India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நீலகிரி மக்களே மத்திய ரயில்வே துறையில் காலியாக உள்ள 2418 அப்ரண்ட்டிஸ் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. இதற்கு 10th (அ) ITI தகுதி போதுமானது, மாதம் ரூ.7,700 முதல் ரூ.8,050 வரை சம்பளம் வழங்கப்படும். இது குறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <

நீலகிரி மாவட்டம், கோத்தகிரியில் உள்ள கேம்ப் லைன் துாய்மைப் பணியாளர்கள் குடியிருப்பில், 50 குடும்பங்கள் வசிக்கின்றன.அவை சிதிலமடைந்து, மிக மோச, சிதிலமடைந்து மிக மோசமான நிலையில் இருபாதால் துாய்மைப் பணியாளர்கள் குடியிருப்புகள் குறித்து, ஆறு வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என, நீலகிரி மாவட்ட கலெக்டருக்கு, தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

கூடலூர் தொகுதியில் தொடர்ந்து நடைபெற்று வரும் காட்டு யானை தாக்குதலை தடுத்திடவும் வனவிலங்கு தாக்குதலில் உயிர் பலியானால் ரூ.20 லட்சம் இழப்பீடு, குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு அரசு வேலை, கூடலூரின் சாலைகளை விரைவாக சீரமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி செப்.11 காலை 6 மணி முதல் செப்.12 காலை 6 மணி வரை அனைத்து கடைகளும் அடைக்க அனைத்து வியாபாரிகள் சங்கம் முடிவு செய்துள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் இன்று (09.09.2025) இரவு நீலகிரி மாவட்டத்தில் உள்ள காவல் உட்கோட்டங்களில் இன்று இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் விபரம் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் (அ) 100 ஐ டயல் செய்யலாம். உங்கள் பாதுகாப்பு.! எங்கள் சேவை..! என்று நீலகிரி மாவட்ட காவல்துறையின் சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் உள்ள துணை முதல்வர் இல்லத்தில் நீலகிரி மாவட்ட திமுக அமைப்பாளர்கள் சந்தித்தனர் . நீலகிரி மாவட்டம் திராவிட முன்னேற்ற கழக மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சசிகுமார் தலைமையில் குன்னூர் நகர இளைஞரணி அமைப்பாளர் ஏ.ஹெச் சையத் மஞ்சூர் குன்னூர் நகர முப்பது வார்டுகளில் உள்ள 30 கிளைகளின் இளைஞர் அணி மற்றும் துணை அமைப்பாளர்கள் படிவ பட்டியலை தமிழக துணை முதலமைச்சரிடம் வழங்கினர்.

கூடலூர் ஓவேலி பார்வுட் பகுதியில் இன்று காலை யானை தாக்கியதில் சம்சுதீன் என்ற தொழிலாளி பலியானதால், அப்பகுதி மக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த பகுதியில் அடிக்கடி யானை மனித மோதலால் உயிரிழப்புகள் அதிகரித்து வருகிறது. இதுவரை வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷமிட்டனர். இந்நிலையில் போலீசார் இவர்களை குண்டுக் கட்டாக தூக்கி வாகனத்தில் ஏற்றிச் சென்றனர்.

தமிழக சட்டமன்ற தேர்தல் – 2026-ஐ முன்னிட்டு அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில், தமிழக வெற்றிக் கழக தலைவரும் நடிகருமான விஜய் வரும் 13ஆம் தேதி முதல் டிசம்பர் 20ஆம் தேதி வரை தமிழகத்தில் பிரச்சாரம் செய்கிறார். இதில், வரும் அக்.4ஆம் தேதி நீலகிரிக்கு வருகை தந்து பிரச்சாரம் செய்ய உள்ளார்.

▶️ நீலகிரி மக்களே உளவுத்துறையில் காலியாக உள்ள 394 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க <
▶️ இதில்மாதம் ரூ.25,500 – ரூ.81,100 வரை சம்பளம் வழங்கப்படும்.
▶️ BA,BSc,BE,B.TECH படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
▶️ஆன்லைன் தேர்வு, எழுத்துத் தேர்வு,நேர்காணல் என 3 தேர்வுகள் நடைபெறும்.
▶️ விண்ணப்பிக்க செப்.14 கடைசி நாளாகும்.
▶️ இதனை வேலை தேடும் உங்கள் நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

நீலகிரி மாவட்ட சைல்டு ஹெல்ப்லைன் அலகில் காலியாக உள்ள ஒருங்கிணைப்பாளர், ஆறுப்படுத்துநர் உள்ளிட்ட வேலைகளுக்கு ஆள்சேர்ப்பு நடக்கிறது. சம்பளம் ரூ.28000 வரை வழங்கப்படும். சமூக அக்கரை, கணினி அறிவுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் பதிவிறக்க இங்கு <

நீலகிரி மக்களே முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், ஒரு குடும்பம் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். இதைப்பெற
▶️குடும்ப அட்டை
▶️வருமானச் சான்று
▶️குடும்ப உறுப்பினர்களின் ஆதார் அட்டை நகல்
உள்ளிட்ட சான்றுகளுடம் வேலூர் ஆட்சியர் அலுவலகம் அல்லது <
Sorry, no posts matched your criteria.