Thiruvallur

News March 26, 2024

லிப்ட் கேட்டு பைக்கில் சென்ற பெண் பலி

image

சென்னை அம்பத்தூரை சேர்ந்தவர் தங்கம், இவர் இன்று பொன்னேரி அடுத்த சிறுவாபுரிமுருகன் கோயிலுக்கு செல்வதற்காக செங்குன்றம் அடுத்த பாடி பேருந்து நிலையத்திலிருந்து பாடியை சேர்ந்த கமலக்கண்ணன் என்பவரிடம் லிப்ட் கேட்டு சென்றார். அப்போது சோழவரம் அடுத்த ஜனப்பசத்திரம் கூட்டு சாலை அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி தங்கம் உயிரிழந்தார்.  கமலக்கண்ணன் மருத்துவமனையில் அனுமதிப்பட்டுள்ளார். 

News March 26, 2024

திருவள்ளூர்: 10ஆம் வகுப்பு தேர்வு துவக்கம்

image

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று முதல் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தொடங்கியுள்ளது. இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில், 16,348 மாணவர்களும், 16,583 மாணவியரும் என மொத்தம், 32,931 மாணவ, மாணவியர் தேர்வு எழுத உள்ளனர். இவர்கள் 138 தேர்வு மையங்களில் தேர்வு எழுதுவதால் தேர்வு மையங்களில், மாணவர்களுக்கு தேர்வு எழுவதற்கு மேஜைகளில் பதிவெண்கள் எழுதும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

News March 26, 2024

திருவள்ளூர்: அதிமுக சார்பில் ஆலோசனை கூட்டம்

image

திருத்தணியில் நேற்று இரவு அரக்கோணம் நாடாளுமன்ற அதிமுக வேட்பாளர் ஏ.எல்.விஜயன் அறிமுகம் மற்றும் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டு தேர்தல் குறித்த வியூகங்கள் மற்றும் ஆலோசனைகளை வழங்கினார் திருத்தணியின் முன்னாள் எம்பி ஹரி. மேலும் இந்தக் கூட்டத்தில் திருவள்ளூர் மாவட்டச் செயலாளர் ரமணா, தேமுதிக மாவட்டச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

News March 25, 2024

நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்கும் பழங்குடிகள்

image

தமிழ்நாட்டில் வாழும் கொண்டா ரெட்டி இன மக்களின் கோரிக்கையை ஏற்காவிட்டால், எந்த கட்சிக்கும் ஓட்டு போட மாட்டோம் என திருவள்ளூர் மாவட்ட கொண்டா ரெட்டி மலை ஜாதி முன்னேற்ற சங்கம் அறிவித்துள்ளது. எஸ் டி பிரிவினருக்கு ஜாதி சான்றிதழ் வழங்க வேண்டும், மலைவாழ் மக்களுக்கு வங்கிகளில் மானிய உதவியுடன் கடன் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

News March 25, 2024

திருவள்ளூர்: பணத்துடன் சிக்கிய திமுக நிர்வாகிகள்

image

பொன்னேரி சட்டமன்ற தொகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகனச் சோதனையில்  ஈடுபட்டனர். அப்போது, காரில் வந்த மீஞ்சூர் திமுக ஒன்றிய குழு தலைவர் ரவி மற்றும் பூமிநாதன் ஆகியோரிடமிருந்து ₹500 நோட்டுகள் இருந்த திமுக தலைவரின் படம் பிரிண்ட் செய்யப்பட்ட கிஃப்ட் கவர்கள் மற்றும் ₹50000 பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பின்னர், இவை உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் வாகே சங்கத் பல்வந்த் வசம் ஒப்படைக்கப்பட்டது.

News March 25, 2024

திருவள்ளூர்: தங்கையின் கணவரை வெட்டிய சகோதரி

image

செங்குன்றம் விஜயநல்லூரை சேர்ந்தவர் நந்தகுமார். இவரது மனைவி மேனகா கணவரை பிரிந்து கும்மிடிப்பூண்டி அருகேயுள்ள துராபள்ளம் கிராமத்தில் தாய் வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று மனைவியை பார்க்க துராபள்ளம் வந்த நந்தகுமார் மதுபோதையில் மேனகாவை வெட்ட முயன்றார். இதில் ஆத்திரமடைந்த மேனகாவின் அக்கா ஷோபனா கத்தியை பிடுங்கி நந்தகுமாரை சரமாரியாக வெட்டினார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

News March 25, 2024

திருவள்ளூரில் பாஜக வேட்பாளர் மனு தாக்கல்

image

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி லோக்சபா தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் செய்ய இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், திருவள்ளூர் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் பொன்.வி. பாலகணபதி இன்று திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளார்.

News March 25, 2024

தேர்தல் விழா: வேட்புமனு தாக்கல்

image

மக்களவைத் தேர்தலையொட்டி, வேட்புமனு தாக்கல் மார்ச் 20இல் தொடங்கிய நிலையில் மார்ச் 27ஆம் தேதி நிறைவுபெறுகிறது. இந்நிலையில், இன்று (மார்ச் 25) திமுக, அதிமுக, பாஜக, தேமுதிக, காங். உள்ளிட்ட முக்கியக் கட்சிகளின் வேட்பாளர்கள் 40 தொகுதிகளிலும் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்வர் என எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு தாக்கல் செய்யும்போது வேட்பாளருடன் சேர்த்து 5 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

News March 24, 2024

பராமரிப்பு பணி காரணமாக ரயில் சேவை ரத்து

image

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி – மீஞ்சூர் ரயில் நிலையங்கள் இடையே, வரும் 25, 26, 27 ஆகிய நாட்களில் காலை 9:25 மணி முதல் 11:40 மணி வரை ரயில் பாதை மேம்பாட்டு பணிகள் நடைபெற உள்ளன. இதனால், சென்னை சென்ட்ரல் – கும்மிடிப்பூண்டி மார்கத்தில் மூன்று நாட்களுக்கு, ஏழு மின்சார ரயில்களின் சேவை பகுதி நேரமாக ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

News March 24, 2024

திருவள்ளூர்: காங்கிரஸ் வேட்பாளர் அறிவிப்பு

image

திருவள்ளூர் மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளராக முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி சசிகாந்த் செந்தில் அறிவிக்கப்பட்டுள்ளார். மக்களவைத் தேர்தல் 2024 வரும் ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்காக தமிழகம், புதுவையில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில், 7 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சி நேற்று வெளியிட்டுள்ளது.

error: Content is protected !!