நேற்று மதியம் மதுபோதையில் வந்த 8-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் அப்பகுதியில் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களின் கண்ணாடிகள் மற்றும் வீட்டு ஜன்னல் கண்ணாடிகளை கல்லால் அடித்து பொதுமக்களை அச்சுறுத்தினர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

News April 29, 2024

திருவள்ளூர் நேற்றைய வெப்பநிலை விவரம்

image

திருவள்ளூர், திருத்தணியில் நேற்று (ஏப்.28) 105.8 டிகிரி பாரன்ஹீட் பதிவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனால் மக்கள் தங்களை வெயிலிலிருந்து பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அடுத்த இரண்டு தினங்களுக்கு வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News April 29, 2024

நீதித்துறையில் வேலை வாய்ப்பு

image

திருவள்ளூர் மாவட்ட நீதித்துறையில் 106 காலியிடங்கள் உள்ளன. கல்வித் தகுதி: 10ஆம் வகுப்பு தேர்ச்சி. வயது வரம்பு: ஜூலை 1ஆம் தேதி 2024 அன்று 32 வயதுக்குள் இருக்க வேண்டும். பணி இடங்கள் தொடர்பான கூடுதல் விவரங்களை https://www.mhc.tn.gov.in/recruitment/notification_dist தளத்தின் மூலம் அறிந்து கொள்ளலாம். இதற்கான விண்ணப்பங்களை மே 27ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

News April 29, 2024

மாதா கோவில் உண்டியலில் திருட முயற்சி

image

திருவள்ளூர் அடுத்த பெரியகுப்பம், எம்.ஜி.ஆர். நகர் அருகேயுள்ள புனித ஆரோக்கிய அன்னை மாதா ஆலயத்தில் இருந்த உண்டியலை சிலர் மர்ம நபர்கள் நேற்று நள்ளிரவு உடைக்க முயன்றுள்ளனர். ஆனால் உண்டியலை உடைக்க முடியாததால் ஆத்திரமடைந்த திருடர்கள் மாதா சிலையின் மீது பெரிய கல்லை வீசி உடைத்து விட்டு சென்றுள்ளனர். இதுகுறித்த திருவள்ளூர் நகர காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.

News April 29, 2024

வெயில் காரணமாக வாழை இலைகள் விலை இரட்டிப்பு

image

பள்ளிப்பட்டு (ம) சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் அதிகளவில் வாழை தோட்டம் சாகுபடி செய்து வருகின்றனர். இதனால் மேற்கண்ட பகுதியிலிருந்து திருமணம், சுப நிகழ்ச்சிகளுக்கு வாழைமரம், வாழை இலை, பழம் உள்ளிட்டவற்றை மொத்தமாக பொதுமக்கள் வாங்கி செல்கின்றனர். இந்நிலையில் தற்போது கோடை வெயில் காரணமாக வாழை செடிகள் காய்ந்து இலைகள் கருகி வருவதால் வாழைப்பழம், இலை ஆகியவற்றின் விலை இரட்டிப்பாக உயர்ந்துள்ளது.

News April 29, 2024

ஆவடி கொலையில் செல்போன் பறிமுதல்

image

ஆவடி அடுத்த மிட்டனமல்லியில் நேற்றிரவு முன்னாள் ராணுவ வீரரும், அவரது மனைவியும் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அபகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் தற்போது செல்போன் ஒன்று பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த மகேஷ் என்பவரிடம் காவல் துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

News April 29, 2024

உறைய வைத்த இரட்டை கொலை பரபரப்பு 

image

மிட்டனமல்லியில் வசித்து வந்த முன்னாள் ராணுவ வீரர் சிவன் நாயர் (68), அவரது மனைவி பிரசன்னா (63) ஆகியோர் நேற்று வீடு புதுந்து கழுத்தை அறுத்து படுகொலை செய்யப்பட்டுள்ளனர். நேற்று மாலை அவரது வீட்டிற்கு சிகிச்சை பார்ப்பது போல் வந்த நபர்கள் இருவரையும் கொடூரமாக கொலை செய்து தப்பித்தனர். தடையங்களை சேகரித்து போலீசார் கொலையாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!