India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சென்னையில் பல் மருத்துவத்தில் உதவி அறுவை சிகிச்சை நிபுணர் (Assistant Surgeon -Dental) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 47 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இதற்கு ரூ.56,100 முதல் ரூ.2,05,700 வரை சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பிக்க கடைசி நாள் மார்ச்.17. இதற்கு BDS முடித்திருக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு இங்க <
திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
திருவள்ளூர் மாவட்டம் வெங்கத்தூரில் பிரசித்திபெற்ற ஸ்ரீ ஆகாஸ பைரவர் ஆலையம் உள்ளது. இந்த கோவிலின் சிறப்பே அஷ்ட பைரவர்கள் எட்டு பைரவர்கள் உள்ளனர். ஒரே இடத்தில் இந்த 8 பைரவர்களை தரிசனம் செய்யும் அற்புத தலமாக உள்ளது. மேலும், தொலைந்த பொருளை மீட்க, செல்வம் பெருக இங்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றப்படுகிறது. மேலும் திருமணத்தடை நீங்க ஞாயிறு அன்று ராகு காலத்தில் விபூதி அபிஷேகம் செய்யப்படுகிறது. ஷேர் பண்ணுங்க.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள், இ-சேவை மையங்களில் தனித்துவ அடையாள எண் பெற விண்ணப்பிக்கலாம். வேளாண் அடுக்ககம் திட்டத்தின் கீழ் விவசாயிகளின் தரவுகளை சேகரித்து 33,710 விவசாயிகளுக்கு இதுவரை அடையாள எண் வழங்கப்பட்டுள்ளது. விவசாயிகள் வரும் மார்ச் 31ஆம் தேதிக்குள் பட்டா, ஆதார் எண்ணுடன் இ-சேவை மையங்களில் பதிவு செய்து எண் பெறலாம். இவற்றை பெறாத விவசாயிகளுக்கே நிவாரண உதவிகள் வழங்கப்படும்.
மது பாட்டில்களை தினமும் ஸ்கேன் செய்து விற்பனை செய்ய கையடக்க வடிவில், ‘பார்கோடு ரீடர்’ கருவிகளும், பிரின்டர் கருவிகளும் வழங்கப்பட்டுள்ளன. கருவியில் மதுபாட்டில் மேல் உள்ள க்யூ.ஆர். குறியீடை ‘ஸ்கேன்’ செய்யும்போது, சில நேரங்களில் தொழில்நுட்ப கோளாறால் ஸ்கேன் ஆவதில்லை. இதனால் விற்பனை தாமதப்படுகிறது. எனவே, கணினி மையத்தை தரம் உயர்த்த வேண்டும் என திருவள்ளூர் டாஸ்மாக் ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள ஆயுர்வேதா, சித்தா, யுனானி ஆகிய இந்திய மருத்துவ துறைகளில் காலியாக உதவி மருத்துவ அலுவலர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. அதிகபட்சமாக 59 வயது வரை இருக்கலாம். தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு ரூ.56,100 முதல் ரூ.1,77,500 வரை சம்பளம் வழங்கப்படும். தகுதியும், ஆர்வமும் உள்ளவர்கள் <
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 109 மையங்களில், நேற்று (மார்.3 பிளஸ் 2 பொதுத்தேர்வு தொடங்கியது. முதல் நாள் மொழிப்பாட தேர்வில் 27,836 பேரில், 27,554 பேர் தேர்வு எழுதினர். 282 மாணவர்கள் தேர்வில் பங்கு பெறவில்லை. அதேப்போல, 600 தனித்தேர்வர்களில் 537 பேர் பங்கேற்றனர். அவர்களில் 63 பேர் தேர்வில் பங்குபெறவில்லை. ஒட்டு மொத்தமாக நேற்று ஒரே நாளில் 345 பேர் தேர்வு எழுதவில்லை என கலெக்டர் பிரதாப் கூறினார்.
திருத்தணியில், திருமணம் முடிந்த சில மணி நேரத்தில், புதுமண தம்பதி விபத்தில் சிக்கி பலத்த காயம் அடைந்தனர். பாலாஜி, சந்தியா தம்பதி மற்றும் சசி ஆகியோர் ஆட்டோவில் வீடு திரும்பும்போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது ஆட்டோ. கோயில் இரும்பு கேட் மற்றும் நீதிமன்ற சுவரில் மோதியதால், தம்பதி உள்பட 4 பேரும் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். திருத்தணி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
திருவள்ளூரில் உள்ள தனியார் பள்ளியில் +2 படித்த மாணவி, நேற்று முன்தினம் (மார்.2) இரவு வீட்டில் படித்துக் கொண்டிருந்தார். நேற்று (மார்.3) அதிகாலை, வீட்டின் மொட்டை மாடிக்கு சென்ற அவர், தனது உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். அலறல் சத்தம் கேட்ட பெற்றோர், மாணவியை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
திருவள்ளூர் மாவட்டம் கடற்கரை ஒட்டி உள்ள கிராம மக்கள் புதிதாக குடும்ப அட்டை பெற்றவர்கள் மீன் பிடி தடைக்காலத்தில் வழங்கப்படும் நிவாரணத் தொகை பெற மீனவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று மீன்வளம் மற்றும் மீன்வள மேம்பாட்டு கழகம் கால்நடை பராமரிப்பு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அவர்கள் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
Sorry, no posts matched your criteria.