Thiruvallur

News August 19, 2024

ஆற்காடு சுரேஷின் மனைவிக்கு நீதிமன்ற காவல்

image

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஆற்காடு சுரேஷின் மனைவி பொற்கொடியை கைது செய்த செம்பியம் போலீசார் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். ஆந்திராவில் பதுங்கியிருந்த பொற்கொடியை கைது செய்ததையடுத்து சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் அவரை காவல்துறையினர் ஆஜர்படுத்தினர். இதனையடுத்து பொற்கொடியை செப்டம்பர் 2-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் எடுத்து விசாரிக்க எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

News August 19, 2024

அஸ்வத்தாமன் பரபரப்பு வாக்குமூலம்

image

3 விஷயங்களில் மன உளைச்சலுக்கு ஆளானதால் தான் ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு சம்மதம் தெரிவித்தாக அஸ்வத்தாமன் வாக்குமூலம் அளித்துள்ளார். “ஒரக்காடு நிலப்பிரச்சனையில் என்னை உள்ளே நுழைய விடாமல் செய்தது, மீஞ்சூரில் காங்கிரஸ் பிரமுகர் ஜெயப்பிரகாஷை துப்பாக்கியைக் காட்டி மிரட்டிய வழக்கில் என் மீது புகார் அளித்தது, BSP மாவட்டச் செயலாளர் தென்னரசு கொலை வழக்கில் என் தந்தை நாகேந்திரனை குற்றவாளியாக சேர்த்தது” என்றார்.

News August 19, 2024

ரவுடி ஆற்காடு சுரேஷின் மனைவி கைது

image

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், ரவுடி ஆற்காடு சுரேஷின் மனைவியை தனிப்படை போலீசார் நேற்று கைது செய்தனர். ஆற்காடு சுரேஷின் நினைவுநாளான நேற்று, ஆந்திராவில் பதுங்கி இருந்த அவரை தமிழக சிறப்புப்படை போலீசார் கைது செய்தனர். இந்த கொலை வழக்கில் இவருக்கு ஏதேனும் தொடர்பு உள்ளதா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், ரவுடி நாகேந்திரன் மற்றும் அஸ்வத்தாமனிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

News August 19, 2024

திருத்தணி கோயிலில் இன்று 4 மணி நேரம் தரிசனம் ரத்து

image

திருத்தணியில் பிரசித்த பெற்ற முருகன் கோயில் அமைந்துள்ளது. இங்கு ஆவணி அவிட்டம், பவித்ர உற்சவ விழா இன்று நடைபெற உள்ளது. இதையொட்டி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் செய்ய உள்ளதால், பிற்பகல் 12 மணி முதல் மாலை 4 மணி வரை, கோயில் நடை அடைக்கப்பட்டு பக்தர்களுக்கு தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. மாலை 4 மணிக்கு மேல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

News August 18, 2024

பல லட்சங்கள் மோசடி செய்த இளைஞர் கைது

image

அம்பத்தூர், ராமாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ரேணுகாதேவி (45). இவரிடம் சென்னை ஆதம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த கார்த்திகேயன் (33) என்பவர், வீடு மற்றும் வேலை வாங்கி தருவதாகக் கூறி ரூ.94.50 லட்சம் மோசடி செய்துள்ளார். புகாரின் பேரில் ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து கார்த்திகேயன் என்பவரை இன்று (ஆக.18) கைது செய்தனர்.

News August 18, 2024

ரவுடி சீசிங் ராஜா தப்பியோட்டம்

image

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடைய முக்கிய ரவுடியான சீசிங் ராஜா, கிருஷ்ணாம்பட்டினம் துறைமுகத்தில் பதுங்கி இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர். ஆனால், போலீசார் வருவதற்கு முன் அவர் அங்கிருந்து தப்பியோடிவிட்டார். இதையடுத்து, சீசிங் ராஜாவின் மனைவிகளிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னதாக ஆந்திராவில் ஒரு முறை போலீஸ் வருவதற்கு முன் சீசிங் ராஜா தப்பி சென்ற நிலையில், இம்முறையும் தப்பியுள்ளார்.

News August 18, 2024

ரூ.53 லட்சம் மோசடி செய்தவர் கைது

image

ஆவடி, காமராஜர் நகரைச் சேர்ந்தவர் ரவி(50). இவரும் ஆவடி வசந்தம் நகரைச் சேர்ந்த சரவணன் (42) என்பவரும் சேர்ந்து பழைய இரும்புக் கழிவு பொருட்கள் விற்பனை செய்யும் தொழில் நடத்தி வந்தனர். இந்த நிலையில் சரவணன் ரூ.53 லட்சம் பணத்தை ரவியிடம் மோசடி செய்துள்ளார். புகார் அடிப்படையில் ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து சரவணன் என்பவரை இன்று (ஆக.17) கைது செய்தனர்.

News August 18, 2024

மின்சார ரயில்கள் பகுதிநேரமாக ரத்து

image

அரக்கோணம் அருகே பராமரிப்பு பணி நடைபெற்று வருவதால், இன்று மின்சார ரயில்கள் பகுதிநேரமாக ரத்து செய்யப்படுகிறது. சென்டிரலில் இருந்து காலை 10 மணிக்கு புறப்பட்டு திருத்தணி செல்லும் மின்சார ரயில், திருவள்ளூர்- திருத்தணி இடையே நிற்காது என்றும், அதேபோல் திருத்தணியில் இருந்து மதியம் 12.35 மணிக்கு புறப்பட்டு சென்டிரல் வரும் மின்சார ரயில், திருத்தணி- திருவள்ளூர் இடையே நிற்காது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News August 17, 2024

இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

திருவள்ளூர் சரகத்தில் உதவி ஆய்வாளர் பரமசிவம், ஊத்துக்கோட்டை சரகத்தில் உதவி ஆய்வாளர் பூபாலன், திருத்தணி சரகத்தில் உதவி ஆய்வாளர் சுகந்தி, கும்மிடிப்பூண்டி சரகத்தில் உதவி ஆய்வாளர் மாரிமுத்து ஆகியோர் இன்று (ஆக.17) இரவு ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். மேற்கண்ட அதிகாரிகளின் கைப்பேசி எண்கள் வெளியிடப்பட்டுள்ளன. எனவே பொதுமக்கள் அவசர உதவிக்கு மேற்கண்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம்.

News August 17, 2024

அஸ்வத்தாமன் திடுக்கிடும் வாக்குமூலம்

image

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான அஸ்வத்தாமனிடம் போலீசார் நடத்திய விசாரணையில், சில திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆம்ஸ்ட்ராங் உடன் இணக்கமாக செல்ல விரும்புவதாகக் கூறி, அவரை அங்கிள் என அழைப்பது, அவரது வீட்டின் சுப நிகழ்ச்சிகளில் பங்கேற்று அவருடன் நட்பு பாராட்டுவது, பின்னர், நாகேந்திரனிடம் கூறி ஆம்ஸ்ட்ராங்கை கொல்ல அஸ்வத்தாமன் வாக்குமூலம் அளித்துள்ளதாகப் போலீசார் தெரிவித்துள்ளனர்.

error: Content is protected !!