Thiruvallur

News October 17, 2025

திருவள்ளூர்: இனி EB ஆபீஸ் போகத் தேவையில்லை!

image

திருவள்ளூர் மக்களே, அதிக மின் கட்டணம், மின்தடை, மீட்டர் பழுது, மின் திருட்டு போன்ற புகார்களுக்கு இனி நேரடியாக மின்வாரிய அலுவலகம் செல்லத் தேவையில்லை. நீங்கள் உங்கள் வீட்டில் இருந்தபடியே, செல்போனில் இங்கே <>கிளிக்<<>> செய்து “TNEB Mobile App” பதிவிறக்கம் செய்து புகார் அளிக்கலாம். அல்லது 94987 94987 என்ற கட்டணமில்லா எண்ணை தொடர்பு கொண்டு புகார் செய்யலாம். மற்றவர்களுக்கும் ஷேர் செய்து தெரியப்படுத்துங்க.

News October 17, 2025

திருவள்ளூரில் இன்று வேலைவாய்ப்பு முகாம்!

image

திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு & தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தில் வரும் 17ம் தேதியன்று தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இம்முகாமில் 25-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கலந்து கொண்டு பணிவாய்ப்பு வழங்க உள்ளது. 10th, 12th, டிப்ளோமா & ITI படித்தவர்கள் கலந்து கொள்ளலாம். விருப்பமுள்ளவர்கள் இந்த லிங்க் மூலம் அக்.16-க்குள் முன்பதிவு செய்து கொள்ளலாம். தொடர்புக்கு 9626456509.

News October 17, 2025

திருவள்ளூரில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்!

image

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று (அக்.17) உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, 1.அம்மா மண்டபம்-TNHB ஆவடி, 2.கல்யாணி திருமண மண்டபம்-பூந்தமல்லி, 3.சாய் ராம் மஹால்-சிறுவானூர், 4.கிராம சேவை மையம் கட்டிடம்-பொத்தூர், 5.ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி அருகில்-தலக்காஞ்சேரி, 6.ஹரி பிரியா திருமண மஹால்-நசரத்பேட்டை ஆகிய இடங்களில் நடைபெறவுள்ளது. ஷேர் பண்ணுங்க.

News October 17, 2025

திருவள்ளூர்: இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

திருவள்ளூர் மாவட்டத்தில் (16.10.2025) இன்று இரவு ரோந்து பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் விவரம் காவல் நிலையம் வாரியாக மக்களுக்கு எளிய தொடர்புக்காக வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் அவசர உதவி, பாதுகாப்பு, குற்றநிகழ்வுகள் தடுப்பு மற்றும் ரோந்து சம்பந்தமான தகவல்களை பெற இந்த விவரங்களை பயன்படுத்தலாம். இது மக்கள் பாதுகாப்பையும், போலீஸ் சேவையை மேம்படுத்தும் முயற்சியாகும்.

News October 16, 2025

டெங்கு காய்ச்சல் தடுப்பு குறித்த ஆய்வு கூட்டம்

image

திருவள்ளுர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் இன்று பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவ துறை சார்பில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை குறித்த ஆய்வு கூட்டம் கலெக்டர்.பிரதாப் தலைமையில் நடைப்பெற்றது. உடன் மாவட்ட சுகாதார அலுவலர்கள், மரு.பிரபாகரன், ஆவடி மாநகராட்சி நல அலுவலர் திருவேற்காடு நகராட்சி நல அலுவலர் (ம) துறை சார்ந்த அலுவலர்கள் உள்ளனர்.

News October 16, 2025

திருவள்ளூர் மாவட்ட இரவு ரோந்து காவலர் விவரம்!

image

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று (அக்.16) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News October 16, 2025

திருவள்ளூர்: இனி அலைச்சல் வேண்டாம், ஒரு மெசேஜ் போதும்!

image

திருவள்ளூர் மக்களே கேஸ் சிலிண்டரை புக்கிங் செய்ய போனில் இருந்து ஒரு SMS அனுப்பினாலே போதும். இண்டேன் சிலிண்டர் பயன்படுத்துவோர் ‘REFILL’ என டைப் செய்து 77189 55555 என்ற எண்ணுக்கு அனுப்ப வேண்டும். இதுவே பாரத் சிலிண்டர் பயன்படுத்துவோர் 18002 24344 என்ற எண்ணுக்கும், எச்.பி. சிலிண்டர் பயன்படுத்துவோர் 1906 என்ற எண்ணுக்கு மெசேஜ் அனுப்பி அலைச்சல் இல்லாமல் கேஸ் சிலிண்டரை ஈசியாக புக்கிங் செய்யலாம்.

News October 16, 2025

திருவள்ளூர்: ரோடு சரியில்லையா? இதோ தீர்வு!

image

திருவள்ளூர் மக்களே உங்கள் பகுதி சாலைகள் குண்டும் குழியுமாக மிக மோசமான நிலையில் காட்சியளிக்கிறதா? அதுகுறித்து யாரிடம் புகார் அளிப்பது என்றும் தெரியவில்லையா? இனி கவலை வேண்டாம். இப்போதே உங்கள் போனில் தமிழக அரசின் ‘நம்ம சாலை’ என்ற செயலியை பதிவிறக்கம் செய்து, உங்கள் புகாரை புகைப்படத்துடன் பதிவிட்டால் சாலையை சீரமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். இந்த சூப்பரான தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க.

News October 16, 2025

திருவள்ளூர்: உங்க வீட்டில் ஆண் குழந்தை இருக்கா?

image

பொன்மகன் சேமிப்பு திட்டம் ஆண் குழந்தைகளின் நலனுக்காக 2015-ல் தொடங்கப்பட்டது. 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பெற்றோர் (ம) பாதுகாவலர் மூலமாகவும், 10 வயதிற்கு மேற்பட்டவர்கள் தாங்களாகவே கணக்கை துவக்க முடியும். (எ.கா) மாதம் 1000 என ஆண்டுக்கு ரூ.12,000 முதலீடு செய்தால் 15 ஆண்டு முடிவில் ரூ.1,80,000 (ம) ரூ.1,35,572 வட்டியுடன் மொத்தமாக ரூ.3,14,572 கிடைக்கும். உடனே அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க

News October 16, 2025

திருவள்ளூருக்கு மஞ்சள் எச்சரிக்கை!

image

திருவள்ளூர் மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று (அக்.16) கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மேலும், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுக்கும் கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ள நிலையில், பரவலாக மழையை எதிர்பார்க்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே முன்னெச்சரிக்கையா இருங்க மக்களே! மற்றவர்களுக்கும் ஷேர் செய்து தெரியப்படுத்துங்கள்.

error: Content is protected !!