Thiruvallur

News March 25, 2025

மகளுக்கு பாலியல் தொல்லை: தந்தைக்கு ஆயுள் தண்டனை

image

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே பொதட்டூர்பேட்டையைச் சேர்ந்த முருகன் (41) என்பவர், தனது 11 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக 2019ல் அவரது மனைவி போலீசில் புகார் அளித்தார். போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட முருகன் மீது திருவள்ளூர் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றது. குற்றம் நிரூபிக்கப்பட்டதை தொடர்ந்து, சிறப்பு நீதிபதி, முருகனுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கினார்.

News March 25, 2025

திருவள்ளூர் மக்களே கண்டிப்பா இத பண்ணிடுங்க!

image

தமிழக அரசின் அறிவிப்பையடுத்து தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் AAY மற்றும் PHH குடும்ப அட்டைதாரர்கள், வரும் மார்ச் 31 ஆம் தேதிக்குள் தங்களுடைய நியாய விலைக் கடைக்கு சென்று கைரேகையை பதிவு செய்ய வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. தவறும் பட்சத்தில் குடும்பஅட்டை ரத்து செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. குடும்ப அட்டைதாரர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

News March 25, 2025

பாலியல் தொல்லை கொடுத்த தந்தைக்கு ஆயுள் தண்டனை

image

திருவள்ளூர், பொதட்டூர்பேட்டை நடுத்தெருவில் வசிப்பவர் முருகன் வயது 37 தன்னுடைய மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக வந்த புகாரின் பேரில் ஆர்கே பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு பதிந்து முருகனை கைது செய்தனர். இந்த வழக்கு திருவள்ளூர் POCSO நீதிமன்றத்தில் நீதிபதி சரஸ்வதி முன்னிலையில் நடைபெற்றது. இந்த வழக்கில் முருகனுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி சரஸ்வதி தீர்ப்பளித்தார்.

News March 25, 2025

அரசு பேருந்து மீது கார் மோதி விபத்து

image

திருத்தணி, சென்னை-திருப்பதி நெடுஞ்சாலையில் உள்ள குன்னத்தூர் பேருந்து நிறுத்தம் அருகே முன்னால் சென்ற அரசு பேருந்து ஓட்டுநர் திடீரென பிரேக் போட்டுள்ளார். இதனால் பின்னால் வந்த பிரகாஸ் என்பவரின் கார் அரசு பேருந்து மீது மோதியது. இதில் காரின் முன் பகுதி சேதமான நிலையில் காரில் வந்தவர்கள் லேசான காயங்களுடன் உயிர்த்தப்பினர். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

News March 25, 2025

ஆவடி இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

ஆவடியில் இன்று இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

News March 24, 2025

வேண்டிய வரம் அருளும் பவானி அம்மன் திருக்கோவில்

image

திருவள்ளூர், பெரியபாளையத்தில், ஆரணி ஆற்றின் கரையோரத்தில் அமைந்துள்ளது பவானி அம்மன் திருக்கோவில். இத்தல அன்னையிடம் மாங்கல்ய பலம் வேண்டி வரும் பெண்களின் எண்ணிக்கை அதிகம். மேலும் வாழ்வில் வளம் பெருகவும், குழந்தை வரம் கிடைக்கவும் வழிபடுபவர்களும் ஏராளம். வேப்பிலை ஆடை உடுத்தி பிரார்த்தனை செய்தால், அனைத்து வேண்டுதல்களும் நிறைவேறும் என்பது இங்கு வரும் பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. ஷேர் பண்ணுங்க

News March 24, 2025

சென்னை TIDEL Parkல் வேலை- ரூ.1,87,000 வரை சம்பளம்

image

சென்னை டைடல் பார்க் நிறுவனத்தில் மேற்பார்வை பொறியாளர், மேலாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு மாதம் ரூ.59,300 முதல் ரூ.1,87,000 வரை சம்பளம் வழங்கப்படும். இந்தப் பணியிடங்களுக்கு BE (EEE), ஏதேனும் ஒரு டிகிரி உடன் CA முடித்தவர்கள் ஏப்.,2ஆம் தேதி வரை <>இங்கே க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் உங்க நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.

News March 24, 2025

கப்பல் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு

image

மத்திய அரசின் கொச்சின் கப்பல் கட்டும் தளத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. பயர்மேன், ரிஜ்ஜர், ஸ்கபோல்டர் என மொத்தம் 12 இடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்ய உள்ளனர். 18-45 வயதிற்குட்பட்டும், 10ஆம் வகுப்பு தேர்ச்சியும் பெற்றிருக்க வேண்டும். எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு வடிவில் தேர்வுகள் நடைபெறும். விருப்பமுள்ளவர்கள் இன்றைக்குள் (மார் 24) இந்த <>லிங்க்கை<<>> கிளிக் செய்து பதிவு செய்யவும்.

News March 24, 2025

மரத்தில் கார் மோதி விபத்து மாணவி பரிதாப பலி

image

தாம்பரத்தைச் சேர்ந்தவர் முகமது ஆவேஷ், இவர், நேற்று காலை ஆந்திர, வரதையாபாளையம் நீர்வீழ்ச்சிக்கு, காரில் 8 பேர் பயணித்த நிலையில், கும்மிடிப்பூண்டி அருகே பெரியவேடு பகுதியில், முன்னாள் சென்ற லாரி ஒன்று குறுக்கிட்டதால், காரை இடதுபுறமாக திருப்ப முயன்றார். கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோரம் இருந்த தென்னை மரம் மீது வேகமாக மோதி விபத்துக்குள்ளானது. இதில் கல்லூரி மாணவி சம்ரீன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

News March 24, 2025

பூட்டிய வீட்டில் துர்நாற்றம் தாய், மகன் சடலமாக மீட்பு

image

திருமுல்லைவாலை சேர்ந்தவர் வசந்தா, அவரது மகன் சங்கர். நேற்று முன்தினம், இவர்கள் வீட்டில் இருந்து துர்நாற்றம் வந்துள்ளது. இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கிடைக்க கதவை உடைத்து பார்த்தபோது, வசந்தா கட்டிலிலும் சங்கர் தூக்கில் தொங்கிய நிலையிலும் இறந்துகிடந்துள்ளனர். இச்சம்பவம் குறித்து முதற்கட்ட விசாரணையில் வசந்தா ஆஸ்துமா காரணமா இறந்ததும், அந்த சோகத்தில் சங்கர் தற்கொலை செய்துகொண்டதும் தெரியவந்தது.

error: Content is protected !!