India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று (அக்.27) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

மொந்தா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நாளை (அக்.28) திருவள்ளூரில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மேலும், தேவையின்றி வெளியே செல்வதை தவிர்த்து வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

திருவள்ளூர் மாவட்டத்தில் ஆவடி, திருவள்ளூர், திருவேற்காடு, பூவிருந்தவல்லி, திருத்தணி, திருநின்றவூர், பொன்னேரி, ஆரணி, கும்மிடிபூண்டி, மீஞ்சூர், நாரவாரிகுப்பம், ஊத்துக்கோட்டை, திருமழிசை, பொதட்டூர்பேட்டை பேரூராட்சிகளில் (அக்.27, 28 & 29) ஆகிய தினங்களில் வார்டு அளவில் சிறப்புக் கூட்டம் நடைபெறும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதில் பொதுமக்களை கலந்து கொண்டு பயன்பெறுமாறு ஆட்சியர் தெரிவித்தார்.

திருவள்ளூர் மாவட்ட வட எல்லையில் அறுபடை வீடுகளில் ஒன்றான திருத்தணிகை மலை அமைத்துள்ளது. அங்கு வீற்றிருக்கும் முருகனை தணிகாசலம் என்று பக்தர்கள் வழிபடுகின்றனர். இந்த கோயிலில் முடி காணிக்கை செய்தால் எதிரிகள் தொல்லை, கடன், நோயிலிருந்து விடுபடலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கை. எதிரிகள், கடன், நோய்களில் பாதிக்கப்பட்டிருக்கும் உங்கள் நண்பர்கள், உறவினர்களுக்கு இதை ஷேர் செய்யவும்.

திருவள்ளூர் மக்களே, இன்றைய டிஜிட்டல் காலத்தில் செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800 419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க!

1) TN alert: உங்கள் பகுதியில் மழை, பருவமாற்றம், பேரிடர் கால உதவிகளுக்கான செயலி.
2) நம்ம சாலை: உங்கள் பகுதி சாலைகள் குறித்த புகார் அளிப்பதற்கான செயலி.
3) தமிழ் நிலம்: பட்டா சம்மந்தமான அனைத்து சேவைகளுக்குமான செயலி.
4) e-பெட்டகம்: உங்கள் தொலைந்துபோன சான்றிதழ்களை மீட்கும் செயலி.
5) காவல் உதவி: அவசர காவல்துறை புகார், உதவிக்கான செயலி.
இவைகளை பதிவிறக்க<

திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று காலை 6 மணி முதல் இன்று காலை 6 மணி வரையிலான 24 மணி நேரத்தில், ஜொமின் கொரட்டூர் 53 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. மேலும் திருத்தணி 42 மி.மீ.ஊத்துகோட்டை 6 மி.மீ. திருவாலங்காடு 7மி.மீ மழை பூவிருந்தவல்லி 2.5மி.மீ. மழை பதிவாகியுள்ளது. மேலும், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் லேசான மழை பெய்தது. மேலும் இன்றும் மழை இருக்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரேஷன் கார்டில் உங்க புது உறுப்பினர்களை சேர்க்கனுமா? இதற்கு இங்கும் அலைய வேண்டியதில்லை. உங்க போன் போதும். 1<

மோன்தா புயல் உருவானதை அடுத்து, திருவள்ளூர் மாவட்டம் எண்ணூர் மற்றும் காட்டுப்பள்ளி உள்ளிட்ட ஒன்பது துறைமுகங்களில் இரண்டாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து 640 கி.மீ தொலைவில் உள்ள புயல் மணிக்கு 16 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது. மேலும், திருவள்ளூரில் மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மற்றவர்களுக்கும் ஷேர் செய்து தெரியப்படுத்துங்கள்.

வங்கக்கடலில் மோன்தா புயல் நேற்று நள்ளிரவு உருவான நிலையில் இன்று (அக்.27) திருவள்ளூர்க்கு மிக கனமழைக்கான ‘ஆரஞ்ச் அலெர்ட்’ விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், காலை முதலே பல்வேறு இடங்களில் மழை பெய்ய துவங்கியுள்ளது. நாளை தீவிர புயலாக மாறும் மோன்தா ஆந்திரா மாநிலம் காக்கிநாடா பகுதியில் மணிக்கு 110 கி.மீ வேகத்தில் கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் மக்களே முன்னெச்சரிக்கையா இருங்க.
Sorry, no posts matched your criteria.