Thenilgiris

News August 6, 2025

வீட்டை உடைத்த கரடி: அச்சத்துடன் பொதுமக்கள்

image

நீலகிரி மாவட்டம் உதகைக்கு உட்பட்ட இத்தலார் ஊராட்சிக்கு அருகாமையில் உள்ள இந்திராநகர் பகுதியில் கரடி ஊருக்குள் புகுந்து வீட்டை சேதம் செய்து வருகிறது. இதனால் பொதுமக்கள் அச்சத்துடன் வசித்து வருகின்றனர். சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் சேதமடைந்த வீட்டை நேரில் சென்று பார்வையிட்டு பின்பு ஊர் பொது மக்களிடம் கண்காணிப்பு கேமரா பொருத்தி கரடியை கூண்டு வைத்து பிடித்து தருவதாக தெரிவித்துள்ளார்கள். 

News August 6, 2025

நீலகிரி: ஹவுஸ் ஓனர் தொல்லையா? உடனே CALL

image

நீலகிரியில் வாடகை வீட்டில் வசிப்பவர்கள், வாடகை உயர்வு, திடீர் வெளியேற்றம், முன்பண பிரச்சனை போன்ற பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். வாடகை வீட்டில் குடியிருப்போர் உரிமைகளை பாதுகாக்க தனி சட்டமே உள்ளது. உங்கள் வீட்டின் உரிமையாளர் அதிக கட்டணம் வசூலித்தாலோ அல்லது தொந்தரவு செய்தாலோ, 1800 599 01234 என்ற தமிழக வீட்டுவசதித் துறையின் கட்டணமில்லா எண்ணில் புகார் அளிக்கலாம். இதை SHARE பண்ணுங்க.

News August 6, 2025

நீலகிரி: ரூ.62,265 சம்பளத்தில் வேலை!

image

நீலகிரி மக்களே, அரசு காப்பீட்டு நிறுவனமான ஓரியண்டல் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் காலியாக உள்ள 500 உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு Any டிகிரி போதுமானது, சம்பளம் ரூ.22,405 முதல் ரூ.62,265 வரை வழங்கப்படும். எனவே, ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் <>இங்கே <<>>கிளிக் செய்து ஆக.17 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். SHARE பண்ணுங்க!

News August 5, 2025

நீலகிரி: நாளை நடைபெறும் முகாம் விபரம்

image

நீலகிரி மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்டம் முகாம் கடந்த மாதம் 15ஆம் தேதி முதல் நீலகிரியில் உள்ள ஆறு தாலுகாவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. மேலூர் ஊராட்சி கொலக்கம்பை பகுதி மக்களுக்கு சிஎஸ்ஐ பள்ளி மைதானத்திலும், நெடுங்குளா பகுதி மக்களுக்கு மிலிதேன் ஊராட்சி சமுதாய கூடத்திலும், பாலகொல பகுதி மக்களுக்கு தேணாடு சமுதாய கூட்டத்திலும் உங்களுடன் ஸ்டாலின் திட்டம் நாளை நடைபெற உள்ளது.

News August 5, 2025

சிறப்பு மலை ரயில்: புறப்படும் நேர விபரங்கள்

image

சுதந்திர தினத்தை ஒட்டி இயக்கப்பட உள்ள சிறப்பு ரயில் ஐந்து பெட்டிகளுடன் இயக்கப்படவுள்ளது. இந்த சிறப்பு மலை ரயிலில் மொத்தம் உள்ள 210 இருக்கைகளில் 80 இருக்கைகள் முதல் வகுப்பும், 130 இருக்கைகள் இரண்டாம் வகுப்பில் இருக்கும். குன்னூரில் இருந்து காலை 8.20 புறப்படும், ரயில்9.40 மணிக்கு ஊட்டி வந்தடையும். மாலை 4.45 மணிக்கு ஊட்டியில் இருந்து புறப்படும் ரயில் மாலை 5.55 மணிக்கு மீண்டும் குன்னூர் சென்றடையும்.

News August 5, 2025

முகாமினை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்

image

நீலகிரி மாவட்டம் உதகை நகாராட்சிக்குட்பட்ட ஒக்கலிகர் மண்டபத்தில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமினை மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரூ நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின் போது ஊட்டி நகராட்சி மன்ற தலைவர் வாணிஸ்வரி உடன் இருந்தார். திரளான பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை அளித்தனர்.

News August 5, 2025

நீலகிரி: ரூ.1.25 லட்சம் சம்பளத்தில் அரசு வேலை!

image

நீலகிரி மக்களே, தமிழ்நாடு அரசின் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கீழ் செயல்படுத்தப்படும் “TN Rights” திட்டத்தின் கீழ் பணிபுரிய உதவியாளர், தட்டச்சர், சீனியர் கணக்காளர் உள்ளிட்ட 25 பதவிகளுக்கு தேர்வில்லாமல் ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். சம்பளமாக ரூ.15,000 முதல் ரூ.1.25 லட்சம் வரை. இதுகுறித்த மேலும் விவரங்கள் (ம) விண்ணப்பிக்க <>இங்கு <<>>கிளிக் பண்ணுங்க. கடைசி தேதி 13.08.2025 ஆகும். SHARE IT!

News August 5, 2025

நீலகிரி: புதிய வீடு கட்டுபவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

image

நீலகிரி மாவட்டத்தில் வணிக மற்றும் குடியிருப்பு கட்டடங்களுக்கு கட்டட அனுமதி பெற விரும்பும் பொதுமக்கள், <>www.onlineppath.gov.in<<>> என்ற இணையதளத்தில் உள்ள Single Window Portal வாயிலாக விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தன்னேரு தெரிவித்துள்ளார். மேலும், கட்டுமானத் தொடர்பான சந்தேகங்கள் மற்றும் தகவல்களுக்கு 94427 72701 என்ற உதவி எண்களில் தொடர்புகொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

News August 5, 2025

நீலகிரி: அவசர தொடர்புக்கு எண்கள் அறிவிப்பு

image

நீலகிரி மாவட்டத்திற்கு அதீத கனமழை எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. தற்போது அவசர உதவி எண்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, உதகை கோட்டத்திற்கு 0423-2445577, குன்னூர் கோட்டத்திற்கு 0423-2206002, கூடலூர் 04262-261296, உதகை வட்டத்திற்கு 0423-2442433, குன்னூர் வட்டத்திற்கு 0423- 2206102, கோத்தகிரி 04266-271718, குந்தா 0423- 2508123, கூடலூர் 04262-261252, பந்தலூர் 04262- 220734.

News August 5, 2025

நீலகிரி: மாவட்ட ஆட்சியர் முக்கிய தகவல்!

image

நீலகிரி ஆட்சியர் வெளியிட்டுள்ள தகவலில், பேரிடர் காலங்களில் மக்களை காக்க நீலகிரி மாவட்டத்தில் உள்ள 400 தன்னார்வலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. என்எஸ்எஸ் மூலமாக 100 என்சிசி மூலமாக 200, நேரு யுவகேந்திரா மூலமாக 100 தன்னார்வலர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். இதற்கு 18 முதல் 40 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். 3 வார பயிற்சி காலத்தில் உணவு, தங்குமிடம், சான்றிதழ் மீட்பு கருவிகள் வழங்கபடும்.

error: Content is protected !!