India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நீலகிரி மாவட்டம் கூடலூர் தாலுகா ஓவேலி பேரூராட்சி குயிண்ட் பகுதியில் தோட்டத் தொழிலாளியாக வேலை பார்த்து வரும் சம்சுதீன் என்ற நபர் இன்று காலை ஏழு முப்பது மணி அளவில் பணிக்கு செல்லும் பொழுது மறைந்திருந்த யானை இவரை தாக்கியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த செய்தி அப்பகுதி மக்களே துயரத்தில் ஆக்கியுள்ளது. மேலும் இதையறிந்த அப்பகுதி மக்கள் சோகத்தில் மூழ்கினர்.

நீலகிரி மக்களே வேளாண் பட்டதாரிகளுக்கு முதலமைச்சரின் உழவர் நல சேவை மையம் அமைக்க ரூ.3லட்சம் முதல் ரூ. 6லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. தகுதிகள்: வயது 20-45, கல்வி: தோட்டக்கலை, வேளாண் வணிகம், வேளாண் பொறியியல், பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு. ரூ.10 லட்சம், ரூ.20 லட்சம் திட்ட அறிக்கையுடன் கடனுதவி வழங்கப்படுகிறது. மேலும் விவரங்கள், விண்ணப்பிக்க இங்கு<

நீலகிரி: இந்திய பொதுத்துறை வங்கியான கனரா வங்கியிந்துணை நிறுவனமான கனரா வங்கி செக்யூரிடீஸ் நிறுவனத்தில் காலியாக உள்ள sales, Marketing(Trainee) பணிக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி படித்தால் போதுமானது. ரூ.22,000 சம்பளம் வழங்கப்படும். இதற்கு உரிய ஆவணங்களுடன் ஆன்லைனில் விண்ணப்பிக்க இங்கே <

ஊட்டி அருகே முட்டிநாடு கிராமத்தை சுற்றி சிவசெந்துார் நகர், செல்விப் நகர், ஈஸ்வர நகர் என, 600க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இப்பகுதிகளிலிருந்து ஊட்டி, குன்னுாருக்கு அரசு, தனியார் வேலைக்கு செல்பவர்கள் மற்றும் பள்ளி, கல்லுாரிக்கு தினமும் ஏராளமானோர் சென்று வருகின்றனர்.கிராமத்திற்கு சீராக பஸ் இயக்க கோரி கிராம மக்கள் ஒன்று திரண்டு வந்து கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

முதுமலை அருகே பென்னை அங்கன்வாடி மையத்தில், மூடப்பட்ட ஆரம்ப பள்ளி நேற்று காலை முதல் மீண்டும் திறந்து செயல்பட தொட துவங்கியது. வட்டார கல்வி அலுவலர் வாசுகி வகுப்பறையை திறந்து வைத்தார். முதல் நாளான நேற்று, 12 மாணவர்கள் வருகை தந்தனர். பாட்டவயல் அரசு நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பூபதி இந்த பள்ளியின் பொறுப்பு தலைமை ஆசிரியராக நியமிக்கப்பட்டு உள்ளார். இரண்டு ஆசிரியர்களும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

பந்தலூர் தேவகிரி நெடுஞ்சாலையில் பிளவு மற்றும் மண்சரிவுகள் ஏற்பட்டுள்ளது. இந்த பகுதியில் எச்சரிக்கை ரிப்பன்கள் மட்டுமே கட்டப்பட்டுள்ள நிலையில், சாலையோரம் சீரமைப்பதில் அதிகாரிகள் முனைப்பு காட்டாமல் உள்ளனர். அதே போல, பந்தலூர் முதல் தேவாலா வரை ஐந்துக்கும் மேற்பட்ட இடங்களில் மண் சரிவும் ஏற்பட்டு உள்ளது. எனவே, மூன்று மாநிலங்களை இணைக்கும் நெடுஞ்சாலையில் பாதிப்பு ஏற்பட்டுள்ள இடத்தில் சீரமைக்க வேண்டும்.

நீலகிரி மக்களே மத்திய அரசின் மின்சாரத் துறையில் கள பொறியாளர் & மேற்பார்வையாளர் பணிக்கு 1,543 காலியிடங்கள் உள்ளது. இதற்கு BE / B.Tech / B.Sc படித்தவர்கள் விண்ணபிக்கலாம். சம்பளமாக ரூ.23,000 முதல் ரூ.1,20,000 வரை வழங்கப்படும். <

நீலகிரி மக்களே, பான்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, லைசன்ஸ், பாஸ்போர்ட் ஆகியவை விண்ணப்பிக்க இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டியதில்லை. வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் EASYயாக விண்ணபிக்கலாம்.
1.பான்கார்டு: <
2.வாக்காளர் அடையாள அட்டை: voters.eci.gov.in
3.ஓட்டுநர் உரிமம் : https://parivahan.gov.in/
4.பாஸ்போர்ட்: www.passportindia.gov.ink
இந்த இணையதளங்களுக்கு சென்று விண்ணப்பியுங்க…(SHARE IT)

நீலகிரி மக்களே.., வைரஸ் காய்ச்சல் பரவி வரும் நிலையில் காய்ச்சல் குறித்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் சந்தேகங்களை வீட்டில் இருந்தே தெரிந்துகொண்டு, பின்பு சிகிச்சை பெறலாம். காய்ச்சலுக்கான அறிகுறிகள் இருந்தால் உடல்நலம் குறித்த கேள்விகளுக்கு ‘104’ என்ற எண்ணைத் தொடர்புகொண்டு ஆலோசனை பெறலாம். அதில் காய்ச்சலுக்கு நீங்கள் எடுக்கவேண்டிய சிகிச்சை குறித்து அறிவுரைகள் வழங்கப்படும். இதை உடனே SHARE பண்ணுங்க!

பந்தலூர் அருகே உள்ள பாக்கனா பகுதியைச் சேர்ந்த இஸ்மாயில் என்பவரின் மகன் இன்று காலை வேலைக்கு தனது இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது, அவர் சென்ற வழியில் வந்த கேரள மாநில பதிவெண் கொண்ட அரசு பஸ் எதிர்பாரத விதமாக மோதியது. இந்த விபத்தில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து முதல் கட்ட விசாரணையில் உள்ளனர்.
Sorry, no posts matched your criteria.