Thiruvallur

News October 27, 2025

திருவள்ளூர்: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்

image

திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று (அக்.26) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News October 27, 2025

ஆவடி: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்

image

ஆவடியில் இன்று (அக்.26) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News October 26, 2025

திருவள்ளூர்: 10th படித்தவரா நீங்கள்?-DON’T MISS IT!

image

மத்திய அரசின் ஏகலைவா மாதிரி உண்டு உறைவிடப் பள்ளிகளில் பள்ளி முதல்வர், ஆசிரியர்கள், செவிலியர், விடுதிக்காப்பாளர், செயலக உதவியாளர், கணக்காளர் போன்ற பணிகளில் காலியாக உள்ள 7,267 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு 10th, +2, டிகிரி, பி.எட் & நர்சிங் படித்தவர்கள் இங்கு <>கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். இதற்கு ரூ.18,000-ரூ.2,09,200 வரை சம்பளம் வழங்கப்படும். கடைசி தேதி அக்.28. ஷேர்!

News October 26, 2025

திருவள்ளூர்: B.E / B.Tech / B.Sc முடித்தவர்களா? ரூ.1,40,000 சம்பளம்

image

பாரத் எலெக்ட்ரானிக்ஸ் (BEL) நிறுவனத்தில் காலியாக உள்ள Probationary Engineer (PE) பணியிடங்களை நிரப்ப தகுதியான 340 நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. B.E / B.Tech / B.Sc முடித்த 21 வயதுக்கு மேல் உள்ளவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கு மாதம் ரூ.40,000 – 1,40,000 வரை சம்பளம் வழங்கப்படுகிறது, விருப்பமுள்ளவர்கள் நவ-14ஆம் தேதிக்குள்ள <>இந்த லிங்கில் <<>>விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க.

News October 26, 2025

ஊத்துக்கோட்டையில் 86 மி.மீ. மழை பதிவு

image

திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று காலை 6 மணி முதல் இன்று காலை 6 மணி வரையிலான 24 மணி நேரத்தில், ஊத்துக்கோட்டையில் 86 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. மேலும் திருத்தணி 13 மி.மீ.சோழவரத்தில் 3 மி.மீ, திருவாலங்காடு 8மி.மீ மழை ஆவடி 15 மி.மீ. பூவிருந்தவல்லி 19 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. மேலும், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் லேசான மழை பெய்தது.

News October 26, 2025

திருவள்ளூர்: இனி அலைச்சல் வேண்டாம் ஒரு மெசேஜ் போதும்!

image

திருவள்ளூர் மக்களே கேஸ் சிலிண்டரை புக்கிங் செய்ய போனில் இருந்து ஒரு SMS அனுப்பினாலே போதும். இண்டேன் சிலிண்டர் பயன்படுத்துவோர் ‘REFILL’ என டைப் செய்து 77189 55555 என்ற எண்ணுக்கு அனுப்ப வேண்டும். இதுவே பாரத் சிலிண்டர் பயன்படுத்துவோர் 18002 24344 என்ற எண்ணுக்கும், எச்.பி. சிலிண்டர் பயன்படுத்துவோர் 1906 என்ற எண்ணுக்கு மெசேஜ் அனுப்பி கேஸ் சிலிண்டரை ஈசியாக புக்கிங் செய்யலாம். ஷேர் பண்ணுங்க.

News October 26, 2025

திருவள்ளூர்: இளைஞர்களுக்கு ரூ.10 லட்சம் கடன்!

image

பிரதம மந்திரி ரோஸ்கர் யோஜனா (PMRY) திட்டம், 1993ல் தொடங்கப்பட்டது. படித்த வேலையற்ற இளைஞர்கள் சுயதொழில் தொடங்க ரூ.10 லட்சம் வரை மானியக் கடன் வழங்குகிறது. உற்பத்தி, சேவை, வர்த்தகத் துறைகளில் கடன் வழங்கப்படும். 18-35 வயது வரையிலான, 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.15% வரை மானியமும், தொழில் மேம்பாட்டுப் பயிற்சியும் அளிக்கப்படும். மாவட்ட தொழில் மையங்கள் மூலம் <>விண்ணப்பிக்கலாம்<<>>. ஷேர்!

News October 26, 2025

திருவள்ளூர்: பிரபல இன்ஸ்டா டான்சர் கைது!

image

திருவள்ளூரில் மெத்ஆம்பெட்டமைன் போதைப் பொருள் வைத்திருந்த, சென்னையைச் சேர்ந்த ‘இன்ஸ்டாகிராம்’ பிரபல டான்சரை போலீசார் கைது செய்தனர். மேலும், அவரிடமிருந்து ஐபோன், 21 சிறிய ஜீப் லாக் கவர், ஒரு எடை மிஷின் உட்பட 33 பொருட்களை பறிமுதல் செய்தனர். விசாரணையில், சென்னை ராமாபுரம், முல்லை நகரைச் சேர்ந்த சிபிராஜ், 22, என்பது தெரிய வந்தது. இவர், இன்ஸ்டாகிராம் பிரபல டான்சர் என்பதும் தெரியவந்தது.

News October 26, 2025

திருவள்ளூர் இன்றைய ரோந்து காவலர்களின் விவரம்

image

திருவள்ளூர் மாவட்ட காவல்துறை சார்பில் (25.10.2025) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் விவரம், காவல் நிலையம் வாரியாக மக்களின் எளிதான தொடர்பு வசதிக்காக வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் சட்ட ஒழுங்கை உறுதிசெய்யும் நோக்கில் மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கை, மக்கள் தங்களது பகுதிக்கான பொறுப்பு அதிகாரிகளை நேரடியாக தொடர்பு கொள்ளும் வசதியையும் வழங்குகிறது.

News October 25, 2025

திருவள்ளூர்: கர்ப்பிணிகளுக்கு ரூ.18,000/- APPLY…!

image

டாக்டர் முத்துலெட்சுமி மகப்பேறு திட்டத்தின் மூலமாக திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள முதல் இரண்டு குழந்தைகள் பெற்றெடுக்கும் கர்ப்பிணிகளுக்கு மூன்று தவணைகளாக ரூ.18,000/- வழங்கபடுகிறது. ரூ.18,000 வாங்க எங்கேயும் அலைய தேவையில்லை. <>இங்கு க்ளிக்<<>> செய்து அப்பளை பண்ணா போதும். மேலும் தகவல்கள் மற்றும் புகார்களுக்கு 9489048910, 044-22280920 அழையுங்க… புதுமணதம்பதிகள் மற்றும் கர்ப்பிணிகளுக்கு SHARE பண்ணுங்க…

error: Content is protected !!