India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருத்தணி முருகன் கோயிலில், நேற்று (ஏப்ரல் 7) திரளான பக்தர்கள் வருகை தந்தனர். கோயில் பார்க்கிங் பகுதியில் ரூ.1,50,000 மதிப்புள்ள தங்க காப்பு ஒன்று கிடந்துள்ளது. அதை எடுத்த சிறுமிகள் பத்திரமாக அங்கு பணியில் ஈடுபட்டிருந்த போலீசரிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து, நகையை தவறவிட்ட பக்தர் போலீசாரிடம் வந்து புகார் அளிக்க வந்தபோது, போலீசார் அந்த நகைகளை ஒப்படைத்து சிறுமிகளை பாராட்டி வாழ்த்தினர். ஷேர் பண்ணுங்க
திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், “திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்ட வழங்கல் அலுவலகங்களிலும் ஏப்ரல் 12 ஆம் தேதி ரேஷன் கார்டு குறைதீர் சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இந்த முகாமில் ரேஷன் கார்டுகளில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம் தொடர்பான குறைகளை உரிய ஆவணங்களுடன் அளித்து பயன்பெறலாம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. *நண்பர்களுக்கு பகிர்ந்து தெரியப்படுத்தவும்
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று (ஏப்ரல் 07) நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் பிரதாப் தலைமை தாங்கி கலந்து கொண்டார். அப்போது, பொதுமக்களிடமிருந்து 772 கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு, மனுக்களின் மீது உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி சம்பந்தப்பட்டதுறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இதில், அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள குழந்தைகள் மையங்களில் காலியாக உள்ள 301 அங்கன்வாடி பணியிடங்கள், 68 அங்கன்வாடி உதவியாளர் பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நியமனம் செய்யப்பட உள்ளன. பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம். தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். 25-35 வயதுடைய 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பெண்கள் விண்ணப்பம் செய்யலாம். 23ஆம் தேதிக்குள் இந்த <
திருவள்ளூர் மாவட்டத்தில், 2ஆவது மனைவி மற்றும் தனது 27 வயது மகளுடன் வசிப்பவர் 70 வயதுடைய நபர். மகள், வாய் பேசாத முடியாத, காது கேட்காத மாற்றுத்திறனாளி ஆவார். மகளுக்கு, அவரது தந்தை அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட அவர், உறவினர் பெண்ணிற்கு தந்தையின் அத்துமீறல் குறித்து தகவல் தெரிவித்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் அவரை நேற்று (ஏப்ரல் 6) கைது செய்தனர்.
பூந்தமல்லி கன்டோன்மென்ட் பகுதியைச் சேர்ந்தவர் ரோகித்குமார் (15). இவர், கடந்த 3ஆம் தேதி 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்காக பைக்கில் சென்றபோது, குன்றத்தூர் அருகே சாய்ராம் பொறியியல் கல்லூரி பேருந்து மோதியது. இதில், ரோகித்குமாருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. பேருந்தில் பயணித்த 9 பேர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். இந்த நிலையில், நேற்று (ஏப்ரல் 6) சிகிச்சை பலனின்றி ரோகித்குமார் உயிரிழந்தார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் குழந்தைகள் மையங்களில் காலியாக உள்ள 301 அங்கன்வாடி பணியாளர் மற்றும் 68 அங்கன்வாடி உதவியாளர் என மொத்தம் 369 பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ளன. 12 ஆம் வகுப்பு தேர்ச்சியடைந்த பெண்கள் <
சென்னை உயர்நீதிமன்றத்தில் சோப்தார், அலுவலக உதவியாளர் உள்ளிட்ட காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 392 பணியிடங்கள் உள்ளன. ரூ.15,700 – ரூ.58,100 சம்பளம் வழங்கப்படும். 8 முதல் 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே இதற்கு விண்ணப்பிக்க முடியும். விருப்பமுள்ளவர்கள் இந்த லிங்கை <
திருத்தணி அருகே உள்ள அகூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பூவரசன் (21). திருத்தணி அரசு கல்லூரியில் பயின்று வந்த இவர், கடந்த ஏப்ரல் 2ஆம் தேதி தனது நண்பர் ராகுலுடன் பைக்கில் திருத்தணி நோக்கி சென்றபோது, குமாரகுப்பம் அருகே எதிரே வந்த லாரி மோதி விபத்துக்குள்ளானார். பலத்த காயமடைந்த இருவரையும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில், பூவரசன் நேற்று (ஏப்ரல் 5) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
திருவள்ளூர் மாவட்டம் 1.1.1997-ல் செங்கல்பட்டு மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்டது. முதல் கலெக்டராக ஜெயஸ்ரீ ரகுநந்தன் (புகைப்படம்) 1.1.1997 அன்று பதவி ஏற்றார். அவரை சேர்த்து தற்போது வரை மாவட்டத்தில் 23 கலெக்டர்கள் பதவி வகித்துள்ளனர். இதில், 3 பெண்கள், 20 ஆண்கள். 23 ஆவது கலெக்டராக மு.பிரதாப் 04.02.2025 அன்று பதிவியேற்றார். உங்களுக்கு பிடித்த கலெக்டர் யார்? *நண்பர்களுக்கும் தெரியப்படுத்தவும்
Sorry, no posts matched your criteria.