India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பிஎம் கிசான் நிதியுதவியை பெற விவசாயிகள் மார்ச் 31க்குள் தேசிய அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்க வேண்டும் என திருவள்ளூர் ஆட்சியர் தெரிவித்துள்ளார். 41,973 பயனாளிகளில் 16,250 பேர் மட்டும் பதிவு செய்துள்ளனர். மீதமுள்ள விவசாயிகள் ஆவணங்களுடன் அரசு அலுவலர்கள், பொதுசேவை மையங்களை அணுக வேண்டும். ஏப்ரல் மாதம் வழங்கப்படும் 20ஆவது தவணை நிதியை பெற, விவசாயிகள் உடனடியாக பதிவு செய்ய வேண்டும் எனக் கூறியுள்ளார்.
ரசாயனம் கலக்கப்பட்ட தர்பூசணியை சாப்பிடும்போது நெஞ்செரிச்சல், செரிமான கோளாறு, புற்றுநோய் போன்ற ஆபத்துகள் வருமென மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். தர்பூசணி பழங்களை வெட்டி பஞ்சு அல்லது டிஷ்யூ பேப்பர் கொண்டு துடைத்தால் நிறம் அதில் ஒட்டிக் கொண்டால் அது ரசாயன கலப்பு கொண்ட பழம். எனவே, கடைகளில் வாங்கும்போது அதில் எங்காவது துளையிடப்பட்டு இருக்கிறதா என்பதை மக்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். ஷேர் பண்ணுங்க
திருவள்ளூரில் இன்று (மார்.23) காலை 11 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், ஒருசில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சாலைகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்க வாய்ப்புள்ளது. எனவே, வெளியே செல்லும் பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருங்கள். ஷேர் செய்யுங்கள்
திருத்தணி – அரக்கோணம் நெடுஞ்சாலையில் இருந்து புறவழி நெடுஞ்சாலை செல்லும் சாலையோரம், லாரி ஒன்று நேற்று (மார்.22) நின்று கொண்டிருந்தது. அப்போது, அரக்கோணத்தில் இருந்து திருப்பதி நோக்கி சென்ற லாரி, நின்று கொண்டு இருந்த லாரியின் மீது பலமாக மோதியது. இதில் லாரியை ஓட்டி வந்த ஓட்டுநர் கந்தன் படுகாயம் அடைந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை பத்திரமாக மீட்டு திருத்தணி அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
திருவள்ளூரில் இன்று (மார்.22) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய, லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, அம்பத்தூர், ஆவடி, திருமழிசை போன்ற பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது. எனவே, பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் குடை அல்லது ரெயின்கோர்டை எடுத்துச் செல்லுங்கள். உங்க ஏரியாவில் மழையா?
லாரியும், மோட்டார் சைக்கிளும் மோதிக் கொண்ட விபத்தில் பட்டாபிராம் அனைத்து மகளிர் காவல் நிலைய உதவி காவல் ஆய்வாளர் மெர்சி உயிரிழந்த சம்பவம் போலீஸார் மற்றும் பொதுமக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது. அவரது இறப்புக்கு பலரும் அஞ்சலி செலுத்தி வரும் நிலையில் திருவள்ளுர் மாவட்ட எஸ்.பி. நேரில் சென்று இறுதி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வில் திருவள்ளூர் மாவட்ட போலீசார் பலரும் கலந்துக்கொண்டனர்.
திருவள்ளூர் கேன் குடிநீா் உற்பத்தியாளா்கள், விற்பனையாளா்களுக்கான உணா்திறன் பயிற்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஒரு குடிநீா் கேனை 50 முறைக்கு மேல் பயன்படுத்த வேண்டாம். அழுக்கடைந்த கீறல் விழுந்த குடிநீா் கேன்களை பொதுமக்களுக்கு விநியோகிக்க வேண்டாம். அதுமட்டுமன்றி நேரடியாக சூரிய ஒளியில் வைக்கப்பட்ட குடிநீா் கேன்களை பயன்படுத்த வேண்டாம். குடிநீரின் தரத்தை உறுதி செய்வது அவசியம் என வலியுறுத்தப்பட்டது.
வீரராகவர் கோவில் குளம் அருகே ஒருவர் இறந்து கிடப்பதாக நேற்று போலீசாருக்கு தகவல் கிடைத்து. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரை பற்றி விசாரித்த பொழுது இவர் அதே பகுதியை சேர்ந்த சேகர் (தொழிலாளி) என்பதும் குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர் நேற்று முன்தினம் குடித்து விட்டு கால்வாய் அருகே படுத்து கிடந்தவர் உயிரிழந்துள்ளார் என தெரிவித்தனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
Sorry, no posts matched your criteria.