Thiruvallur

News October 14, 2025

திருவள்ளூர்: அரசு திட்டம் வந்து சேரவில்லையா? கவலை வேண்டாம்

image

தமிழக அரசு “நீங்கள் நலமா?” என்ற தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அரசு திட்டங்கள் சென்றடையாதவர்கள்,<> இந்த லிங்க் மூலம்<<>> குறைகளைப் பதிவு செய்யலாம். இந்தத் தளத்தில், முதலமைச்சர் வீடியோ/ஆடியோ அழைப்புகள் மூலமாகவும், உயர் அதிகாரிகள் தொலைபேசி மூலமாகவும் நேரடியாக தொடர்புகொள்ளலாம். முதலமைச்சரின் நேரடிப் பார்வையில் குறைகள் உடனடியாக நிவர்த்தி செய்யப்படும். ஷேர்

News October 14, 2025

திருவள்ளூர் மருத்துவமனையில் சிகிச்சை சரியில்லையா?

image

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளை நம்பி தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர். இந்நிலையில், அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை சரி இல்லை என்றாலோ, பணியாளர்கள் சரியாக நடந்துகொள்ளவில்லை என்றாலோ பொதுமக்கள் TOLL FREE 104 எண்ணில் அல்லது உங்க மாவட்ட சுகாதார அலுவலகத்தில் புகார் செய்யலாம். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

News October 14, 2025

திருவள்ளூரில் மழை வெளுக்கும்!

image

தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய கடலோரப் பகுதிகளின் மேல், ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டத்திலும் புதுச்சேரியின் ஒரு சில இடங்களிலும் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, திருவள்ளூர் மாவட்டத்தில் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உங்கள் பகுதியில் வானிலை எப்படி உள்ளது என கமெண்ட் பண்ணுங்க.

News October 14, 2025

திருவள்ளூர்: ரயில்வேயில் நிரந்தர வேலை; இன்றே கடைசி!

image

தமிழக ரயில்வேயில் Seclection controller பணிக்கான வேலை வாய்ப்பு வெளியாகியுள்ளது. இதற்கு எதாவது ஒரு டிகிரி முடித்த 20-30 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த வேலைக்கு மொத்தம் 368 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மாத சம்பளம் ரூ.35,400 வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <>இங்கே கிளிக் <<>>செய்து இன்று அக்.14க்குள் விண்ணப்பிக்கவும். சந்தேகம் இருப்பின்: 9592001188 என்ற எண்ணை அழைக்கலாம். ஷேர் பண்ணுங்க.

News October 14, 2025

திருவள்ளூர்: கல்லூரி விடுதி உணவில் புழு, பூச்சி!

image

ஆவடியில் தனியார் கல்லூரியில் உள்ள விடுதியில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் தங்கி கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில், கல்லூரி விடுதியில் தரமற்ற உணவு வழங்கப்படுவதாக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். விடுதியில் வழங்கப்படும் உணவில் புழு, பூச்சிகள் இருப்பதாகவும் அதுபற்றி கல்லூரி நிர்வாகம் கண்டுகொள்ளாமல் அலட்சியமாக செயல்படுவதாகவும் குற்றஞ்சாட்டி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

News October 14, 2025

திருவள்ளூரில் 8 கிராம் தங்கம், ரூ.50,000 பணத்துடன் திருமணம்

image

TN அரசு சாதி மறுப்பு திருமணங்களை ஊக்குவிக்க டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி கலப்பு திருமண திட்டத்தை செயல்படுத்துகிறது. இதன்படி, மணமக்கள் 10th முடித்திருந்தால் ரூ.25,000, 8 கி தங்கம், டிகிரி பெற்றிருந்தால் ரூ.50,000, 8 கி தங்கம் வழங்கப்படுகிறது. இதற்கு, BC,MBC/SC,ST & FC/BC,MBC முறையில் திருமணம் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் தகவலுக்கு சமூக நல அலுவலரை அணுகலாம். இந்த தகவலை உடனே ஷேர் பண்ணுங்க.

News October 14, 2025

திருவள்ளூரில் வேலைவாய்ப்பு முகாம்!

image

திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு & தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தில் வரும் 17ம் தேதியன்று தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இம்முகாமில் 25-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கலந்து கொண்டு பணிவாய்ப்பு வழங்க உள்ளது. 10th, 12th, டிப்ளோமா & ITI படித்தவர்கள் கலந்து கொள்ளலாம். விருப்பமுள்ளவர்கள் இந்த <>லிங்க் <<>>மூலம் அக்.16-க்குள் முன்பதிவு செய்து கொள்ளலாம். தொடர்புக்கு 9626456509.

News October 14, 2025

திருவள்ளூர்: ஏரியில் மூழ்கி போக்குவரத்து ஊழியர் பலி

image

செங்குன்றம் அடுத்த அப்துல் மரக்காயர் தெருவைச் சேர்ந்தவர் முகமது யாசின் (39). இவர், சென்னை பல்லவன் இல்லத்தில் அமைந்துள்ள சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் தணிக்கையாளராக பணியாற்றி வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் காலை புழல் ஏரியில் நீச்சல் கற்றுக்கொள்வதற்காக நண்பருடன் சென்ற முகமது யாசின், நீச்சல் கற்றுக்கொண்டிருந்த போது, திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டு தண்ணீரில் மூழ்கி பலியானார்.

News October 14, 2025

திருவேற்காடு: மாணவருக்கு சரமாரி கத்தி வெட்டு

image

திருவாலங்காடு அருகே பள்ளி விளையாட்டு மைதானத்தில், மாமண்டூரை சேர்ந்த ராகவேந்திரன் (ம) அருங்குளத்தை சேர்ந்த தருண்குமார் சக மாணவர்களுடன் விளையாடி கொண்டு இருந்தனர். அப்போது 2 பேருக்கு வாக்குவாதம் ஏற்பட்டதில், ஆத்திரத்தில் ராகவேந்திரனை தருண்குமார் சரமாரி தாக்கி பாக்கெட்டில் மறைத்து வைத்திருந்த பேனா கத்தியால் ராகவேந்திரனை சரமாரி வெட்டியுள்ளான். ராகவேந்திரன் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுமதித்தனர்.

News October 14, 2025

பருவமழை குறித்து ஆலோசனை கூட்டம்

image

திருவள்ளுர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கத்தில் இன்று வடகிழக்கு பருவ மழை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பான ஆய்வு கூட்டம் கலெக்டர் மு.பிரதாப் தலைமையில் நடைபெற்றது. உடன் ஆவடி மாநகராட்சி ஆணையர், நீர்வளத்துறை அலுவலர்கள், நகராட்சி ஆணையர்கள், பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள் உள்ளனர்.

error: Content is protected !!