India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பயன்பெறும் PHH / AAY குடும்ப அட்டை பயனாளிகளின் விவரங்களை பதிவேற்றம் செய்ய மத்திய அரசால் அறிவுறுத்தப்படுவதால் திருவள்ளூர் மாவட்டத்திற்கு உட்பட்ட நியாய விலை கடைகளில் 21% குடும்ப உறுப்பினர்களின் விபரங்கள் பதிவு செய்யப்பட்டமால் உள்ளது. எனவே குடும்ப அட்டைதாரர்கள் விரல் ரேகையினை நியாயவிலை கடையில் மார்ச் 10ம் தேதிக்குள் பதிவேற்றம் செய்யுமாறு ஆட்சியர் அறிவித்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கத்தில் இன்று மாவட்ட ஆட்சியர் பிரதாப் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளி பயனாளிகளிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்டு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இதில் ஏராளமான மாற்றுத்திறனாளி பயனாளிகள் கலந்து கொண்டு மனு கொடுத்தனர்.
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கத்தில் இன்று (03.02.2025) நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 2024-25 ஆம் ஆண்டு நிதியாண்டிற்கு 5 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு ரூ.5,09,000 மதிப்பீட்டில் இணைப்புச் சக்கர பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டரை மாவட்ட ஆட்சித் தலைவர் மு. பிரதாப் வழங்கினார். உடன் பல்வேறு துறை அலுவலர்கள் உள்ளனர்.
சென்னை. செங்கல்பட்டில் உள்ள கிளை போஸ்ட் மாஸ்டர், உதவி கிளை போஸ்ட் மாஸ்டர் பதவிகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். 91 பணியிடங்கள். கணினி அறிவு, சைக்கிள் ஓட்ட தெரிந்திருக்க வேண்டும். 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும். போஸ்ட் மாஸ்டருக்கு ரூ.12,000 – ரூ.29,380, உதவி போஸ்ட் மாஸ்டருக்கு ரூ.10,000-ரூ.24,470 வரை சம்பளம். இன்றைக்குள் (மார்.3) இந்த <
ஊத்துக்கோட்டை, பெரியபாளையம் அருகே கொசவன்பேட்டை பேருந்து நிலையம் அருகே அடையாளம் தெரியாத 70 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கிடப்பதாக அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தன. இதையடுத்து பெரியபாளையம் போலீசார் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இச்சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதி பரப்பரப்பாக காணப்பட்டது.
திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு ஏழைகளின் சுற்றுலா தளங்களில் ஒன்று. அங்கு 1700 இல் டச்சுக்காரர்களின் கல்லறை உள்ளது. அதில் பல்வேறுபட்ட வசனங்கள் எழுதப்பட்டுள்ளன. இங்கிருந்து, நெதர்லாந்து சென்ற டச்சு குடும்பத்தை சார்ந்தவர்கள் Google மூலம் தனது மூதாதையர்கள் வாழ்க்கை வரலாற்றை படித்து, பழவேற்காட்டில் மிகவும் பழமை வாய்ந்த டச்சு கல்லறைகள் உள்ளது என்று வந்து அந்த இடத்தை பார்வையிட்டனர்.
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி கும்மிடிப்பூண்டிக்கு புதிதாக இரு ரயில்கள் இயக்கப்படும் என சென்னை ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது. சென்னை சென்ட்ரல், கடற்கரையிலிருந்து செங்கல்பட்டு, ஆவடி, கும்மிடிப்பூண்டி வழித்தடத்தில் 5 முதல் 10 நிமிடங்களுக்கு ஒரு மின்சார ரயில் இயக்கப்படுகிறது. இந்நிலையில், சென்னை சென்ட்ரலிலிருந்து ஆவடி மற்றும் கும்மிடிப்பூண்டிக்கு புதிதாக இரு மின்சார ரயில்கள் விடப்படும்.
திருவள்ளூர் மாவட்டம், மணவூர் கிராமத்தில் ஆதி காமாட்சி அம்மன் சமேத கற்கடேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. திங்கட்கிழமைகளில், தொடர்ச்சியாக 9 வாரங்கள் இத்தலம் வந்து, இறைவனுக்கு வெல்லம் வைத்து வழிபாடு செய்தால், புற்றுநோய் தாக்கம் குறையும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது. இந்த ஆலயம் தினமும் காலை 9 மணி முதல் பகல் 12 மணி வரை திறந்து வைக்கப்பட்டிருக்கும். ஷேர் பண்ணுங்க.
சென்னை. செங்கல்பட்டில் உள்ள கிளை போஸ்ட் மாஸ்டர், உதவி கிளை போஸ்ட் மாஸ்டர் பதவிகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். 91 பணியிடங்கள். கணினி அறிவு, சைக்கிள் ஓட்ட தெரிந்திருக்க வேண்டும். 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும். போஸ்ட் மாஸ்டருக்கு ரூ.12,000 – ரூ.29,380, உதவி போஸ்ட் மாஸ்டருக்கு ரூ.10,000 – ரூ.24,470 வரை சம்பளம். நாளைக்குள் (மார்.3) இந்த லிங்கை <
Sorry, no posts matched your criteria.