Thiruvallur

News April 13, 2025

குடும்ப ஐஸ்வர்யம் அருளும் திருத்தணி முருகர்

image

திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மிகவும் சக்திவாய்ந்த தெய்வமாக வீற்றிருக்கும் முருகனை மற்ற விஷேச நாட்களை காட்டிலும் தமிழ் புத்தாண்டில் வணங்கினால் பல நன்மைகள் உண்டாகும். நாளை தமிழ் புத்தாண்டு அன்று முருகனை வணங்கினால் வாழ்வில் இதுவரை இருந்த தடைகள் நீங்கி குடும்ப ஐஸ்வர்யம், தீர்க்க ஆயுள் கிட்டுமாம். உங்க நண்பர்களுக்கு மறக்காம ஷேர் பண்ணுங்க

News April 13, 2025

திருவள்ளூரில் இன்று இயற்கை வேளாண் சந்தை

image

திருவள்ளூர் மாவட்ட கலெக்டரின் அறிவிப்பின் பேரில், இன்று திருவள்ளூர் உழவர் சந்தையில் இயற்கை வேளாண் சந்தை துவங்கவுள்ளது. காய்கறி, பழம், மரச்செக்கு எண்ணெய், பாரம்பரிய அரிசி, தேன், பனை வெல்லம் உள்ளிட்டவை குறைந்த விலையில் விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இச்சந்தை, ஒவ்வொரு மாதத்தின் 2வது ஞாயிறு காலை 9 முதல் மாலை 6 மணி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

News April 13, 2025

பெண்களுக்கு ரூ.50,000 நிதியுதவி

image

மத்திய அரசின் உணவு தன்னிறைவு திட்டமான அன்னப்பூர்ணா திட்டத்தின் கீழ், பெண்களுக்காக அன்னபூர்ணா என்ற திட்டத்தை SBI வங்கி செயல்படுத்தி வருகிறது. புதிதாக கேட்டரிங், பேக்கரி தொழில் தொடங்க விருப்பம் உள்ள பெண்கள் இந்த திட்டத்தின்கீழ் கடன் பெறலாம். இதற்கு எந்தவித பிணயமும் தேவையில்லை. இதுகுறித்த முழு தகவலை உங்கள் ஊரில் உள்ள SBI வங்கி கிளைக்கு சென்று தெரிந்து கொள்ளுங்கள். ஷேர் பண்ணுங்க

News April 13, 2025

தண்ணீரில் மூழ்கி பள்ளி மாணவன் பலி

image

பள்ளிப்பட்டு வட்டம் பொதட்டூர்பேட்டை பகுதியை சேர்ந்தவர் அண்ணாமலை. இவரது மகன் குமரேசன் வயது (16). அந்த பகுதியில் உள்ள பள்ளியில் படித்து வருகிறார். இவர் நேற்று (ஏப்ரல்.12) மாலை, நகரி திண்டிவனம் ரயில் பாதைக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் குளிக்க சென்றுள்ளார். அப்போது தண்ணீரில் மூழ்கி இறந்துள்ளார். இது குறித்து பொதட்டூர்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

News April 13, 2025

75 வயது மூதாட்டியிடம் பாலியல் அத்துமீறல்

image

செங்குன்றம் அருகே சிரங்காவூர் கிராமத்தைச் சேர்ந்த 75வயது மூதாட்டி தனியாக வசித்து வருகிறார். கடந்த 8 ம் தேதி, மூதாட்டி வீட்டில் தனியாக இருந்த போது, வாலிபர் ஒருவர் வீட்டுக்குள் புகுந்து மூதாட்டியிடம் பாலியல் ரீதியாக அத்துமீறியுள்ளார். மூதாட்டி கூச்சலிடவே வாலிபர் தப்பியோடினார். புகாரின் அடிப்படையில் விச்சூரை சேர்ந்த தமிழன்பன் சந்துரு (23) என்பவரை நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.

News April 12, 2025

திருவள்ளூர் இரவு ரோந்து போலீசார் விவரம் 

image

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் இன்று (12/04/2025) இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.  மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள பகுதிகளில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன. *குற்றங்கள் அதிகரிக்கும் இந்நாளில் இது கண்டிப்பாக உதவும். பகிரவும்*

News April 12, 2025

திருவள்ளூர் மாவட்ட சத்துணவு மையத்தில் வேலை வாய்ப்பு

image

திருவள்ளூர் மாவட்ட பள்ளி சத்துணவு மையங்களில் காலியாக உள்ள 236 சமையல் உதவியாளர் பணியிடங்கள் நேரடியாக நியமனம் செய்யப்படவுள்ளன. பணியிடங்களின் எண்ணிக்கை, அந்தந்த வட்டார அலுவலகங்களில் தகவல் பலகையில் ஒட்டப்படும். 18-40 வயதுடைய 10th பாஸ்/ஃபெயில் ஆன பெண்கள் <>இங்கு கிளிக் செய்து<<>> ஏப்.29-க்குள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார். *அரசு வேலைன்னா சும்மாவா!! தெரிந்த 18-40 வயது பெண்களுக்கு பகிரவும்*

News April 12, 2025

திருவள்ளூர் மக்களே! இன்று கட்டாயம் போக வேண்டிய கோவில்

image

பங்குனிமாத சனிக்கிழமையில் வரும் பௌர்ணமி ரொம்ப ஸ்பெசல் தான். இன்றைய தினம் சிவனுக்கு பால் அபிஷேகம் (or) பூக்களால் அர்ச்சனை செய்தால் பல தோஷங்கள் நீங்கும் என்பது ஐதீகம். செல்ல வேண்டிய சிவன் கோவில்கள் திருத்தணி வீரட்டேசுவரர் கோவில், திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோவில், பூண்டி ஊன்றீஸ்வரர் கோவில், ஊத்துக்கோட்டை பள்ளிகொண்டீஸ்வரர் கோவில், திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோவில். *நண்பர்களுக்கும் பகிரவும்

News April 12, 2025

திருவள்ளூர்: இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு

image

மத்தியமேற்கு வங்கக்கடலில் நிலவும் கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று பிற்பகல் முதல் இரவு வரை சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், திருவள்ளூர், வேலூர், திருச்சி, மதுரை, கோயம்புத்தூர், சேலம், நாமக்கல், திருநெல்வேலி, தேனி, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், கரூர், தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

News April 12, 2025

இந்திய கடற்படையில் +2 முடித்தவர்களுக்கு வேலை

image

இந்திய கடற்படையின் மருத்துவப் பிரிவில் காலியாக உள்ள மருத்துவ உதவியாளர் பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆண்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். மாதம் ரூ.21,700 – ரூ.69,100 சம்பளம் வழங்கப்படும். குறைந்தபட்சம் 50 சதவிகித மதிப்பெண்கள் பெற்று பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணம் ரூ.60. இந்த <>இணையதளத்தில் <<>>வரும் ஏப்ரல்.16க்குள் விண்ணப்பிக்க வேண்டும். ஷேர்

error: Content is protected !!