Thiruvallur

News October 2, 2025

திருவள்ளூர்: அரசு அதிகாரிகள் லஞ்சம் கேட்டால் இதை பண்ணுங்க!

image

அரசு அதிகாரிகள் லஞ்சம் கேட்டால், ஆடியோ/வீடியோ ஆதாரங்களை (உரையாடல், தேதி, நேரம், பெயர், பதவி) சேகரிக்கவும். பின்பு, தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு துறையை 044-22310989 / 22321090 என்ற தொலைபேசி எண்கள் மூலமாகவோ, அல்லது <>இணையதளம்<<>> மூலமாகவோ அணுகி புகார் அளியுங்கள். திருவள்ளூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு அலுவலகத்திலோ அல்லது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலோ நேரில் சென்றும் புகார் செய்யலாம். ஷேர் பண்ணுங்க!

News October 2, 2025

திருவள்ளூர்: குறைகளை இதில் புகார் அளிக்கலாம்

image

திருவள்ளூர் மாவட்ட பொதுமக்கள், தங்கள் பகுதிகளில் உள்ள குறைகளை ‘TN SMART’ இணையதளத்தில் புகாராக பதிவு செய்யலாம். இதற்கு, ‘புகார் பதிவு’ என்பதை <>க்ளிக் <<>>செய்து, உங்கள் பெயர், முகவரி, மொபைல் எண், புகார் விவரம் மற்றும் அதன் புகைப்படத்தை சமர்ப்பிக்கவும். அவசர நிலைகளுக்கு 1077-ஐ அழைக்கவும். உங்கள் புகாரின் நிலை மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் தெரிந்து கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க

News October 2, 2025

திருவள்ளூர்: பிஸ்னல் ஆசையா? சூப்பர் மானியங்கள்

image

திருவள்ளூர் மக்களே பிஸ்னஸ் செய்ய ஆசையா? தமிழக அரசின் பல்வேறு மானியம் திட்டங்கள் உள்ளன. 1)ஆவின் பால் கடை வைக்க மானியம்: https://tahdco.com/. 2)இளைஞர்கள் தொழில் தொடங்க மானியம்: https://msmeonline.tn.gov.in/uyegp. 3)முதல்வர் மருந்தகம் வைக்க மானியம்: https://mudhalvarmarundhagam.tn.gov.in/. 4)ஆடு, கோழி பண்ணை மானியம் (அருகே உள்ள கால்நடை மருத்துவமனையை அணுகவும்) (SHARE பண்ணுங்க)

News October 2, 2025

திருவள்ளூர்: கேஸ் மானியம் ரூ.300 பெறுவது எப்படி?

image

கேஸ் மானியம் ₹300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர, எல்பிஜி இணைப்பை ஆதார் அட்டையுடன் இணைக்க வேண்டும். உங்கள் கேஸ் வழங்குநரின் (Indane, HP, Bharat) இணையதளத்திற்குச் சென்று, ‘Link Aadhaar’ விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும். நுகர்வோர் எண், மொபைல் எண், ஆதார் ஆகிய விவரங்களை உள்ளிட்டு, OTP மூலம் இணைப்பை உறுதி செய்யலாம். இதன் மூலம் வீட்டில் இருந்தபடியே மானியத்தைப் பெறலாம். (SHARE பண்ணுங்க)

News October 2, 2025

திருவள்ளூர்: ரயில்வேயில் வேலை.. ரூ.35,400 சம்பளம்

image

திருவள்ளூர் மக்களே, இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள 8850 டிக்கெட் சூப்பர்வைசர், ஸ்டேஷன் மாஸ்டர், சீனியர் கிளர்க் உள்ளிட்ட பதவிகளுக்கான காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 12th,ஏதேனும் ஓர் டிகிரி என அந்தந்த பணிகளுக்கேற்ப கல்வித் தகுதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கு அக்.21-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம். இதுகுறித்த அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு<> இங்கே <<>>கிளிக் பண்ணுங்க.(SHARE)

News October 2, 2025

திருவள்ளூர் மக்களே இது தெரியுமா?

image

தமிழ்நாட்டின் வடக்கு பகுதியில் ஆந்திர எல்லையில் அமைத்துள்ள திருவள்ளூர் பல மொழிகள், மதம், பண்பாடு என பன்முக தன்மையோடு விளங்குகிறது. புலிகாட் ஏரி, டச்சு கல்லறை, குடியம் குகைகள் என தனக்கென சிறப்பான இடங்களை கொண்ட திருவள்ளூர் தமிழகத்தின் கலாச்சார நுழைவு வாயிலாகவும் உள்ளது. இங்குள்ள பூண்டி நீர்த்தேக்கம் தான் சென்னையின் நீர் தேவையில் பெரும் பங்கு வகிக்கிறது. நம்ம மாவட்ட பெருமைகளை ஷேர் பண்ணுங்க.

News October 2, 2025

திருவள்ளூர் மக்களே பணம் போகும்! உஷார்

image

திருவள்ளூர் சைபர்கிரைம் போலீசார் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதில், What’s App, SMS மூலம் போக்குவரத்து விதிமுறை அபராதம் எனகூறி வரும் போலி இ-சலான் செய்திகள் மீது நம்பிக்கை வைக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இத்தகைய SMS-ல் உள்ள இணைப்புகளை அழுத்தினால் வங்கி கணக்குகள் காலியாகும் அபாயம் உள்ளது. எனவே உஷாராக இருக்க வேண்டும் என்றனர். (ஏமாற்றத்திற்குள்ளானவர்கள் 1930க்கு புகாரளிக்கலாம்)

News October 2, 2025

திருவள்ளூர் இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்!

image

திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News October 1, 2025

எண்ணூர்: விபத்து நடந்த இடத்தை பார்வையிட்ட அமைச்சர்கள்

image

எண்ணூர் அனல்மின் நிலையத்தில் BHEL நிறுவனம் மேற்கொண்டு வரும் மின் உற்பத்தி நிலையக் கட்டுமானப் பணியில் ஏற்பட்ட விபத்தில், அசாம் மாநிலத்தைச் சேர்ந்த 9 பணியாளர்கள் இறந்த நிலையில் விபத்து நடைபெற்ற பகுதியில் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர், மிண்துறை மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் S.S சிவசங்கர் ஆகியோர் பார்வையிட்டனர்.

News October 1, 2025

ஆவடியில் இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்!

image

ஆவடியில் இன்று (அக்.1) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!