Thenilgiris

News November 15, 2024

2ஆம் கட்ட சீசனுக்கு தயாராகும், குன்னூர் சிம்ஸ் பூங்கா

image

நீலகிரி மாவட்டத்தில் அக்டோபர் நவம்பர் மாதங்களில் இரண்டாம் கட்ட சீசன் நடைபெறும். மேலும் அரசு தாவரவியல் பூங்கா குன்னூர் சிம்ஸ் பூங்கா போன்ற இடங்கள் வெளிநாட்டில் இருந்து கொண்டுவரப்பட்ட மலர் நாற்றுக்கள் நடவு செய்யப்பட்டு தற்போது பூத்துக் குலுங்குகின்றன. மேலும் குன்னூர் சிம்ஸ் பூங்கா லட்சக்கணக்கான மலர் செடிகள் மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன.

News November 15, 2024

கோயிலின் புனித தன்மையை காத்திட கோரிக்கை

image

குன்னூர் இந்து முன்னணி சார்பாக குன்னூர் மார்க்கெட் விரிவாக்கத்திற்காக அறநிலைய துறைக்கு சொந்தமான விநாயகர் கோவிலில் தற்காலிக கடைகள் அமைக்கக் கூடாது என்றும், நூறு ஆண்டுகள் பழமைவாய்ந்த தந்தி மாரியம்மன் பூகுண்ட திருவிழா நடக்குமிடத்திலும் தற்காலிக கடைகள் வருவதை தடுத்திட வேண்டுமென்றும், கோயில்களின் புனிதத்தை காப்பதற்கு இன்று குன்னூர் துணை ஆட்சியரிடம் இந்து முன்னணி நிர்வாகிகள் நேரில் கோரிக்கை வைத்தனர்.

News November 15, 2024

கோத்தகிரியில் இன்று பட்டி மன்றம்

image

57வது தேசிய நூலக வார விழாவை முன்னிட்டு இன்று (15.11.24) மதியம் 1.30 மணிக்கு, கோத்தகிரி நூலக வளாகத்தில் சிறப்பு பட்டி மன்றம் நடைபெறுகிறது. ஆர்.சம்பத் தலைமை வகிக்கிறார். சிறப்பு அழைப்பாளராக கே.சரவணகுமார் பங்கேற்கிறார். இதில், ‘வாழ்க்கையை பண்படுத்துவது நூலகமே! தொலைக்காட்சியே!’ என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெறுகிறது.

News November 15, 2024

நீலகிரியில் கடுமையான குளிர்

image

கோத்தகிரியில் இருந்து கோடநாடு, கீழ் கோத்தகிரி, சோலூர் மட்டம், நெடுகுளா, கேர்கம்பை, பேரகனி, கர்சன் உள்ளிட்ட பகுதியில் தொடர் மழையை அடுத்து கடும் குளிருடன் மேக மூட்டமான காலநிலை நிலவி வருகிறது. இதனால் கடந்த 2 நாட்களாக அரசு பேருந்து உள்ளிட்ட வாகனங்கள் முன் விளக்கை எரியவிட்டபடி செல்கின்றன. நகரில் மக்கள் நடமாட்டம் குறைந்து காணப்படுகிறது.

News November 15, 2024

நீலகிரியில் டாக்டர்கள் பணி புறக்கணிப்பு போராட்டம்

image

சென்னை கிண்டி அரசு மருத்துவமனையில் டாக்டர் பாலாஜி என்பவரை இளைஞர் கத்தியால் குத்திய சம்பவத்தை கண்டித்து, ஊட்டி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில், தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம் மற்றும் மருத்துவ மாணவர்கள் சங்கம் சார்பில் நேற்று பணி புறக்கணிப்பு போராட்டம் நடைபெற்றது. டாக்டர்கள் தினேஷ், குருமூர்த்தி தலைமை ஏற்றனர்.

News November 14, 2024

நீலகிரி இரவு ரோந்து பணி அதிகாரிகள் விவரம்

image

நீலகிரி மாவட்டத்தில் இரவு நேர காவல் பணிக்காக காவல் துறை அதிகாரிகள் தலைமையில் நாள்தோறும் இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்படுகிறார்கள். உதகை நகரம், உதகை கிராமியம், குன்னூர் உட்கோட்டம், கூடலூர் மற்றும் தேவால உட்கோட்டத்தில் ரோந்து பணி அலுவலர்கள் விவரம் மாவட்ட காவல் துறை அலுவலரால் (14.11.2024) இரவு பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் அறிவிப்பு.

News November 14, 2024

நீலகிரி தலைப்புச் செய்திகள்

image

1.நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளில் குழந்தைகள் தினவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
2.கோத்தகிரியில் டூவிலரை தூக்கி வீசிய காட்டெருமை வீடியோ வைரல்
3.அரசு மருத்துவமனையில் எக்ஸ்ரே மெஷினை திறந்து வைத்த ஆட்சியர்
4.பந்தலூரில் இன்று கலைஞர் நூலகம் திறப்பு விழா
5.கூட்டுறவு கடன் சங்க பணியாளர்கள் வேலை நிறுத்தம்
6.முதுமலையில் உண்ணி செடி அகற்றும் பணி துவக்கம்

News November 14, 2024

குனியல் பகுதியில் காட்டு யானை அட்டகாசம்

image

முதுமலை அருகே குனியல் பகுதியில் நெல் வயலில் காட்டு யானைகள் நுழையாமல் இருக்க சோலார் மின் வேலி போடப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று அதிகாலையில் ஒரு காட்டு யானை மின் வேலியை உடைத்து நுழைந்து நெற்பயிர்களை சேதப்படுத்தியது. இதற்கு வனத்துறை இழப்பீடு வழங்கவும், காட்டு யானை மீண்டும் வராமல் இருக்க நடவடிக்கை எடுக்க கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

News November 14, 2024

இலவச பேருந்துப் பயணத்தில் ஒரு கோடி மக்கள் பயணம்

image

விடியல் பயண திட்டம் மூலம் பேருந்துகளில் மகளிர் இலவசமாக பயணம் . நீலகிரி மாவட்டத்தில் 7-5-2021 முதல் 31-10-2024 வரை 71 ஆயிரத்து 902 மாற்றுத்திறனாளிகள்,1990 மாற்றுத்திறனாளி உதவியாளர்கள், 1670 மூன்றாம் பாலினத்தவர் மற்றும் 1,00,54,057 மகளிர் என மொத்தம் 1.01 கோடி பேர் இலவசமாக பயணித்து பயனடைந்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் நகர பேருந்துகளிலும் பெண்கள் இலவச பயணம் மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

News November 14, 2024

கூட்டுறவு கடன் சங்க பணியாளர் வேலை நிறுத்தம்

image

நீலகிரி மாவட்டத்தில் 77 தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் இயங்கி வரும் நிலையில், இதில் பணிபுரியும் 23 செயலாளர்களுக்கு பணி மாறுதல் வழங்கப்பட்டது. இதை எதிர்த்து நீலகிரி தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்க பணியாளர்கள் இன்று திடீர் வேலை நிறுத்ததில் ஈடுபட்டனர். இதன் காரணமாக கடன் சங்க பணிகளில் தொய்வு ஏற்பட்டது.

error: Content is protected !!