Thiruvallur

News August 9, 2025

திருவள்ளூரில் புறநகர் ரயில்கள் ரத்து

image

கும்மிடிப்பூண்டி – சென்னை (10.45 மணி), கும்மிடிப்பூண்டி ( மதியம் 1, 3.15 மணி), சூலூர்பேட்டை (1.15, 3.10மணி ), கும்மிடிப்பூண்டி மூர் மார்க்கெட் ( 2.30 மணி) நெல்லூர் சூலூர்பேட்டை (மாலை 6.45) சூலூர்பேட்டை மூர் சந்தை (இரவு 9) ரயில்கள் ரத்து செய்யப்பட்டு, காலை 10:30 மூர் சந்தை – பொன்னேரி, காலை 11:35 மூர் சந்தை -மீஞ்சூர், மதியம் 12:40 கடற்கரை- பொன்னேரி தடத்தில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது

News August 8, 2025

திருவள்ளூர்: முருகனுக்கு வெந்நீர் அபிஷேகம் செய்யும் விநோதம்

image

திருத்தணி மலையில் உள்ள கருவறைக்கு பின்புறம் சுவற்றில் உள்ள பாலமுருகனுக்கு மார்கழி திருவாதிரையில் வென்னீரால் அபிஷேகம் நடைபெறுகிறது. குளிர்காலம் என்பதால் குழந்தை முருகன் மீதான அன்பினால் இந்த வெந்நீர் அபிஷேகம் நடத்தப்படுகிறது. திருவண்ணாமலைக்கு அடுத்த படியாக கடவுளுக்கு வெந்நீரால் அபிஷேகம் செய்யப்படுவது இங்கு தான். இந்த பாலமுருகனை வணங்கினால் குழந்தை வரம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. ஷேர் பண்ணுங்க

News August 8, 2025

திருவள்ளூரில் EB கட்டணம் அதிகமா வருதா?

image

சமீபத்தில் சென்னையில் வசிக்கும் ஒருவருக்கு ரூ.91,000 மின் கட்டணம் வந்தது அனைவரையும் பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இதுபோன்ற பிரச்னைகளுக்கு நீங்கள் EB அலுவலகத்துக்கு செல்ல வேண்டும் என்று அவசியல் இல்லை. தமிழ்நாடு அரசின் TANGEDCO என்ற செயலியில் புகார் அளிக்கலாம். அல்லது 94987 94987 என்ற கட்டணமில்லா புகார் எண்ணை தொடர்பு கொண்டும் புகார் தெரிவிக்கலாம். இதில் மின் கட்டணத்தையும் செலுத்தலாம். ஷேர் பண்ணுங்க!

News August 8, 2025

திருவள்ளூர்: SBI வங்கியில் வேலை…

image

SBI வங்கியில் Customer Support மற்றும் Sales பிரிவில் உள்ள ஜூனியர் அசோசியேட் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 5,180 பணியிடங்கள். சென்னை வட்டாரத்திற்கு 380 பணியிடங்கள். 20 – 28 வயதுடைய டிகிரி படித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். கட்டாயம் தமிழ் தெரிந்திருக்க வேண்டும். ரூ.24,050 முதல் ரூ.64,480 வரை சம்பளம் வழங்கப்படும். இந்த <>லிங்கில் <<>>வரும் 26ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். ஷேர் செய்யுங்கள்

News August 8, 2025

திருவள்ளூர் மக்களுக்கு ஆட்சியர் அறிவிப்பு!

image

2025-2026 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள் வரும் ஆகஸ்ட் 22 முதல் செப்டம்பர் 12 வரை திருவள்ளூர் மாவட்டத்தில் நடத்தப்பட உள்ளது. இப்போட்டிகளில் கலந்துகொள்ள https://cmtrophy.sdat.in என்ற இணையதளம் முகவரி மூலமாக பொதுமக்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம் என திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News August 8, 2025

திருவள்ளூரில் இன்று கரண்ட் கட்!

image

திருவள்ளூர், தேர்வாய்கண்டிகை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று (ஆக., 8) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தேர்வாய்கண்டிகை, கரடிப்புத்துர், அமரம்பேடு, கோபல் ரெட்டி கண்டிகை, கண்ணன் கோட்டை, சின்ன பொம்மாசி குளம், பெரிய பொம்மாசி குளம் & அதை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்னிறுத்தம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க!

News August 8, 2025

திருவள்ளூர் இரவு ரோந்து போலீசார் விவரம்

image

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் இன்று இரவு 11 மணி முதல், காலை 7 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள பகுதிகளில், ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரியின் எண்கள், மேலே கொடுக்கப்பட்டுள்ளன. *இரவில் தொழிற்சாலைகளுக்கு வேலைக்கு செல்லும் பெண்களுக்கு பகிரவும்*.

News August 8, 2025

திருவள்ளூர் மக்களுக்கு ஆட்சியர் அறிவிப்பு

image

2025-2026 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள் வரும் 22.08.2025 முதல் 12.09.2025 வரை திருவள்ளூர் மாவட்டத்தில் நடத்தப்பட உள்ளது. இப்போட்டிகளில் கலந்துகொள்வதற்கான https://cmtrophy.sdat.in என்ற இணையதளம் முகவரி மூலமாக பொதுமக்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம் என திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

News August 7, 2025

திருவள்ளூர்: தமிழ்நாட்டின் கலாச்சார நுழைவு வாயில்

image

தமிழ்நாட்டின் வடக்கு பகுதியில் ஆந்திர, கர்நாடக எல்லையில் அமைத்துள்ள திருவள்ளூர் பல மொழிகள், மதம், பண்பாடு என பன்முக தன்மையோடு விளங்குகிறது. புலிகாட் ஏரி, டச்சு கல்லறை, குடியம் குகைகள் என தனக்கென சிறப்பான இடங்களை கொண்ட திருவள்ளூர் தமிழகத்தின் கலாச்சார நுழைவு வாயிலாகவும் உள்ளது. இங்குள்ள பூண்டி நீர்த்தேக்கம் தான் சென்னையின் நீர் தேவையில் பெரும் பங்கு வகிக்கிறது. நம்ம மாவட்ட பெருமைகளை ஷேர் பண்ணுங்க.

News August 7, 2025

சைபர் கிரைம் மோசடி பணம் மீட்பு

image

ஆவடி காவல் ஆணையரக இணையவழி குற்றப்பிரிவு போலீசாரால் 40 வழக்குகளில் மீட்கப்பட்ட 70 லட்சம் ரூபாய் பணத்தை ஆவடியில் உள்ள ஆவடி காவல் ஆணையராகத்தில் காவல் ஆணையாளர் கி.சங்கர் நேரில் உரியவர்களிடம் வழங்கினார்‌. இணைய வழி பணப்பரிவர்தனைகளில் எப்போதும் விழிப்போடு இருங்கள். புகார்களுக்கு 1930 ஐ தொடர்பு கொள்ளவும்.

error: Content is protected !!