Thiruvallur

News April 25, 2025

வேலைக்கு போகும் பெண்களுக்கு தனி குழு

image

பணிபுரியும் இடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் உள்ளூர் குழு உருவாக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் பணிபுரியும் பெண்கள் இதற்கென தனியாக அமைக்கப்பட்ட குழு உறுப்பினர்களை 8939992763, 6382711422, 988426931, 8667691638, 9150058095 எண்களில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். வேலைக்கு செல்லும் தோழிகளுக்கு ஷேர் பண்ணுங்க

News April 25, 2025

திருவள்ளூர் ஆட்சியரகத்தில் ரூ.1.70 கோடியில் படிப்பகம் 

image

திருவள்ளூர் கலெக்டர் அலுவலக நுழைவுவாயிலில் வலதுபுறம் 1.70 கோடி ரூபாய் மதிப்பில் படிப்பகம் அமைக்கப்பட உள்ளது. போட்டி தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள், அமைதியான சூழலில் அவர்களின் சிந்திக்கும் திறன் மற்றும் பல்வேறு கல்வி சார்ந்த உரையாடல்களை மேம்படுத்துவதற்காக இப்படிப்பகம் அமைக்கப்பட உள்ளது என மாவட்ட கலெக்டர் மு பிரதாப் தெரிவித்தார். *போட்டி தேர்வு மாணவர்களுக்கு பகிரவும்*

News April 25, 2025

திருவள்ளூரில் சாலை விழிப்புணர்வு பூங்கா

image

திருவள்ளூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் 3.99 கோடி ரூபாயில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பூங்கா மற்றும் படிப்பகம் அமைக்கப்படுகிறது. 2.29 கோடியில் பூங்கா, 1.70 கோடியில் படிப்பகம் உருவாகும். இதில் செயற்கை குளங்கள், அடர்வனம், நடைபாதை, விளையாட்டு உபகரணங்கள், அறிவியல் உபகரணங்கள், வாசிப்பு வசதிகள் ஏற்பாடு செய்யப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News April 25, 2025

திருவள்ளூர்: ஆற்றில் மூழ்கி 3 பேர் பலி

image

திருவள்ளூர், பூந்தமல்லி சவிதா பிசியோதெரவி கல்லூரி மாணவர்கள் கோவை ஆழியார் பகுதிக்கு சுற்றுலா சென்றனர். அப்போது, எதிர்பாராத விதமாக தருண், ரேவந்த், ஆண்டோ ஜெனிப் ஆகிய 3 பேர் ஆழியார் ஆற்றில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் கல்லூரி மாணவர்களிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. *முன் பின் தெரியாத இடத்தில் உள்ள நீர்நிலைகளில் குளிக்கும் போது கவனம் முக்கியம் என நண்பர்களுக்கு அறிவுறுத்துங்கள்*

News April 25, 2025

திருவள்ளூரில் நெடுஞ்சாலை மேம்பாட்டு பணிகள் வேகம்

image

ஊத்துக்கோட்டை – திருவள்ளூர் மார்க்கத்தில், 2.6 கி.மீ.,க்கு சாலை அகலப்படுத்தும் பணி, 19.50 கோடி ரூபாய் மதிப்பில் நடைபெற்று வருகிறது. சித்துார் – திருத்தணி மாநில நெடுஞ்சாலை நான்கு வழிச்சாலையாக மாற்றும் பணி படிப்படியாக நடந்து வருகிறது. காரனோடை பஜாரில் இருந்து சோழவரம் செங்காளம்மன் கோவில் அருகில், தேசிய நெடுஞ்சாலையை இணைக்கும் வகையில், 5 கி.மீ., தூரத்திற்கு, 15 கோடி ரூபாயில் சாலை அமைக்கப்படுகிறது.

News April 25, 2025

திருவள்ளூர் பிரதோஷ வழிபாடு நடைபெறும் கோவில்கள்

image

இன்று பிரதோஷ வழிபாடுகள் நடைபெறும் கோவில். திருவள்ளூர் பஞ்சவர்ணேஸ்வரர் கோவில், பூங்கா நகர் சிவ-விஷ்ணு கோவில், தேரடி தீர்த்தீஸ்வரர் கோவில், பெரியகுப்பம் ஆதிசோமஸ்வரர் கோவில்,பூண்டி அக்னீஸ்வரர் கோவில், தொட்டிக்கலை சிதம்பரேஸ்வரர் கோவில், பள்ளிகொண்டீஸ்வரர் கோவில், தாராட்சி பரதீஸ்வரர் கோவில், தேவந்தவாக்கம் தேவநாதீஸ்வரர் கோவில். நேரம் மாலை 4.30. இதில் பங்கேற்றால் பல நன்மைகள் கிட்டும். நண்பருக்கு பகிரவும்

News April 25, 2025

திருவள்ளூர் இரவு ரோந்து போலீசார் விவரங்கள் வெளியீடு

image

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

News April 24, 2025

திருவள்ளூர் அரசு நிறுவன எண்களை சேவ் பண்ணிக்கோங்க.

image

திருவள்ளூர் தலைமை அஞ்சலகம்-044-27660233, அம்பத்தூர் அஞ்சலகம்-044-26245533, திருவள்ளூர் தலைமை மருத்துவமனை-044-27660242, திருத்தணி மருத்துவமனை-044-27880588, அலகாபாத் வங்கி-9824899942, கனரா வங்கி-9444722761, இந்தியன் வங்கி-9444987061, IOB-9600167604, SBI-9600070941,திருத்தணி அரசு கல்லூரி-044-27885212, திருவள்ளூர் ஆசிரியர் பயிற்சி நிறுவனம்-044-27620239. *கட்டாயம் உதவும். நண்பர்களுக்கும் பகிருங்கள்*

News April 24, 2025

திருவள்ளூரில் கிராம சபை கூட்டம் அறிப்பு

image

திருவள்ளூர் மாவட்ட அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் உள்ள ஊராட்சிகளில் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு 01.05.2025 அன்று காலை 11 மணியளவில் கிராமசபை கூட்டம் நடைபெற உள்ளது. இதில் கிராமம் சம்பந்தப்பட்ட கணக்கு வழக்கு மற்றும் புதிதாக அமைக்கப்பட உள்ள வேலை பற்றி தீர்மானம் நிறைவேற்றப்படும். இக்கூட்டத்தில் கிராம மக்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார். *தெரிந்தவர்களுக்கு பகிரவும்*

News April 24, 2025

திருவள்ளூரில் கிராம சபை கூட்டம் அறிப்பு

image

திருவள்ளூர் மாவட்டம் அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் உள்ள ஊராட்சிகளில் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு 01.05.2025 அன்று காலை 11 மணியளவில் கிராமசபை கூட்டம்நடைபெற உள்ளது. இதில் கிராமம் சம்பந்தப்பட்ட கணக்கு வழக்கு மற்றும் புதிதாக அமைக்கப்பட உள்ள வேலை பற்றி தீர்மானம் நிறைவேற்றப்படும். இக்கூட்டத்தில் கிராம மக்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

error: Content is protected !!