Thiruvallur

News August 12, 2025

திருவள்ளூர் இரவு ரோந்து போலீசார் விவரம்

image

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் இன்று (11/08/2025) இரவு 11 மணி முதல், காலை 7 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள பகுதிகளில், ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரியின் எண்கள், மேலே கொடுக்கப்பட்டுள்ளன. இரவில் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு பகிரவும்.

News August 12, 2025

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

திருவள்ளூர், பூவிருந்தவல்லியில் உள்ள பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு தொழிற்பயிற்சி மையத்தில் 2025-2026 ஆம் ஆண்டிற்கான சேர்க்கை நடைபெறவுள்ளது. “புத்தக்கட்டுநர்” பிரிவில் (ஆண்கள்/பெண்கள்) இந்த ஓராண்டுப் பயிற்சி அளிக்கப்படவுள்ளது. தரமான உணவுடன் கூடிய விடுதி வசதியும் உள்ளது. பார்வை குறைபாடுள்ள மாற்றுத்திறனாளிகள் இந்தப் பயிற்சியில் சேர்ந்து பயனடையலாம் என மாவட்ட ஆட்சியர் பிரதாப் தெரிவித்துள்ளார்.

News August 11, 2025

திருவள்ளூர்: 8வது போதும்.. கைநிறைய சம்பளத்தில் அரசு வேலை!

image

திருவள்ளூர் மக்களே, தமிழ் வளர்ச்சித் துறையின் கீழ் செயல்படும், செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலி திட்ட இயக்ககத்தில், அலுவலக உதவியாளர் பணியிடம் நிரப்பப்படவுள்ளது. ரூ. 15,700 முதல் ரூ. 50,000 வரை சம்பளம் வழங்கப்படும். 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது. விண்ணப்பிக்கும் முறை மற்றும் விவரங்களை அறிய 044-29520509 எண்ணுக்கு அலுவலக நேரங்களில் அழைக்கலாம். கடைசி தேதி 16.08.2025 ஆகும். SHARE IT

News August 11, 2025

போதைப்பொருள் விழிப்புணர்வு உறுதிமொழி

image

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி உலகநாத நாராயணசாமி அரசினர் கல்லூரியில், போதை பொருட்கள் இல்லாத தமிழ்நாடு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. துணை முதல்வர் உதயநிதி காணொலிக் காட்சி மூலம் உறுதிமொழி ஏற்றுக் கொண்டார். பொன்னேரி சார் ஆட்சியர் ரவிக்குமார், கல்லூரி முதல்வர் தில்லை நாயகி, வட்டாட்சியர் சோமசுந்தரம், காவல் துறை மதுவிலக்கு அமல் பிரிவு அதிகாரிகள் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்.

News August 11, 2025

திருவள்ளூரில் ஆதார் கார்டு வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு!

image

உங்கள் ஆதார் கார்டுடன் Address Proof-ஐ இணைத்து விட்டீர்களா? இல்லையெனில், <>இந்த இணையத்தளத்தில்<<>> இணைத்துக் கொள்ளுங்கள். இதன் மூலம் உங்கள் ஆதார் சேவையை எளிதாகவும், வேகமாகவும் பெற முடியும். Address Proof-காக ரேஷன் கார்டு, பான் கார்டு, லைசன்ஸ், பாஸ்போர்ட், EB, கியாஸ், குடிநீர் கட்டண ரசீது போன்றவற்றை பயன்படுத்தலாம். மேலும் தகவல்களுக்கு 1947 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுங்கள். ஷேர் பண்ணுங்க. <<17368585>>தொடர்ச்சி<<>>

News August 11, 2025

திருவள்ளூரில் ஆதார் கார்டு வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு!

image

myaadhaar என்ற இணையதளத்திற்கு சென்று Document Update என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுங்கள். அதற்குள் Click to Submit என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுத்து விவரங்களை கொடுங்கள். Address Proof-க்கான புகைப்படத்தை பதிவேற்றம் செய்யுங்கள். 2026 ஜூன் மாதம் 14ஆம் தேதி வரை இதனை இலவசமாக செய்யலாம். இது கடினமாக இருந்தால் இ-சேவை மையங்களுக்கு சென்றும் செய்து கொள்ளலாம். உங்கள் பகுதியில் உள்ள <>இ-சேவை மையங்கள்<<>>. ஷேர் பண்ணுங்க

News August 11, 2025

திருவள்ளூர் மாவட்ட பொது சுகாதாரத் துறையில் வேலை!

image

திருவள்ளூர், மாவட்ட சுகாதார துறையின் கீழ் செவிலியர், லேப் டெக்னீசியன் & IT Coordinator பணியிடங்களுக்கு 84 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு நர்சிங், DMLT & B.Tech முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு சம்பளம் ரூ.21,000 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் ஆகஸ்ட் 20ஆம் தேதிக்குள் <>இந்த லிங்க்கை<<>> கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம். மற்றவர்களும் தெரிந்துகொள்ள ஷேர் பண்ணுங்க!

News August 11, 2025

திருவள்ளூர்: கணவன் மீது எண்ணெயை ஊற்றிய மனைவி!

image

புழல், லட்சுமிபுரம் காந்திஜி தெருவை சேர்ந்தவர் காதர் பாஷா. இவர் நிலோபர் நிஷா என்பவரை மூன்றாவதாக திருமணம் செய்துகொண்டார். காதர் பாஷா தான் சம்பாதிக்கும் பணத்தை வீட்டில் தராமல் இருப்பதால் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று (ஆகஸ்ட் 10) இரவு ஏற்பட்ட வாக்குவாதத்தில் நிலோபர் நிஷா, காதர் பாஷா மீது கொதிக்கும் எண்ணையை ஊற்றியுள்ளார். இதுகுறித்து புழல் போலீசார் விசாரிக்கின்றனர்.

News August 11, 2025

மனைவி கண்முன்னே கணவர் விபத்தில் பலி

image

திருவள்ளூர் மாவட்டம் குமாரகுப்பம் பகுதியில், ஸ்கூட்டரில் சென்ற குமார் – சுதா தம்பதி விபத்தில் சிக்கியதில் குமார் உயிரிழந்தார். ஸ்கூட்டரை இயக்கும்போது மனைவி சுதாவிடம் பேசியபடியே சென்றதால் கவனம் சிதறி சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிராக்டரை மீதி மோதியதாக தெரிகிறது. இந்த விபத்தில் மனைவி சுதா கண் முன்னே குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

News August 11, 2025

திருவள்ளூர் இரவு ரோந்து போலீசார் விவரம்

image

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று இரவு 11 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில், ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

error: Content is protected !!