India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருவள்ளூரில் அமைந்துள்ள வைத்திய வீரராகவப் பெருமாள் கோயில் நோய்களைத் தீர்க்கும் சிறப்பு வாய்ந்த தலமாக கருதப்படுகிறது. இக்கோயிலின் மூலவரான வீரராகவப் பெருமாள், பக்தர்களின் நோய்களைத் தீர்க்கும் “வைத்தியர்” என்று அழைக்கப்படுகிறார். இங்கு வழங்கப்படும் நெய், பால் மற்றும் தேன் கலந்து தயாரிக்கப்படும் பிரசாதத்தை உட்கொண்டால், உடல்நலக் குறைபாடுகள் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. ஷேர்!
‘தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி’ வரும் 18ம் தேதி முதல் 22ம் தேதி வரை சென்னையில் நடைபெற உள்ளது. இப்பயிற்சியில் நகையின் தரம், போலி நகைகளை அடையாளம் காணும் முறைகள் கற்றுத்தரப்படும். 10th முடித்தவர்கள் <
▶️ஸ்ரீவிஸ்வரூப பஞ்சமுக ஆஞ்சநேயர் சுவாமி திருக்கோயில்
▶️ஸ்ரீ வீரராகவஸ்வாமி திருக்கோயில்
▶️வடிவுடை அம்மன் உடனுறை தியாகராஜசுவாமி திருக்கோயில்
▶️பவானி அம்மன் திருக்கோயில், பெரியபாளையம்.
▶️அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், திருத்தணி
▶️தேவி கருமாரி அம்மன் திருக்கோயில். இவை எல்லாம் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மிக முக்கியமான கோயில்களாகும். இதை ஷேர் செய்து மற்றவர்களுக்கும் தெரியப்படுத்துங்க!
திருத்தணி முருகன் கோயிலுக்கு வடபழனியை சேர்ந்த இளங்கோ (22), ஸ்ரீராம் (24) ஆகியோர் தரிசனம் செய்ய வந்துள்ளனர். அப்போது, கோயில் ஊழியர்கள் பாலாஜி, ரமேஷ் தங்களுக்கு வேண்டியவர்களை மூலவர் சன்னிதி உள்ளே அனுப்பி தரிசனம் செய்ததாக கூறப்படுகிறது. அப்போது, இளங்கோ, ஸ்ரீராம் தங்களையும் உற்சவர் சன்னிதிக்குள் அனுமதிக்க வாக்குவாதம் செய்து அவர்களை தாக்கினர். இதுகுறித்து திருத்தணி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இந்திய உள்துறையின் கீழ் செயல்படும் புலனாய்வு துறையில் (Intelligence Bureau) உதவி மத்திய புலனாய்வு அதிகாரியாக (ACIO) பணிபுரிய சூப்பர் வாய்ப்பு. டிகிரி முடித்திருந்தால் போதும். மொத்தம் 3,717 காலிப்பணியிடங்கள் இருக்கு. ரூ.44,900 முதல் ரூ.1,42,400 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் இன்றைக்குள் <
பாடியநல்லூர் மேல்நிலைப்பள்ளியில் மக்கள் நலவாழ்வு துறை சார்பில் நலன் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இம்முகாமில் தமிழக நலத்துறை அமைச்சர் நாசர் கலந்துகொண்டு, மார்பகப் புற்றுநோய் பரிசோதனை, இலவச கண் பரிசோதனை, காது-மூக்கு-தொண்டை சிகிச்சை மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான சிகிச்சைகள் உள்ளிட்ட பல்வேறு மருத்துவ உதவிகளை துவக்கி வைத்தார். இந்த முகாமில் நூற்றுக்கணக்கானோர் பயனடைந்தனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் இன்று (ஆகஸ்ட் 09) இரவு 11 மணி முதல், காலை 7 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள பகுதிகளில், ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரியின் எண்கள், மேலே கொடுக்கப்பட்டுள்ளன. இரவில் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு பகிரவும்.
திருவள்ளூர் இளைஞர்களே, ஐடி துறையில் இளைஞர்களுக்கு எளிதில் வேலை கிடைக்கும் விதமாக, தமிழக அரசு இலவச பயிற்சிகளை வழங்கி வருகிறது. இதில் JAVA, C++, J2EE, Web Designing, Coding, Testing என பல்வேறு Courseகள் உள்ளன. இதற்கான வகுப்புகள் சென்னையில் நடைபெறுகிறது. இங்கே <
பேருந்து நிலையங்கள், சாலையோர மோட்டல்களில் உணவு பொருட்களை MRPஐ விட கூடுதல் விலை கொடுத்து வாங்கிருப்பீர்கள். அவ்வாறு விற்பது குற்றம். MRPஐ விட கூடுதல் விலைக்கு விற்பது, எக்ஸ்பயரி தேதி மாற்றி வைப்பது, வேறு ஸ்டிக்கரை அதன்மேல் ஒட்டி வைப்பது போன்றவற்றை கண்டால் FSSAIன் 9444042322 வாட்சப் எண்ணுக்கு புகார் செய்யலாம் (அ) மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றத்தில் புகார் செய்யலாம். <<17350890>>தொடர்ச்சி<<>>
FSSAI (அ) மாவட்ட நுகர்வோர் மன்றத்தில் புகார் செய்யும் முன் அதற்கான ஆதாரங்களை கையில் வைத்திருக்க வேண்டும். வீடியோ/ புகைப்பட ஆதாரங்கள், பொருளை வாங்கியதற்கான ரசீது , கடையின் முழுமையான முகவரி போன்ற ஆதாரங்களோடு புகார் செய்யும் போது அதிகாரிகள் உரிய விசாரணை செய்து கடையின் மீது நடவடிக்கை எடுப்பார்கள். மற்றவர்களும் தெரிந்து கொள்ள ஷேர் பண்ணுங்க.
Sorry, no posts matched your criteria.