Thenilgiris

News December 23, 2024

தமிழ் புதல்வன் திட்டத்தில் ரூ.15.56 லட்சம் உதவித்தொகை 

image

நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு விடுத்துள்ளசெய்திக்குறிப்பில், உயர் கல்வியில் சேரும் மாணவர்களுக்கு தமிழ் புதல்வன் திட்டத்தின் கீழ் மாதம் ரூ.1000 உதவித்தொகை  வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் 15 கல்லூரிகளைச் சேர்ந்த 1,556 மாணவர்களுக்கு மாதம் ரூ.1,000 வீதம் ரூ.15.56 லட்சம் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்துள்ளார். 

News December 23, 2024

ஊட்டிக்கு மாற்று பாதை ஜனவரியில் தொடக்கம்

image

சுற்றுலா பயணிகள் ஊட்டி வருவதற்கு ஏதுவாக கெத்தை-மஞ்சூர் வழியாக 3ஆவது மாற்று பாதை உருவாக்கப்பட்டது. எனினும் காப்பு காடு வழியாக இரவில் செல்ல அனுமதி இல்லை. இதனால் காட்டேரி வந்தபின் கேத்தி, பாலாடா, காந்தி நகர், லவ்டேல் வழியாக ஊட்டி செல்ல 4ஆவது மாற்று பாதை அமைக்கப்பட்டது. இது ரூ.81 கோடி செலவில் போடப்பட்டு வருகிறது.

News December 23, 2024

கூடலூர்: சேவல் சண்டையில் ஈடுபட்ட 8 பேர் கைது

image

நீலகிரி மாவட்டம், கூடலூர் ஓவேலி பெரிய சூண்டி பகுதியில், சண்டை சேவல்களைப் பயன்படுத்தி சூதாட்டத்தில் ஈடுபடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. கூடலூர் இன்ஸ்பெக்டர் சாகுல்ஹமீது தலைமையில், நியூஹோப் எஸ்.ஐ., குமரன், கணேசன் போலீசார் நேற்று, அப்பகுதியில் சோதனை மேற்கொண்டனர். சோதனையில், சூதாட பயன்படுத்திய நான்கு சேவல்களையும், 5900 ரூபாய் பணத்தையும் பறிமுதல் செய்தனர். 8 பேரை கைது செய்தனர்.

News December 23, 2024

கூடலூரில் மாற்று கட்சியினர் அதிமுகவில் இணைவு 

image

கூடலூர் காந்தி திடலில் நகர அதிமுக சார்பில் பொதுகூட்டம் இன்று நடைபெற்றது . இதில் நகர செயலாளர் சையத் அனுப்கான் தலைமை தாங்கினார். மாவட்ட அதிமுக செயலாளர் கப்பச்சி வினோத் அவர்கள் முன்னிலையில் மாற்று கட்சிகளை சேர்ந்த 200 பேர் உறுப்பினர் படிவத்தில் கையெழுத்திட்டு அதிமுகவில் இணைந்தனர். இதில் மாநில வர்த்தக அணி தலைவர் சஜீவன், கூடலூர் சட்டமன்ற உறுப்பினர் பொன் ஜெயசீலன் ஆகியோர் பேசினார்கள்.

News December 22, 2024

விவசாயிகளுக்கு பவர் டில்லர் கருவி வழங்கும் திட்டம்

image

நீலகிரி மாவட்ட விவசாயிகளுக்கு வேளாண்மை பொறியியல் துறை மூலம் பவர் டில்லர் மற்றும் விசைகளை எடுக்கும் கருவி (பவர் வீடர்) ஆகியவை மானிய விலையில் வழங்கப்படுகின்றன. இது குறித்த மேலும் விவரங்களுக்கு வேளாண்மை பொறியியல் துறையில் செயற்பொறியாளர் உதகமண்டலம், 0423 2960300, குன்னூர் 0423 2960257, கூடலூர் 04262 2965599 ஆகிய எண்களின் தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News December 22, 2024

