India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு மைய அலுவலகத்தில் கல்வித் தகுதியை பதிவு செய்து எவ்வித வேலைவாய்ப்பும் கிடைக்காமல் 5 ஆண்டுகளுக்கும் மேலாக காத்திருக்கும் இளைஞர்களுக்காக மாதந்தோறும் உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்களுக்கு ரூ.200, தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.300, பிளஸ் 2 தேர்ச்சி ரூ.400 மற்றும் பட்டதாரிகளுக்கு ரூ. 600 வீதம் 3 ஆண்டுகளுக்கு உதவித் தொகை வழங்கப்படுகிறது.
திருவள்ளூரில் வெவ்வேறு இடங்களில் ரயிலில் அடிபட்டு 3 பேர் பலியாகினர். நேற்று திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே 35 வயதுள்ள ஆண் ஒருவர் தண்டவாளத்தை கடக்கும் போது ரயிலில் அடிபட்டு உயிரிழந்தார். புட்லூர் – செவ்வாய்பேட்டை ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தை கடந்த 35 வயதுள்ள ஆண் ஒருவர் ரயிலில் அடிபட்டு பலியானார். மேலும் செவ்வாய்பேட்டை ரயில் நிலையம் அருகே ரயில் மோதியதில் மூதாட்டி ஒருவர் உயிரிழந்தார்.
எண்ணூர் மற்றும் படப்பை அருகே 2 வேதனையூட்டும் சம்பவங்கள் அரங்கேறியுள்ளன. கடல் மற்றும் ஏரியில் நீரில் மூழ்கி 11 வயது சிறுவர்கள் சாய்மோனிஷ் மற்றும் சோஜான் ஆகியோர் நேற்று (ஏப்ரல் 10) உயிரிழந்தனர். சாய்மோனிஷ், தாழங்குப்பம் கடற்கரையில் அலையில் சிக்கி உயிரிழந்தார். சோஜான், ஆதனூர் ஏரியில் மீன் பிடிக்க சென்றபோது மூழ்கி உயிரிழந்தார். இருவரின் உடல்களும் மீட்கப்பட்டு, போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருவள்ளூரில் அரசு மற்றும் நிதி உதவி பெறும் பள்ளிகளின் சத்துணவு மையங்களில், காலியாக உள்ள 236 சமையல் உதவியாளர் பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 21- 40 வயதுள்ள பெண்கள் விண்ணப்பிக்கலாம். குடியிருப்பும் பணியிடமும் 3 கி.மீ. தூரத்தில் இருக்க வேண்டும். விண்ணப்பங்கள் www.tiruvallur.nic.in-இல் பதிவிறக்கம் செய்து, ஏப்ரல் 29ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ‘இ-சேவை’ மையங்களில், அரசு நிர்ணயித்த கட்டணத்தை மீறி கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பதாக புகார்கள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன. ரூ.200 வரை கூடுதலாக வசூலிக்கப்படுவதாக புகார் வருகின்றன. இதைத் தடுக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என கலெக்டர் பிரதாப் தெரிவித்துள்ளார். இதுகுறித்து 044-27662455 என்ற எண் மூலம் புகார் அளிக்கலாம் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.
மாவட்ட ஆட்சியர் – 044-27661600, மாவட்ட வருவாய் அலுவலர் – 9445000902, மாவட்ட திட்ட அலுவலர் – 044-27660421, மாவட்ட கருவூல அலுவலர் – 044-27660888, முதன்மைக் கல்வி அலுவலர் – 9384034214, காவல்துறை கண்காணிப்பாளர் – 044-27666555, மாவட்ட சமூக நல அலுவலர் – 044-27663912, துணை மேலாளர் (தாட்கோ) 044-27665539, மாவட்ட பதிவாளர் – 044-27222674, மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் – 9445000176
சென்னை, பள்ளிக்கரணை பகுதியைச் சேர்ந்தவர் சுந்தர். இவர், நேற்று (ஏப்ரல் 10) பண்ருட்டி பகுதியைச் சேர்ந்த உறவினர் அபிராமி என்பவருடன் கும்மிடிப்பூண்டி அடுத்த தடா பகுதியில் உள்ள நீர்வீழ்ச்சிக்கு சென்றுவிட்டு, பைக்கில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது ஆரம்பாக்கம் அருகே பின்னால் வந்த லாரி சுந்தரின் பைக் மீது மோதியது. இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த அபிராமி, லாரி சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தார்.
நாளை (ஏப்ரல் 12) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை, திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்ட வழங்கல் அலுவலகங்களில் ரேஷன் அட்டை திருத்த முகாம் நடத்தபட உள்ளன. ரேஷன் கார்டில் பெயர் நீக்கம், திருத்தம், சேர்த்தல், முகவரி மாற்றம், மொபைல் நம்பர் அப்டேட் போன்ற அப்டேட்களைச் செய்து கொள்ளலாம். இலவசமாகவே அப்டேட் செய்து கொள்ளலாம். கட்டணம் இல்லை. மறக்காமல் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுங்கள். ஷேர் பண்ணுங்க
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் இன்று (10/04/2025) இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களது அவசர தேவைக்கு மேலே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரிகளை அழைக்கலாம். அல்லது காவல்துறை உதவி எண் 100-ஐ தொடர்பு கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. *இரவில் வேலைக்கு செல்லும் பெண்கள் உட்பட அனைவருக்கும் பகிரவும். கண்டிப்பாக தேவைப்படும்.
திருவள்ளூர் மாவட்டத்தில் அடுத்து 5 நாட்களுக்கு வெப்பம் அதிகமாக காணப்படும் என்று தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் கூறியிருக்கிறார். இது குறித்து அவர், ‘ராயலசீமா, வட கர்நாடக பகுதியில் இருந்து வெப்ப அலை தமிழ்நாட்டின் நோக்கி வர வாய்ப்புள்ளதால் வெப்பம் அதிகமாக காணப்படும்’ என தெரிவித்துள்ளார். இதனால் அடுத்த 5 நாட்களுக்கு வெளியே செல்பவர்கள் குடை எடுத்து செல்லவும். *நண்பர்களையும் உஷார் படுத்தவும்*
Sorry, no posts matched your criteria.