India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
➤பெரியார் நகர் பகுதியில் கருஞ்சிறுத்தை நடமாட்டம் ➤ஊட்டியில் சட்ட ஒழுங்கு ஆய்வுக் கூட்டம் ➤வனத்துறை சார்பில் குறைதீர் கூட்டம் ➤மலை ரயில் மீண்டும் இயக்கம் ➤பேசும் படம்: தாயைப் பிரிந்த ஏக்கம் ➤முதல்வர் மருந்தகம் விண்ணப்பிக்க கடைசி நாள்.
நீலகிரி மாவட்ட ஆட்சியரின் கூடுதல் அலுவலகத்தில் சட்டம் ஒழுங்கு மற்றும் சாலை பாதுகாப்பு குறித்த ஆய்வுக் கூட்டம் இன்றுநடைபெற்றது. இக்கூட்டத்திற்கு நீலகிரி மாவட்ட ஆட்சித் தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு தலைமை தாங்கினார். மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் என்.எஸ்.நிஷா மற்றும் துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
கூடலூர் வன அலுவலர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது. மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் பிரபு தலைமை தாங்கினார். இதில் தேயிலை விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் சளிவயல் ஷாஜி, செயலர் ஆனந்த ராஜா உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்று தேயிலை மற்றும் விவசாயிகளின் பிரச்சனைகளை பற்றி எடுத்துக் கூறினார்கள்.
மேட்டுப்பாளையத்தில் இருந்து தினமும், காலை,7:10 மணிக்கு ஊட்டிக்கு மலை ரயில் இயக்கப்படுகிறது. குன்னூர் மலைப் பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்தது. இதனால் கல்லாறுக்கும் குன்னூருக்கும் இடையே உள்ள, மலைப்பகுதி ரயில் பாதையில், பல இடங்களில் மண் மற்றும் பாறைகள் சரிந்து மலை ரயில் இயக்கப்படவில்லை. மேட்டுப்பாளையம்-குன்னூர் ரயில் பாதை சீர் செய்யப்பட்டதை அடுத்து, மீண்டும் மலை ரயில் ஓடத் துவங்கியது.
பந்தலூர் வயநாடு மானந்தவாடி அருகே தோல்பட்டி வனப்பகுதியில், நேற்று மாலை யானை குட்டி ஒன்று சாலையில் உலா வந்தது. பஸ் உள்ளிட்ட வாகனங்களின் பின்னால் ஓடிச் சென்றது. வாகன ஓட்டுநர்கள் யானை குட்டிக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் வாகனங்களை மெதுவாக இயக்கினர். தகவலறிந்த வனத்துறையினர், சம்பவ இடத்திற்கு வந்து குட்டி யானையை மீட்டு வனப்பகுதிக்கு கொண்டு சென்றனர். தாயுடன் சேர்த்திட முயற்சி நடைபெற்றுவருகிறது.
நீலகிரி மாவட்டத்தின் முன்னாள் மாவட்ட ஆட்சியர் அர்ச்சனா பட்நாயக் தமிழ்நாட்டின் புதிய தலைமை தேர்தல் அதிகாரியாக அறிவிக்கப்பட்டுள்ளார். 15.03.2010 அன்று நீலகிரி மாவட்டத்தின் ஆட்சியராக பொறுப்பேற்ற அர்ச்சனா பட்நாயக் 10.10.2013 வரை ஆட்சியராக பணியாற்றினார். எனவே மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் முதல்வர் மருந்தகம் அமைக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதுகுறித்து நீலகிரி ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு வெளியிட்ட செய்தியில், பி.பார்ம் /டி.பார்ம் சான்று பெற்றவர்கள் & அவர்களின் ஒப்புதலுடன் இணையதளத்தில் www.mudhalvarmarundhagam.tn.gov.in நவ.20ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இதற்கு 110 சதுர அடி இடம், சொந்த வீடு, சொத்துவரி, குடிநீர், மின் இணைப்பு ரசீது வேண்டும்.
நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு செல்ல இ-பாஸ் பெற்ற வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்க வேண்டும் என ஆட்சியருக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. இ-பாஸ் நடைமுறை சுற்றுலாப் பயணிகளை கட்டுப்படுத்துவதற்கு அல்ல என தெரிவித்துள்ளது. மேலும் சுற்றுலாப் பயணிகள் குறித்த உண்மையான புள்ளி விவரங்களை சேகரிக்கவும் ஐகோர்ட் அறிவுறுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் ஆதரவற்ற முதியோர் இல்லங்கள் செயல்பட்டு வருகின்றன. இத்தகைய இல்லங்களில் முதியோர்கள் சரியாக கவனிக்கப்படுகிறார்களா? அடிப்படை வசதிகள் உள்ளனவா? போன்றவற்றை அறிய நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு இன்று உதகை அருகே முள்ளிக்கொரையில் உள்ள அன்பு அறிவு அறக்கட்டளை இல்லத்திற்கு சென்று ஆய்வு நடத்தினார்.
நீலகிரி மாவட்டம், உதகை, நஞ்சநாடு அருகே குருத்துக்குளி கிராமத்தில் கந்த சஷ்டி விழா நடைபெற்றது. லட்சுமணன், சிவா குழுவினரின் பஜனை நடைபெற்றது. திருமதி ஜானகி போஜன் பக்தி சொற்பொழிவு நிகழ்த்தினார். குருத்துக்குளி ஊர் தலைவர் எஸ்.ராமன் தனது 94 வயதில் குழந்தைகளுடன் பாடலுக்கு நடனமாடினார். சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெற்றது. வானவேடிக்கை நடந்தது. ஊர் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
Sorry, no posts matched your criteria.