India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
IDBI வங்கியில் உள்ள ஜூனியர் அசிஸ்டென்ட் மேனேஜர் பிரிவில் 650 காலிப் பணியிடங்கள் உள்ளன. பட்டப்படிப்பு படித்த 20-25 வயதுடையவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் மற்றும் நேர்முகத்தேர்வு நடைபெறும். தேர்வு செய்யப்படுபர்களுக்கு மாதம் ரூ.15,000 சம்பளம் வழங்கப்படும். தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் வரும் 12ஆம் தேதிக்குள் இந்த லிங்கை<
மும்பையைச் சேர்ந்த கோபிநாத் (25), டொயோட்டா இடியாஸ் காரில் ஆந்திராவில் இருந்து சென்னை நோக்கி நேற்று (மார்.6) சென்று கொண்டிருந்தார். அப்போது, புதூர் அருகே சென்றபோது எதிரே வந்த பொலிரோ கார் இவரது கார் மீது மோதியது. இதில் அவர் பலத்த காயமடைந்தார். 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர், செல்லும் வழியிலேயே இறந்துவிட்டார். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காஞ்சிபுரத்தைச் சேர்ந்த பிரபல ரவுடி படப்பை குணா மீது கொலை, கட்டப் பஞ்சாயத்து உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட வழக்குகள் திருவள்ளூர் காவல் நிலையத்தில் நிலுவையில் உள்ளன. மதுராமங்கலம் அருகே விளைநிலங்களுக்கு தண்ணீர் பாய்ச்சுவது தொடர்பாக மோகன் என்பவருடன் தகராறு ஏற்பட்டுள்ளது. புகாரின் பேரில், நேற்று (மார்.6) குணா போலீசாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
கனகம்மாசத்திரம் அடுத்த புதூர் ரைஸ் மில் அருகே திருத்தணி நோக்கிச் சென்ற லோடு ஆட்டோவும், எதிரே வந்த காரும் மோதி விபத்துக்குள்ளாகின. இதில், காரில் வந்த அரியான் கோபிநாத் (25) தலை மற்றும் உடலில் பலத்த காயமடைந்து, ஆம்புலன்ஸ் மூலம் திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
ஜெர்மன் நாட்டில் உள்ள மருத்துவமனைகளில் பணி புரிவதற்கு 6 மாதங்கள் பணி அனுபவம் பெற்ற 35 வயதுடைய ஆண், பெண் செவிலியர்கள் தேவைப்படுகிறார்கள். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஜெர்மன் மொழி கற்பிக்கப்பட்டு மாதம் ரூ.2 லட்சம் சம்பளம் வழங்கப்பட உள்ளது. இடைத்தரகர், ஏஜெண்டுகளை நம்ப வேண்டாம். தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள், வரும் 15ஆம் தேதிக்குள்<
திருவள்ளூர் விவசாயிடம் மர்ம ஒருவர் நபர், சி.பி.ஐ. அதிகாரி எனக் கூறி பணம் கோரியுள்ளார்.இதனால் 71 லட்சம் ரூபாய் பணத்தை கொடுத்த விவசாயிக்கு பின்பு தான் நாம் மோசடி செய்யப்பட்டது அறிந்து போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படியில் சைபர் குற்றவாளிகள் குஜராத்தில் கைது செய்யப்பட்டனர் மேலும் அவர்களிடம் இருந்து 5.66 லட்சம் ரூபாய் முடக்கப்பட்டது.
இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் (IOB) அப்ரண்டிஸ் பயிற்சி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தியா முழுவதும் 750 பணியிடங்கள், தமிழகத்தில் 175 பணியிடங்கள் உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் வரும் 9ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட பல்கலை.,த்தில் இளங்கலைப் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். 20 – 28 வயது வரை இருக்க வேண்டும். மாதம் ரூ.15,000 ஊக்கத்தொகை வழங்கப்படும்.<
திருவள்ளூர் மாவட்டத்தில் அரசு மருத்துவ கல்லூரி இயங்கி வருகிறது.இதன் மூலம் திருவள்ளூர் மாவட்ட மக்கள் மட்டுமில்லாமல் சுற்றுவட்டார மக்களும் பயன் அடைகிறார்கள்.இந்நிலையில் இக்கல்லூரியில் ஒப்பந்த பணியாளர்களாக பலர் பணியமர்த்தப்பட்டன ஆனால் அவர்களில் 35 பேர் பணி நேரத்தில் மருத்துவமனையில் இல்லாததால் அவர்களுக்கு ஒருநாள் ஊதிய பிடித்தம் செய்ய மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
ஆவடி சேர்ந்தவர் ரஞ்சித் சிங் ராணா இவரது மனைவி மதுமதி, ரஞ்சித் சிங் ராணா, அடிக்கடி மதுபோதையில் வீட்டிற்கு வந்து, மனைவியை அடிப்பதாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த மதுமதியின் தம்பி பாலாஜி, கடந்த 1991ல் ராணாவை கொலை செய்துள்ளார்.இவ்வழக்கு தொடர்பாக, போலீசார் விசாரனையில் மதுமதி கைது செய்யப்பட்ட நிலையில், பாலாஜியை தீவிர தேடுதலுக்கு பின் 34 ஆண்டுகளுக்கு பின் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சென்னையில் பல் மருத்துவத்தில் உதவி அறுவை சிகிச்சை நிபுணர் (Assistant Surgeon -Dental) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 47 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இதற்கு ரூ.56,100 முதல் ரூ.2,05,700 வரை சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பிக்க கடைசி நாள் மார்ச்.17. இதற்கு BDS முடித்திருக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு இங்க <
Sorry, no posts matched your criteria.