India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நீலகிரி மக்களே உங்கள் Phone காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது இணையதளத்தை <

நீலகிரி மாவட்டம் ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவின் பெரிய புல் மைதானம் என்று அழைக்கப்படும் பிரதான புல்தரை மைதானம் பராமரிப்பு பணிக்காக மூடப்பட்டுள்ளது. இதனால் பூங்காவிற்கு வருகை தந்திருந்த சுற்றுலாப் பயணிகள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர். சீரமைத்தல் மற்றும் தண்ணீர் பாய்ச்சும் பணிகள் நடைபெற்று வருவதால் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி, உதகை ஊராட்சி ஒன்றியம், நஞ்சநாடு ஊராட்சி அலுவலக வளாகத்தில், உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு இன்று சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது, மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு மருந்து பெட்டகங்களை வழங்கினார். உடன் உதவி இயக்குநர் சிவசங்கர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியத்தில் காலியாக உள்ள 8,850 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. கல்வித்தகுதி: 12th Pass, Any Degree. சம்பளம்: ரூ.19,900 முதல் ரூ.35,400 வரை வழங்கப்படும். விண்ணப்பிக்க கடைசி நாள்: 27.11.2025. ஆன்லைனில் என்ற https://www.rrbchennai.gov.in/ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். (நல்ல சம்பளத்தில் வேலை தேடும் நபர்களுக்கு SHARE பண்ணுங்க)

நீலகிரி மக்களே, ஒரே நேரத்தில் சிலிண்டர்கள் புக் செய்வதால் வீட்டிற்கு வர தாமதமாகுதா? இனி அந்த கவலை இல்லை (Indane: 7588888824, Bharat Gas: 1800224344, HP Gas: 9222201122) இந்த எண்களில் வாட்ஸ்அப்பில் “HI” என ஒரே ஒரு மெசேஜ் அனுப்புங்க. REFILL GAS BOOKING OPTION -ஐ தேர்ந்தெடுங்க.. அவ்வளவுதான் உங்க வீட்டுக்கே கேஸ் வந்துடும். இதை உங்க நண்பர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.

கோத்தகிரி பகுதியில் சமீப காலமாக வனவிலங்குகள் தொல்லை கணிசமாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தாந்தநாடு கிராமத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் 4 வீடுகளின் கதவை உடைத்து கரடி அட்டகாசம் செய்தது. இதையடுத்து பகல் நேரத்திலேயே இந்த கிராம குடியிருப்பு பகுதியில் கரடி உலா வருவதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். மேலும் கரடியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் நேற்று விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. விழிப்புணர்வு நம் அனைவரின் பொறுப்பு என்ற தலைப்பில் நடந்தது.எஸ்.ஐ., சக்தி முன்னிலை வகித்து பேசினார். நீலகிரி மாவட்டத்தில் லஞ்சம் பற்றிய புகார்களை நேரிலோ அல்லது டி.எஸ்.பி., 9498147234, இன்ஸ்பெக்டர் 9498124373 மற்றும் அலுவலக தொலைபேசி எண் 0423-2443962 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

நீலகிரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால், தோட்ட பயிர்களை பாதுகாக்கும் நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். எலுமிச்சை, ரம்புட்டான், ஆரஞ்சு, அவகோடா போன்ற மரங்களில் பட்டுப்போன கிளைகளை அகற்றவும், தண்ணீர் தேங்காமல் பார்த்து கொள்ளவும் கேரட்,பீட்ரூட், உருளை, முட்டைகோஸ் உள்ளிட்ட காய்கறிகளுக்கு தகுந்த வடிகால் வசதி ஏற்படுத்தித் தர வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி மக்களே, மத்திய சேமிப்பு கிடங்கு நிறுவனத்தில் 22 Junior Personal Assistant, Junior Executive (Rajbhasha) பணிகளை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு ஏதேனும் பட்டப்படிப்பு முடித்தவர்கள் முதல் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.29,000/- முதல் ரூ.93,000/- வரை சம்பளம் வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முன்னேற்றவும், தொழில்முனைவு வாய்ப்புகளை அதிகரிக்கவும் அரசு கொண்டுவந்துள்ள ஒரு சூப்பர் திட்டம் தான் உத்யமி மித்ரா. இத்திட்டத்தின் கீழ் ஆடு, கோழி உள்ளிட்ட கால்நடை பண்ணைகள் அமைக்க ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர <
Sorry, no posts matched your criteria.