India's largestHyperlocal short
news App
            Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

ஆவடி மின் நிலையத்தில் நாளை (அக்.6) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் திருவள்ளுவர்தெரு, சுப்பிரமணியர்நகர், திருமலைநகர், குளக்கரைதெரு, மாசிலாமணிஸ்வரர்நகர், எட்டியம்மன்நகர் ஆகிய இடங்களில் மின்தடை செய்யப்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது. *ஷேர் செய்யுங்கள்*

புரட்சி பாரதம் கட்சியில் இருந்து விலகி, அக்கட்சியின் மாநில இளைஞரணி செயலாளர் தூத்துக்குடி ஆனந்தன் மற்றும் அக்கட்சியின் நிர்வாகிகள் 200-க்கும் மேற்பட்டோர் ஆவடியில் நேற்று அமைச்சர் நாசர் முன்னிலையில் திமுக-வில் இணைந்தனர். பின்னர் குழு புகைப்படம் எடுத்து கொண்டனர். உடன் திருவள்ளூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் பிரேம் ஆனந்த், ஆவடி மாநகர மேயர் உதயகுமார் (ம) கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

புழல் கேம்ப் சாலை சந்திப்பு அருகில் சட்டமேதை அம்பேத்கர் சிலையை நேற்று சேதப்படுத்தபட்டு இருக்கிறது. இது குறித்து திருவள்ளூர் எம்பி சசிகாந்த் செந்தில் தனது சமூக வலைத்தளத்தில் அரசியல் சாசனத்தை கட்டமைத்த சட்டமேதை அம்பேத்கர் சிலையை சேதப்படுத்தியதை கண்டித்து மட்டுமே கடந்து செல்ல முடியாது. இதற்கு தமிழ்நாடு அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

பூந்தமல்லி மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசாருக்கு நேற்று 04.10.2025 கஞ்சா விற்பனை செய்வதாக கிடைத்த ரகசிய தகவலின்படி பூந்தமல்லி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் சோதனை செய்தனர். அப்போது விற்பனை செய்வதற்கு ஓடிசா மாநிலம் சென்று வாங்கி வரப்பட்ட சுமார் 7 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். பின்னர் கஞ்சா வைத்திருந்த நந்தா பாரதி என்ற நபரை கைது செய்து நீதிமன்ற காவலில் அடைத்தனர்.

சொந்த வீடு கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். சொந்த வீடு இல்லாத, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருப்பவர்கள் pmay-urban.gov.in என்ற இணையதளம் மூலம் வரும் டிச.31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். ரேஷன் கார்டு, வங்கி கணக்கு போன்ற ஆவணங்களை இதனுடன் சமர்பிக்க வேண்டும். பிறரும் பயன்பெற SHARE பண்ணுங்க.

ரயில்வே துறையில் காலியாக உள்ள சரக்கு ரயில் மேலாளர், ஸ்டேஷன் மாஸ்டர், இளநிலை கணக்கு உதவியாளர் கம் தட்டச்சர் & மூத்த எழுத்தர் கம் தட்டச்சர் பதவிக்கு 8,875 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருந்தால் போதும். சம்பளம் ரூ.35,400 வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் இங்கு<

திருவள்ளூர் மக்களே, ரேஷன் கடை திறந்திருக்கிறதா என வீட்டில் இருந்தே தெரிந்துகொள்ளலாம். உங்கள் கைப்பேசியில் இருந்து PDS102 என்ற குறுஞ்செய்தியை 9773904050 என்ற எண்ணுக்கு அனுப்பினால் கடை திறந்திருக்கும் விவரம் உங்களுக்கு மெசேஜாக வரும். மேலும், உங்கள் பகுதி ரேஷன் கடையில் உள்ள ஸ்டாக் பற்றி தெரிந்துகொள்ள PDS101 என்ற குறுஞ்செய்தியை 9773904050 என்ற எண்ணிற்கு அனுப்பவும். ஷேர் பண்ணுங்க!

தமிழ்நாடு அரசின் TN Rights திட்டத்தில் 9 பதவிகளுக்கு மொத்தம் 1,096 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு குறைந்தபட்சமாக 10ம் முதல் ஏதேனும் ஒரு டிகிரி வரை படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளமாக ரூ.12,000 முதல் ரூ.30,000 வரை வழங்கப்படும். இதற்கு எழுத்து தேர்வு எதுவும் இல்லை. விருப்பமுள்ளவர்கள் அக்.14ம் தேதி வரை <

திருவள்ளூர் மாவட்டத்தில் தமிழக அரசின் தாயுமானவர் திட்டத்தின் கீழ், 70 வயதுக்கு மேற்பட்ட முதியோர் (ம) மாற்றுத் திறனாளிகளின் இல்லத்திற்கே வரும் தீபாவளியை முன்னிட்டு நாளை (அக்.5, 6) தேதிகளில் வீடு தேடி ரேஷன் பொருட்களை விநியோகம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த தகவலை திருவள்ளூர் மாவட்டத்தில் அனைத்து ரேஷன் கடைகளிலும் பொதுமக்கள் அறியும்படி எழுதி வைக்க தமிழக கூட்டுறவுத் துறை அறிவுறுத்தியுள்ளது.

திருத்தணி நகரம், அகூர், பொன் பாடி, வேலஞ்சேரி, சீனிவாசபுரம், சத்திரம் ஜெயபுரம், விநாயகபுரம், சின்ன கடம்பூர், பெரிய கடம்பூர் ,கார்த்திகேயபுரம், சரஸ்வதி மில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இன்று பராமரிப்பு பணிக்காக மின்சாரம் தடை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டது இருந்தது. இந்நிலையில் தற்போது 3-வது புரட்டாசி சனிக்கிழமை என்பதாலும், மழை பெய்வதாலும் மின்தடை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.