India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழ்நாட்டில் ஐந்து மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது . அதன்படி திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று பிற்பகல் 1 மணி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. உங்கள் பகுதியில் மழை பெய்ய வாய்ப்புள்ளதா என்பதை கமென்டில் குறிப்பிடவும்
திருவள்ளூர் மாவட்டத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு (காலை 10 மணி வரை) லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு திசையின் வேகமாறுபாடு காரணமாக, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்றிரவு மழை பெய்து வருகிறது. இதனால், திருவள்ளூரைச் சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பணிக்கு செல்வோர் வெளியே செல்லும்போது குடை, ரெயின் கோர்ட்டுடன் செல்லுங்கள். உங்க ஏரியாவில் மழையா?
திருவள்ளூர், மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டு வடசென்னை அனல் மின் நிலையத்தில் இரு நிலைகளில் மொத்தம் 1830 மெ.வாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.அனல் மின் நிலைய 2வது நிலையில் 2வது அலகில் கொதிகலன் கசிவால் 600 மெ.வாட், 1வது நிலையில் 1வது அலகில் கொதிகலன் கசிவால் 210 மெ.வாட், 1வது நிலையில் 2வது அலகில் ஜெனரேட்டரில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறால் 210 மெ.வாட் என 1020 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு.
பூந்தமல்லியில் போலீசாரின் வாகன சோதனையின் போது லாரியில் கொண்டு வரப்பட்ட 10 டன் எடையில் போதைப் பொருட்கள் சிக்கியுள்ளன. லாரி கண்டெய்னர் முழுவதும் இருந்த புகையிலை குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்கள் பூந்தமல்லி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் விற்பனை செய்வதற்காக கொண்டு வரப்பட்டது. பூவிருந்தவல்லி மதுவிலக்கு போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட இதன் மதிப்பு ரூ.75 லட்சம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் இராகி பேட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட அம்மையார்குப்பத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற முதன்மைக் கல்வி அலுவலர் சரவண ச.மு.அவினாசி இன்று காலை காலமானார். இவர், அம்மையார்குப்பம் பகுதியில் உள்ள அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் அறங்காவலர் குழு தலைவராகவும் இருந்துள்ளார். இவரது உடல், அம்மையார்குப்பம் சுடுகாட்டில் நாளை மாலை 3 மணி அளவில் தகனம் செய்யபடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் செம்பரம்பாக்கம் ஊராட்சி, நசரத் பேட்டை ஊராட்சி, மேப்பூர், வரதராஜபுரம், பெங்களூர் டிரங்க் ரோடு, செம்பரம்பாக்கத்தின் ஒரு பகுதி, திருமழிசையின் ஒரு பகுதி, அம்பத்தூர், மலயாயம்பாக்கம், அகரம்மேல் பகுதிகளில் இன்று காலை 9.00 மணி முதல் 2.00 மணி வரை மின் தடை செய்யப்பட உள்ளதாக மின் வாரியம் தெரிவித்துள்ளது.
புலிகாட் ஏரி என அறியப்படும் பழவேற்காடு ஏரி, இந்தியாவின் இரண்டாவது பெரிய உப்பு நீர் ஏரி ஆகும். இது சென்னையில் இருந்து 60 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. கழிமுகப்பகுதியாக இந்த ஏரி விளங்குகிறது. பழவேற்காடு ஏரி பறவைகள் காப்பகத்திற்கு, அக்டோபர் மற்றும் மார்ச் மாதங்களில் ஒவ்வொரு ஆண்டும், ஆயிரகணக்கான புலம்பெயர் பறவைகள் வருகின்றன. சுற்றுலா தலத்திற்கும் பெயர் போன இடமாக பழவேற்காடு ஏரி உள்ளது .
திருவள்ளூர் ஆட்சியர் அலுவலகத்தில் ஊரக வளர்ச்சி முகமை, மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மாவட்ட கல்வி அலுவலர் வளாகம் உள்ளிட்ட பல துறை அலுவலகங்கள் உள்ளன. இந்நிலையில், ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நவீன் வசதியுடன் கூடிய புதிய நூலகம் அமைக்கப்பட்டு வருகிறது. போட்டி தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு நூலகத்தில் கற்றல் மையம் ஏற்படுத்தப்படவுள்ளதாக ஆட்சியர் பிரபு சங்கர் கூறியுள்ளார்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான விசாரணை கைதி ரவுடி திருமலைக்கு, நேற்றிரவு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. ஆற்காடு சுரேஷ் கூட்டாளியான இவர், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதாகி புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். நேற்றிரவு சுமார் 9 மணியளவில் திடீரென அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து, போலீசார் அவரை சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதித்துள்ளதாகத் தெரிகிறது.
கும்மிடிப்பூண்டி மின்சார ரயிலில் நேற்று பட்டாக்கத்தியுடன் சென்ற 2 கல்லூரி மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். சென்னை கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வரும் 2 கல்லூரி மாணவர்கள் பட்டாக்கத்தியை மறைத்து வைத்துக் கொண்டு மின்சார ரயிலில் சென்றுள்ளனர். இதைக் கண்ட பயணிகள் ரயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த போலீசார் அவர்களிடம் கத்தியை பறிமுதல் செய்து இருவரையும் கைது செய்தனர்.
Sorry, no posts matched your criteria.