India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று (அக்.13) சட்டம் ஒழுங்கை உறுதிப்படுத்தும் நோக்கில் ரோந்து பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன. இதில் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் காவல் துறையினர் பங்கேற்றனர். முக்கிய சாலைகள், பேருந்து நிலையங்கள், சந்தைகள் உள்ளிட்ட பகுதிகளில் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டது. ரோந்து பணியில் ஈடுபட்ட அதிகாரிகளின் முழுமையான விவரங்கள் மாவட்ட காவல் துறையால் வெளியிடப்பட்டது.

திருத்தணி ரயில் நிலையத்திற்கு மும்பையிலிருந்து வந்த அதிவிரைவு ரயிலில், வடக்கு மண்டல ஐ.ஜி தலைமையிலான தனிப்படை போலீசார் சோதனை நடத்தினர். இதில் பெரும்பாக்கம், புதுப்பேட்டையை சேர்ந்த 6 பேர், 1500 போதை மாத்திரைகளுடன் பிடிபட்டனர். இவர்கள், மும்பையில் இருந்து போதை மாத்திரைகளை வாங்கி சென்னையில் அதிக விலைக்கு விற்பனை செய்ய முயன்றது தெரியவந்தது. திருத்தணியிலிருந்து சென்னை செல்ல முயன்றவர்களை கைது செய்தனர்.

லோன் மோசடி, சிட் ஃபண்ட், பரிசுச் சீட்டு, ஏலச்சீட்டு, கிரெடிட் கார்டு, டிஜிட்டல் பண மோசடி ஆகியன நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க TN போலீசில் பொருளாதார குற்றப்பிரிவு (EOW) என்ற சிறப்பு பிரிவு செயல்படுகிறது. இந்த மோசடியில் நீங்கள் சிக்கியிருந்தால் வடக்கு மண்டல SP-044-22500319, EOW CONTROLL ROOM- 044-22504332, உங்கள் பகுதி EOW அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம். நண்பர்களுக்கும் பகிரவும்.

உங்களை வேலையை விட்டு நீக்கினாலோ அல்லது சரியான சம்பளம் வழங்காவிட்டாலோ தொழிலாளர் நலவாரியத்தில் புகாரளிக்கலாம். வீட்டு வேலை செய்பவர்கள் நலவாரியம் – 04428110147, கட்டுமான தொழிலாளர் நலவாரியம் – 044-28264950, 044-28264951, 04428254952, உடலுழைப்பு தொழிலாளர் நலவாரியம் – 044-28110147, தொழிலாளர் உதவி ஆணையர் திருவள்ளூர் -044-27667117, 9445398745. ஷேர் செய்யுங்கள்

திருவள்ளூர் மக்களே, 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் வாக்காளர் அட்டையில் உங்கள் பெயர், EPIC எண், தந்தை பெயர், வயது, பாலினம், முகவரி ஆகியவை சரியாக உள்ளதா என தெரிந்துகொள்ள நீங்கள் அலுவலகங்களுக்கு நேரில் சென்று அலைய வேண்டாம். இந்த <

முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், 1 குடும்பம் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வருமானச் சான்றிதழ் ஆகியவற்றுடன் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மருத்துவ அடையாள அட்டை வழங்கும் மையத்தில் பதிவு செய்து, அடையாள அட்டையை பெற்றுக் கொள்ளலாம். மேலும் தகவல்களுக்கு 1800 425 3993 அழைக்கவும். ஷேர் பண்ணுங்க.

பட்டா மாறுதலுக்கு விண்ணப்பிக்க, பட்டா/சிட்டா விவரங்களை தெரிந்துகொள்ள மிகவும் எளிமையாக்க எங்கும் செல்லவேண்டாம். தமிழ்நாடு அரசு இணையதளம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. நீங்கள் அமர்ந்த இடத்திலேயே <

திருவள்ளூர் மக்களே, இந்திய ராணுவத்தில் Group-C பிரிவில் Electrician, Telecom Mechanic போன்ற பதவிகளில் காலியாக உள்ள 194 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 12th பாஸ் போதும். 18 வயது பூர்த்தியடைந்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். சம்பளமாக ரூ.20,200 வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <

முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான போட்டி தேர்வில் திருவள்ளூர் மாவட்டத்தில் 14 மையங்களில், காலை 10:00 முதல் மதியம் 1:30 மணி வரை நடந்த தேர்விற்கு, 4,454 பேர் விண்ணப்பத்திருந்தனர். இதில், 4,149 பேர் தேர்வு எழுதினர். 305 பேர் தேர்வு எழுத வரவில்லை. தேர்வு மையங்களில் கண்காணிப்பாளர்கள், பறக்கும் படை உள்ளிட்டவற்றில் தலைமை ஆசிரியர்கள், அலுவலர்கள் நியமிக்கும் பணியை, கல்வித் துறையினர் மேற்கொண்டனர்.

திருத்தணி முருகன் கோயிலில், முடி காணிக்கை மண்டபத்தில், ஆறு மாதமாக சுடு தண்ணீர் வழங்கும், ‘வாட்டர் ஹீட்டர்’ இயந்திரம் பழுதாகி உள்ளதால் பக்தர்கள் சிரமப்படுகின்றனர். பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்ற முடிகாணிக்கை செலுத்துகின்றனர். மேலும், குழந்தைகளுக்கு முதல் முறையாக முடி காணிக்கையும் செலுத்துகின்றனர். இந்நிலையில், குளிக்க வசதி இல்லை என்ற குற்றசாட்டு எழுந்துள்ளது.
Sorry, no posts matched your criteria.