சிம்ஸ் பார்க் நர்சரியில் நாற்றுகள் விற்பனைக்கு தயார்

image

அரசு தோட்டக்கலை துறைக்கு சொந்தமான பூங்காக்களில் ஒன்றான குன்னூர் சிம்ஸ்பார்க் நர்சரி மேலாளர் கூறுகையில், ஆரஞ்சு பழ நாற்றுகள், பட்டர் ப்ரூட் நாற்றுகளும் விற்பனைக்கு தயாராக உள்ளது. மேலும் மரநாற்றுகள், செடிகள் இல்லாமல் தோட்டக்கலை பயிர் சாகுபடி ஊக்குவிக்க பல மற்றும் காய்கறி பயிர்களின் நடவு பொருட்கள் குறைந்த விலையில் அதிக மகசூல் தரும் ரகங்களை உரிய பணம் செலுத்தி பெற்றுக்கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

News December 22, 2024

நீலகிரி: பயிர் சேதத்திற்கு இழப்பீடு

image

நீலகிரி மாவட்டம், உதகை, பிங்கர் போஸ்டில் உள்ள, கூடுதல் ஆட்சியர் அலுவலக கட்டிடத்தில், நேற்று விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு, கலந்துகொண்டார். பின்னர் கூட்டத்தில் பேசிய அவர், “நீலகிரி மாவட்டத்தில் வனவிலங்குகளால் ஏற்படும் பயிர் சேதத்திற்கு இழப்பீடு பெற, விவசாயிகள் நேரடியாக வனத்துறையை அணுகி, விண்ணப்பித்து பயன்பெறலாம்” என  தெரிவித்தார். 

News December 22, 2024

ஊட்டி: சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிக்க வாய்ப்பு

image

தமிழ்நாட்டின் பெரும்பாலான பள்ளிகளுக்கு, அரையாண்டு தேர்வு முடிந்து, இன்று முதல் தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளதாலும், கிறிஸ்மஸ், புத்தாண்டு ஆகிய பண்டிகை காலம் வர உள்ளதாலும், வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநில சுற்றுலா பயணிகள், ஊட்டிக்கு அதிக அளவில் வர வாய்ப்புள்ளது. இதனாக் சுற்றுலா பயணிகளை நம்பி, இருக்கும் வியாபாரிகள் மகிழ்ச்சியில் அடைந்துள்ளனர். மேலும் காட்டேஜ்கள், லாட்ஜ்கள் தயார் நிலையில் உள்ளன.

News December 22, 2024

புல்லட் யானையை கண்காணிக்கும் பணி தீவிரம்!

image

பந்தலூர், சேரங்காடு அரசு தேயிலை தோட்டம் உள்பட பல்வேறு பகுதிகளில், புல்லட், காட்டு யானை அட்டகாசம் அதிகரித்து வருகிறது. இரவு நேரங்களில் குடியிருப்பு பகுதிகளுக்கு வரும் யானை, வீடுகளை சேதம் செய்துவிட்டு, உணவுப் பொருட்களை உண்டு செல்கின்றன. இந்நிலையில் யானையை கண்காணிக்க வனச்சரகர்கள் தலமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் இரவு நேரங்களிலும் வனத்துறையினர், விடிய விடிய தீவிரமாக கண்காணிக்கின்றனர்.

News December 21, 2024

நீலகிரி அதிகாரிகளின் இரவு ரோந்து பணி விபரம்

image

நீலகிரி மாவட்டத்தில் இன்று (21.12.2024) இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் உதகை நகரம் ஊரக உட்கோட்டம், குன்னூர் உட்கோட்டம், கூடலூர் மற்றும் தேவாலா உட்கோட்டம் ஆகிய காவல் நிலைய அதிகாரிகளின் தொடர்பு எண்கள் நீலகிரி மாவட்ட காவல்துறையால் வெளியிடப்பட்டுள்ளது.

error: Content is protected !!