India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருவள்ளூர் சரகத்தில் உதவி ஆய்வாளர் சக்திவேல், ஊத்துக்கோட்டை சரகத்தில் உதவி ஆய்வாளர் பிரசன்னா வரதன், திருத்தணி சரகத்தில் உதவி ஆய்வாளர் குணசேகரன், கும்மிடிப்பூண்டி சரகத்தில் உதவி ஆய்வாளர் மாரிமுத்து ஆகியோர் இன்று (செப்.5) இரவு ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். மேற்கண்ட அதிகாரிகளின் கைப்பேசி எண்கள் வெளியிடப்பட்டுள்ளன. எனவே பொதுமக்கள் அவசர உதவிக்கு மேற்கண்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம்.
கும்மிடிப்பூண்டி அடுத்த பெத்திகுப்பம் பகுதியில் உள்ள ரயில் பாதை அருகே அடையாளம் தெரியாத 32 வயது ஆண் ஒருவரின் உடல் அழுகிய நிலையில் இருப்பதை அப்பகுதி மக்கள் அறிந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த கும்மிடிப்பூண்டி இன்ஸ்பெக்டர் வடிவேல் முருகன் தலைமையில் போலீசார் அந்த உடலை மீட்டு பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் இறந்த நபர் யார் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.
புது கும்மிடிப்பூண்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் தலைமை ஆசிரியர் இந்துமதி. இவர் அரசுப் பள்ளியை தனியார் பள்ளிக்கு நிகராக கொண்டு வந்தார். இவரது சேவையை பாராட்டி தமிழக அரசு இருக்கு நல்லாசிரியர் விருது அறிவித்தது. இன்று ஆசிரியர் தினத்தை ஒட்டி நடைபெற்ற விழாவில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமை ஆசிரியை இந்துமதிக்கு விருதினை வழங்கி கௌரவித்தார்.
திருவள்ளூர் அடுத்த தொடுகாடு ஊராட்சி மன்ற தலைவர் பி.வெங்கடேசன் பதவி நீக்கம் செய்யப்பட்டார். ஊராட்சிக்கு நிதி இழப்பு செய்தது, சட்ட விதிமுறைகளை மீறி தன்னிச்சையாக செயல்பட்டது உறுதி செய்யப்பட்டதால் அவரை ஊராட்சி மன்ற தலைவர் பதவியில் இருந்து நீக்கி மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் உத்தரவிட்டுள்ளார்.
முன்னாள் குடியரசுத தலைவர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான இன்று ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. 1888 ஆம் ஆண்டு செப்.5 ஆம் தேதி திருத்தணி அருகே சர்வபள்ளி கிராமத்தில், பிறந்தார். 1954 ஆம் ஆண்டு இந்திய அரசு அவருக்கு ‘பாரத ரத்னா’ விருதினை வழங்கி கௌரவித்தது. 1967ஆம் ஆண்டு குடியரசுத் தலைவர் பதவியில் இருந்து ஓய்வுப் பெற்று சென்னையில் குடியேறினார். 86ஆவது வயதில், சென்னையில் காலமானார்.
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டம், சோழவரம் ஏரி பகுதியில் இன்று (04.09.2024) மாவட்ட ஆட்சியர் டாக்டர். த. பிரபுசங்கர் அவர்கள் 40 கோடி மதிப்பீட்டில் சோழவரம் ஏரியில் நீர்க்கசிவு தடுப்புச் சுவர், கரைகளை பலப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருவதை செயல்விளக்க படத்தினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் துறை சார்ந்த அலுவலர்கள் இருந்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் காவல்துறை சார்பில் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இரவு நேர அவசர உதவி உள்ளிட்ட தகவல்களுக்காக போலீசாரை அவர்களது தொடர்பு எண்களில் தொடர்பு கொள்ளலாம் என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இன்று இரவு பொதுமக்கள் தங்களின் அவசர தேவைகளுக்கு காவல்துறையை தொடர்பு கொள்ள வாய்ப்பு கிடைத்துள்ளது.
வடக்கு ஆந்திரா மற்றும் அதனை ஒட்டிய கடலோரப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நாளை ஒரு காற்றழுத்ததாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது. இதன் காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று இரவு 7 மணி வரை இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் வழங்கப்படும் டாக்டர். ராதாகிருஷ்ணன் விருதுக்கு இந்தாண்டு திருவள்ளூரில் ஆறு பேர் தேர்வு செய்யப்பட்டனர். அரசு உயர்நிலைப் பள்ளி ஆசிரியர் ப.ஸ்டேன்லி குமார், அரசு உயர்நிலை பள்ளி ஆசிரியர் சு.முரளி, அரசு உயர்நிலைப் பள்ளி ஆசிரியை சி.வரலக்ஷ்மி, தலைமை ஆசிரியை எஸ். மலர்க்கொடி, அரசு உயர்நிலைப் பள்ளி ஆசிரியை இ.காவேரி, தலைமை ஆசிரியர் ஜெயராமன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
திருவள்ளூரில் அமைந்துள்ள வீரராகவசுவாமி கோயில் என்பது விஷ்ணுவுக்காக அர்ப்பணிக்கப்பட்ட கோயிலாகும். இது விஷ்ணுவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.8 ஆம் நூற்றாண்டில் பல்லவர்களால் கட்டப்பட்டதாக முதலில் நம்பப்படுகிறது . இங்கு 9 ஆம் நூற்றாண்டின் பல்லவ வம்சத்தின் பிற்பகுதியில் உள்ள கல்வெட்டுகள் உள்ளன. சுமார் 5000 ஆண்டுகள் பழமையானது என்று உள்ளூர் புராணங்கள் கூறுகின்றன.
Sorry, no posts matched your criteria.