Thiruvallur

News March 30, 2025

தனியார் பேருந்து மோதியதில் ஒருவர் பலி

image

ஆர்கே பேட்டை அடுத்த கோசராபள்ளி கூட்டு சாலையில் இன்று காலை தனியார் பேருந்து பள்ளிப்பட்டில் இருந்து திருத்தணி நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த வழியாக வந்து கொண்டிருந்த கோசராபள்ளி காலனியைச் சேர்ந்த விஜயன் என்பவர் மீது தனியார் பேருந்து மோதியதில் தூக்கி வீசப்பட்டுள்ளார். இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் . இச்சம்பவம் குறித்து ஆர்கே பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News March 30, 2025

கொதிக்கும் திருவள்ளூர்

image

தமிழ்நாட்டில் கடந்த 27ஆம் தேதியில் இருந்து வெயில் வாட்டி வதைத்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக, நேற்றும் வெப்பம் சுட்டெரித்ததை பார்க்க முடிந்தது. அதன்படி, மதுரை, சென்னை உள்ளிட்ட 10 இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி பதிவானது. அதிகபட்சமாக மதுரையில் 104 டிகிரி வெப்பம் பதிவாகியிருந்தது.இந்நிலையில் திருத்தணி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் 100.4 டிகிரி வெயில் பதிவானதால் பொதுமக்கள் அவதியடைந்தனர்

News March 29, 2025

சனி பகவான் மகனின் தோஷம் நீக்கிய அற்புத தலம்

image

திருவள்ளூரில் சனி பகவானுக்குப் பரிகாரத் தலமாக அறியப்பட்ட ஒரு ஆலயம் திருவாலங்காடு மாந்தீஸ்வரர் ஆலயம் ஆகும். சனி பகவானின் புதல்வரான மாந்தி தனது தோஷம் நீங்க திருவாலங்காட்டில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபட்டதாக புராணங்களில் கூறப்படுகிறது. இந்த சிவலிங்கத்தை வழிபட்டால் அஷ்டமச்சனி அர்த்தாமச் சனி, ஜென்ம சனி போன்றவற்றின் தாக்கம் குறையும். தெரிந்தவர்களுக்கு இந்த செய்தி ஷேர் பண்ணுங்க

News March 29, 2025

திருவள்ளூரில்  402 பேர் ஆப்சென்ட் 

image

தமிழ்நாடு முழுவதும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது. திருவள்ளூர் மாவட்டத்தில் 144 மையங்களில் 32,029 மாணவர்கள் தேர்வை எழுதியுள்ளனர். 402 பேர் தேர்வுக்கு வரவில்லை. அனைத்து மையங்களிலும் மூல வசதிகள் ஏற்படுத்தப்பட்டன. மாவட்ட கல்வி அலுவலர் ரவிச்சந்திரன் தேர்வு மையங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். 10ஆம் வகுப்பு தேர்வு 15-ம் தேதி வரை நடைபெறும்.

News March 29, 2025

மத்திய அரசில் வேலை வாய்ப்பு

image

மத்திய சாலை ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள இளநிலை செயலக உதவியாளர், இளநிலை சுருக்கெழுத்தர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அதன்படி 10th ,12th தேர்ச்சி பெற்று 18 வயது முதல் 27 வயதுக்குட்பட்டவர்களாக இருக்கவேண்டும். ரூ.25,500 – 81.100 வரை சம்பளம் , விருப்பமுள்ளவர்கள் ஏப்ரல் 24குள் இந்த லிங்கை <>கிளிக்<<>> செய்து பதிவு செய்யவும். வேலை தேடும் உங்கள் நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

News March 29, 2025

வாட்டிவதைக்கும் வெயில்: அச்சத்தில் மக்கள்

image

கோடைகாலம் நெருங்கும் நிலையில் தமிழகத்தில் பல இடங்களில் வெயில் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே உள்ளது. இந்நிலையில் திருவள்ளூர், திருத்தணி போன்ற இடங்களில் வெயில் 100 டிகிரி செல்சியஸ் அளவு வெப்பம் பதிவாகியுள்ளது. மார்ச் மாதமே முடியாத நிலையில் 100 டிகிரி செல்சியஸ் பதிவானதால் வருகின்ற நாட்கள் இன்னும் அதிகமாக வெப்பம் பதிவாக கூடும் என மக்கள் அச்சமடைந்துள்ளார்.

News March 28, 2025

வேண்டிய வரம் அருளும் பெரியபாளையம் பவானி அம்மன்

image

ஆரணி ஆற்றின் கரையோரத்தில் அமைந்துள்ளது பவானி அம்மன் திருக்கோவில். இத்தல அன்னையிடம் மாங்கல்ய பலம் வேண்டி வரும் பெண்களின் எண்ணிக்கை அதிகமானது. வாழ்வில் வளம் பெருகவும், குழந்தை வரம் கிடைக்கவும் வழிபடுபவர்களும் ஏராளம். வேப்பிலை ஆடை உடுத்தி பிரார்த்தனை செய்தால், அனைத்து வேண்டுதல்களும் நிறைவேறும் என்பது பக்தர் களின் நம்பிக்கையாக உள்ளது. தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க

News March 28, 2025

டெக்னீஷியன் பயிற்சி: ரூ.20,000 சம்பளத்தில் வேலை

image

பழங்குடியின இளைஞர்ளுக்கு உற்பத்தி மற்றும் சேவைத் தொழில்களில் பயிற்சிகள் வழங்கப்படுகிறது. வெல்டிங், ரெப்ரிஜிரேட்டர், ஏர் கண்டிஷனிங், பைக் – கார் சர்வீஸ் ஆகிய டெக்னீஷியன்களுக்கான பயிற்சி அளிக்கப்படுகிறது. 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தங்கும் இடம், உணவு வசதியுடன் பயிற்சி வழங்கப்படும். பயிற்சியை முடித்தல் ரூ.15,000 – ரூ.20,000 சம்பளத்தில் வேலைவாய்ப்ப்பு ஏற்படுத்தி தரப்படும்.

News March 28, 2025

பள்ளி படிப்பும், கணினி திறனும் இருந்தால் வேலை

image

மத்திய சாலை ஆய்வு நிறுவனத்தில் ஜூனியர் அசிஸ்டன்ட், ஜூனியர் ஸ்டெனோகிராபர் ஆகிய 209 பணியிடங்கள் நிரப்படவுள்ளன. ஜூனியர் அசிஸ்டன்ட் பணிக்கு ரூ.19,900 – 63,200, ஜூனியர் ஸ்டெனோகிராபர் பணிக்கு ரூ.25,500 – 81,100 வரை சம்பளம் வாங்கப்பட உள்ளன. பள்ளிப்படிப்பு முடித்திருக்க வேண்டும். கணினி திறன் இருக்க வேண்டும். விருப்பம் உள்ளவர்கள் வரும் ஏப்ரல் 21ஆம் தேதிக்குள் இந்த <>லிங்கை<<>> க்ளிக் செய்து விண்ணப்பிக்கலாம்.

News March 28, 2025

முதியவர் மயங்கி விழுந்து பரிதாப பலி

image

திருத்தணி கமலா தியேட்டர் அருகே, 45 வயது மதிக்க ஆண் ஒருவர் நடந்து சென்றுள்ளார். அப்போது திடீரென சாலையிலேயே மயங்கி விழுந்தார். உடனடியாக அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு திருத்தணி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்பு உயர் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார், அவரது அடையாளம் தெரியாததால் காவல்துறை விசாரித்து வருகின்றது.

error: Content is protected !!