India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருத்தணி – அரக்கோணம் புதிய புறவழிச்சாலை அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவர், நேற்று (மார்.12) காலை மண்டபத்தில் உள்ள கழிப்பறைக்கு சென்றார். அங்கு 4 அடி நீளமுள்ள கண்ணாடி விரியன் பாம்பு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார். தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து கண்ணாடி விரியன் பாம்பை உயிருடன் மீட்டனர்.
ஒடிசாவை சேர்ந்த ராஜ்குமார்(35). கடந்த 2018-ம் ஆண்டில் ராஜ்குமார் தனது மனைவியின் சகோதரிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார் இதில் சிறுமி கர்ப்பமாகியுள்ளார். இதுகுறித்த புகாரின் அடிப்படையில், எண்ணூர் மகளிர் காவல் நிலைய போலீஸார் போக்சோ சட்டத்தின் வழக்கு பதிந்தனர்.இந்நிலையில் கடந்த 8 வருடங்களுக்கு பிறகு திருவள்ளூர் மாவட்ட சிறப்பு நீதிமன்றம் ராஜ்குமார்க்கு ஆயுள் தண்டனை வழங்கியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருப்பாச்சூரில் நாடாளுமன்றத் தொகுதி மறுசீரமைப்பு – இந்தித் திணிப்பு என்று தமிழ்நாட்டின் உரிமைகளுக்கு எதிராகச் செயல்படும் ஒன்றிய பா.ஜ.க. அரசுக்கு எதிரான தமிழ்நாடு போராடும் தமிழ்நாடு வெல்லும்! கண்டனப் பொதுக்கூட்டம் இன்று மாலை நடைபெற்றது. இந்த பொதுக் கூட்டத்தில் ஏராளமான கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர். ட்ரோன் காட்சிகளை மேலே உள்ள புகைப்படத்தில் காணலாம்.
திருவள்ளூர் அடுத்த திருப்பாச்சூரில் நாடாளுமன்றத் தொகுதி மறுசீரமைப்பு – இந்தித் திணிப்பு என்று தமிழ்நாட்டின் உரிமைகளுக்கு எதிராகச் செயல்படும் ஒன்றிய பா.ஜ.க. அரசுக்கு எதிரான தமிழ்நாடு போராடும் தமிழ்நாடு வெல்லும்! கண்டனப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு வெள்ளி செங்கோல் நினைவு பரிசாக அமைச்சர் ஆவடி நாசர் சட்டமன்ற உறுப்பினர்கள் இணைந்து வழங்கினர்.
எண்ணூர் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சகோதரி கணவருக்கு ஆயுள் தண்டனை விதித்து, திருவள்ளூர் மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. 2018ஆம் ஆண்டு ராஜ்குமார் தன் மனைவியின் சகோதரிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். புகாரின் அடிப்படையில், அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கில் தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
முதல்வர் ஸ்டாலின் வருகையையொட்டி, திருவள்ளூர் வட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று (மார்.12) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர் பங்கேற்கும் கூட்டம் நடைபெற உள்ளதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை தவிர்க்கும் விதமாக திருவள்ளுர் வட்டடத்தில் உள்ள பள்ளிகளுக்கு மதியம் 3 மணிக்கு மேல் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு சென்று அழைத்து வந்துவிடுங்கள்.
தமிழ்நாடு அரசு Mobile App Developer பணிக்கு இலவச படிப்பை வழங்குகிறது. இந்த படிப்பு மூலம் செயலிகளை உருவாக்குவும், செயல்படுத்தவும் முடியும். 12ஆம் வகுப்பு முடித்திருந்தாலே போதும். 18 வயதுக்கு மேற்பட்ட யார் வேண்டுமானாலும் கற்றுக்கொள்ளலாம். இதன்மூலம் ரூ.35,000 – ரூ.45,000 வரை சம்பளத்தில் வேலை கிடைக்கும். GRIT Talents, Gradianty, AIRNODE UK, IBM, Brainhunters MY ஆகிய நிறுவனங்களில் <
மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்தவர்கள் பாபி காஜ்டி, 30, டபாஸ், 24. இருவரும் செம்பரம்பாக்கம் கிராமத்தில் தங்கி, கட்டட வேலை செய்து வந்தனர்.இருவரும் நேற்று முன்தினம் இரவு செம்பரம்பாக்கம் பகுதியில் சாலையை கடக்க முயன்றனர். அப்போது, அவ்வழியே சென்ற தனியார் தொழிற்சாலை பஸ் அவர்கள் மீது மோதியது. இதில் அடிபட்டு, இருவரும் சம்பவ இடத்திலேயே இறந்தனர். இதையடுத்து பேருந்து ஓட்டுநர் சங்கரை ஆவடி போலீசார் கைது செய்தனர்.
இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் செயல்படும் அருள்மிகு ராமநாதசுவாமி திருக்கோயிலில் பல்வேறு பதவிகளுக்கான காலிப்பணியிடங்கள் மார்ச் 12ம் தேதி வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.பல்வேறு பதவிகளில் மொத்தம் 76 காலிப்பணியிடங்கள் உள்ளன.18-45 வயதுக்குள் இருக்க வேண்டும்.இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் இந்து மதத்தை சார்ந்தவரக இருக்க வேண்டும்.ரூ.10,000 முதல் ரூ.50,400 வரை மாத சம்பளம். இந்த லிங்கை <
தண்டலச்சேரி கிராமத்தில் வசித்தவர் ரமேஷ்பாபு, 57. நேற்று முன்தினம் நள்ளிரவு, வீட்டின் சிலாப்பில் இருந்த பொருளை எடுப்பதற்காக, கட்டில் மீது ஏறினார்.அப்போது, தவறி விழுந்தவரின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சுயநினைவு இழந்துள்ளார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு, அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்,இதுகுறித்து போலீசார் விசாரணை.
Sorry, no posts matched your criteria.