Thiruvallur

News March 9, 2025

அரசு வேலை வேண்டுமென கேட்டு உறவினர்கள் முற்றுகை

image

திருத்தணி அருகே உள்ள கே.ஜி.கண்டிகையில் நேற்று முன்தினம் லாரி மோதியதில் அரசு பேருந்து விபத்துக்குள்ளாகி 4 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், உயிரிழந்த 4 பேரின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் என 500க்கும் மேற்பட்டோர் நேற்று திருத்தணி அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டனர். முதல்வர் கொடுத்த ரூ.4 லட்சம் காசோலை வேண்டாம், இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வேண்டும் என கேட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

News March 8, 2025

ரூ.2 கோடி மதிப்பிலான கடன் உதவியை வழங்கிய அமைச்சர்

image

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பூவிருந்தவல்லி புனித ஜோசப் பள்ளியில், இன்று (08/03/2025) காலை 10:00 மணி அளவில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, DMI தமிழ்நாடு பெண்கள் கூட்டமைப்பு சார்பில் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஆவடி சட்டமன்ற உறுப்பினரும் அமைச்சருமான ஆவடி நாசர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். பின்னர் ரூ.2 கோடி மதிப்பிலான கடன்களை வழங்கினார்.

News March 8, 2025

மகளிா் தினத்தில் உறுதிமொழி எடுப்போம் 3/3

image

எதனால் இந்தப் பாதிப்பு ஏற்படுகிறது என்பதற்கு உறுதியான காரணம் இல்லை. 30 வயதைக் கடந்த பெண்களுக்கு எவ்வாறு மாா்கப் புற்றுநோய் பரிசோதனை அவசியமோ, அதுபோலவே 20 வயதுக்குப் பிறகு ஆண்டுக்கு ஒருமுறையாவது பெண்கள் இதய நலப் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும். மகளிா் தினத்தில் இதய நலம் காப்பதற்கான உறுதிமொழியை அனைத்துப் பெண்களும் மேற்கொண்டால் ஆரோக்கியமான சமூகம் அமையப்பெறும். ஷேர் செய்யுங்கள்.

News March 8, 2025

18-45 வயது பெண்கள் அதிகமாக பாதிக்கப்படுகின்றனா் 2/3

image

மினோகா, இனோகா என்ற 2 வேறு வகையான மாரடைப்பு பாதிப்பு இளம்பெண்களிடம் தற்போது அதிகரித்து வருகிறது. சா்க்கரை நோய், தவறான உணவுப் பழக்கம், உயா் ரத்த அழுத்தம், கொழுப்புச் சத்து, மரபணு பாதிப்பு, மன அழுத்தம் ஆகியவைதான் முக்கிய காரணம். இதயத்துக்குச் செல்லும் குறுநாளங்களில் அடைப்பு ஏதும் இன்றி ரத்த ஓட்டம் தடைபடும். மிகவும் சிக்கலான இந்த நோய்களுக்கு 18-45 வயது பெண்கள் அதிகமாக பாதிக்கப்படுகின்றனா்.

News March 8, 2025

இளம்பெண்களிடையே அதிகரிக்கும் இதய பாதிப்பு 1/3

image

மாதவிடாய் பருவம் எட்டிய பெண்களுக்கு உடலில் ஈஸ்ட்ரோஜின் என்ற ஹாா்மோன் அதிக அளவில் சுரக்கும். ஈஸ்ட்ரோஜின் அதிகமாக சுரக்கும் பருவத்தில் உள்ள இளம்பெண்களுக்கு மாரடைப்பும், இதய நோய்களும் பரவலாக ஏற்படுகிறது. குறிப்பாக, இதய தசை செயலிழப்பு (காா்டியோ மையோபதி) அதிகரித்துள்ளது. அதிலும் 20 – 35 வயதுக்குட்பட்ட இளம்பெண்கள் பலா் அத்தகைய நோய்க்குள்ளாகி வருவதாக ஓமந்தூரார் மருத்துவமனை மருத்துவர் தெரிவித்துள்ளார்.

News March 8, 2025

திருவள்ளூர் கோர விபத்து: லாரி ஓட்டுநர் கைது

image

கே.ஜி கண்டிகை பகுதியில் அரசு பேருந்து மீது டிப்பர் லாரி நேருக்கு நேர் மோதிய கோர விபத்து ஏற்பட்டதில் பயணிகள் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 38க்கும் மேற்பட்டோர் மிகவும் ஆபத்தான நிலையில் திருத்தணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் லாரி ஓட்டுனரை கைது செய்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

News March 7, 2025

இரவு ரோந்து போலீசார் விவரங்கள் வெளியீடு

image

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

News March 7, 2025

வேண்டிய வரம் அருளும் பவானி அம்மன்

image

ஆரணி ஆற்றின் கரையோரத்தில் அமைந்துள்ளது பவானி அம்மன் திருக்கோவில். இங்கு வந்து நினைப்பதை வேண்டினாள் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. புராணத்தில் பெரிய வரலாற்றை கொண்டுள்ள இந்த அம்மனுக்கு ஆடி வெள்ளி மிக சிறப்புமிகு நாளாக கொண்டாடப்படுகிறது. அம்மனை வேண்டி வேப்பிள்ளை ஆடை அணிந்து சாமி தரிசனம் செய்தால், குடும்ப பிரச்சனை, குழந்தை பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும் என்பது ஐதீகம். ஷேர் பண்ணுங்க.

News March 7, 2025

EPSயை சந்திப்பேன்: விஜயகுமார் அறிக்கை

image

மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக பாஜக நடத்திய கையெழுத்து இயக்கத்திற்கு ஆதரவு தெரிவித்ததற்காக எல்லாபுரம் வடக்கு ஒன்றிய அதிமுக செயலாளர் விஜயகுமார் கட்சியில் நீக்கப்பட்டார்.இதுகுறித்து பேசிய அவர், “நான் ஆதரவு தெரிவிக்கவில்லை.பாஜகவினர்கள்தான் என்னை கட்டாயப்படுத்தி கையெழுத்து போட வைத்தனர்” என்றார். மேலும், இதுகுறித்து எடப்பாடி பழனிச்சாமியை சந்திப்பேன் என்று தெரிவித்துள்ளார்.

News March 7, 2025

அதிமுக Ex.MLA கட்சியில் இருந்து நீக்கம்

image

எல்லாபுரம் வடக்கு ஒன்றிய அதிமுக செயலாளர் விஜயகுமார் கட்சியில் நீக்கப்பட்டுள்ளார். மும்கொள்கைக்கு ஆதரவாக பாஜக நடத்திய கையெழுத்து இயக்கத்தில் விஜயகுமார் கையெழுத்திட்டார். அவரின் இச்செயல் கட்சி கொள்கைக்கு எதிராக இருப்பதால் அவரை கட்சியில் இருந்து அனைத்து அடிப்படை பொறுப்புகளில் இருந்தும் நீக்குவதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.

error: Content is protected !!