India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நீலகிரி முதுமலை புலிகள் காப்பகம், மசினகுடி கோட்டம், சிங்காரா வனச்சரகம், சிங்காராபிரிவு, நார்த்தன் காப்புக்காடு நாயக்கன் கோட்டை மலை சரிவு பகுதிகளில் வனப்பணியாளர்கள் ரோந்து சென்று வரும்போது ஒரு யானை குட்டி இறந்து கிடந்தது. கண்டுபிடிக்கப்பட்டு இறந்த குட்டி யானையின் மலை சரிவிலிருந்து விழுந்து இறந்திருக்கலாம் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். பிரேத பரிசோதனைக்கு பின் அதே இடத்தில் புதைக்கப்பட்டது.

நீலகிரி மாவட்டம் குன்னூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கோடேரி கிராம வாக்காளர் பட்டியலில் குளறுபடி இருப்பதாக அதிகரட்டி பேரூராட்சி மன்ற உறுப்பினர் மனோகரன் புகார். ஒரே வீட்டில் 79 வாக்காளர்களும், மற்றொரு வீட்டில் 31 வாக்காளர்களும் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. புலம்பெயர்ந்த வாக்காளர்களின் பெயர்களை நீக்கி, சரியான திருத்தப்பட்ட பட்டியலை உடனடியாக வெளியிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

▶️நீலகிரி மக்களே இந்திய ரிசர்வ் வங்கியில் 120 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன
▶️இதற்கு ஏதேனும் டிகிரி முடித்திருந்தால் போதுமானது
▶️இப்பணிக்கு ஆன்லைன் தேர்வு,நேர்காணல் முறையில் தேர்ந்தெடுக்கப்படுவர்
▶️ https://ibpsreg.ibps.in/rbioaug25/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்
▶️ செப்.30ஆம் தேதியே கடைசி நாளாகும்
▶️வேலை தேடும் நபர்களுக்கு SHARE பண்ணுங்க!

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் மூலமாக இரண்டாம் நிலை காவலர் உள்ளிட்ட பதவிகளுக்கு 3600 மேற்பட்ட காலியிடங்கள் அறிவிக்கப்பட்ட உள்ளன. இந்த தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்புகள் நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய தன்னார்வ பயிலும் வட்டம் மூலமாக சிறந்த பயிற்றுநர்களை கொண்டு பயிற்சி அளிக்க உள்ளதாக மாவட்ட வேலை வாய்ப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நீலகிரி மாவட்டம் கூடலூரில் செயல்பட்டு வரும் கூடலுார் அரசு கல்லூரியில் தொகுப்பூதியத்தில் பணியாற்றி வரும் கல்லூரி விரிவுரையாளர்களுக்கு நடப்பாண்டு ஊதியம் வழங்கப்பட்டது. ஆனால் அலுவலக பணியாளர்களுக்கு, ஏப்., முதல் (மே மாதம் தவிர்த்து) நான்கு மாதமாக சம்பளம் வழங்கப்படவில்லை. இதனால், அவர்கள் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி உள்ளனர். நிலுவைத் தொகை உடனே வழங்க வலியுறுத்தி வருகின்றனர்.

நீலகிரி மாவட்டத்தில் நாளை செப்.13 காலை 10 மணி முதல் ரேஷன் குறைதீர் முகாம் நடக்கிறது. இதில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், புதிய ரேஷன் அட்டை விண்ணப்பித்தல், செல்போன் எண் பதிவு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை மனு அளிக்கலாம். மேலும் நியாய விலை கடைகளின் செயல்பாடுகள் குறித்தும் புகார் அளிக்கலாம். இதை மற்றவர்களுக்கு சேர் பண்ணுங்க!

நீலகிரி மக்களே, உங்களுக்கு Driving தெரியுமா? 8,10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவரா? ஊரக வளர்ச்சி (ம) ஊராட்சித்துறையின் கீழ் மாவட்ட வாரியாக ஓட்டுநர், அலுவலக உதவியாளர், எழுத்தர் மற்றும் இரவு காவலர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதற்கு ரூ.19,500 முதல் ரூ.71,900 வரை சம்பளம் வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க<

நீலகிரி மக்களே மத்திய அரசின் மின்சாரத் துறையில் கள பொறியாளர் & மேற்பார்வையாளர் பணிக்கு 1,543 காலியிடங்கள் உள்ளது. இதற்கு BE / B.Tech / B.Sc படித்தவர்கள் விண்ணபிக்கலாம். சம்பளமாக ரூ.23,000 முதல் ரூ.1,20,000 வரை வழங்கப்படும். இங்கு <

குறிப்பாக, கூடலுார், பந்தலுார், கோத்தகிரி, குன்னுார் வட்டங்களில், 1.25 கிலோ எடை கொண்ட, 1,000 குழந்தைகள் பிறந்திருப்பதாக ஆய்வில் தகவல். சிறு வயதில் திருமணம், ஊட்டச்சத்து குறைபாடு; பிற மாநிலங்களில் இருந்து இடப்பெயர்ந்து வந்து, தேயிலை தோட்டம், கட்டட பணிகள், விவசாய பணிகளில் ஈடுபடும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு இத்தகைய குறைபாடு இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.

குன்னூரின் மிக முக்கியமான காட்சி முனைகளாக லேம்ப்ஸ் ராக், டால்பின் நோஸ் உள்ளன டால்பின் நோஸ் காட்சி முனை மேம்பாட்டுப் பணிகள் காரணமாக மூடப்பட்டுள்ளது. ஆகவே சுற்றுலா பயணிகள் மீண்டும் அறிவிப்பு வரும் வரை டால்ஃபின் நோஸ் காட்சி முனைக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனை சுற்றுலா நிறுவனம் மற்றும் சுற்றுலா வர நினைக்கும் உங்கள் நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க.!
Sorry, no posts matched your criteria.