India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கோவை மாவட்டத்தில் நடைபெறும் திமுக கட்சியின் மண்டல அளவிலான நடைபெறும் தகவல் தொழில்நுட்ப அணியின் ஆய்வு கூட்டத்திற்கு கலந்து கொள்வதற்காக திமுக நீலகிரி மாவட்ட செயலாளர் பா.மு.முபாரக் வழிகாட்டுதலின்படி தகவல் தொழில்நுட்ப மாவட்ட அமைப்பாளர் மணிகண்டன் தலைமையில் கூடலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஒன்றிய, நகர, பேரூர் தகவல் தொழில்நுட்ப பொறுப்பாளர்கள் கோவை நோக்கி பயணம் மேற்கொண்டனர்.
நீலகிரி மாவட்டம், கோத்தகிரி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட குஞ்சபண்ணை ஊராட்சி, அரியூர் மட்டம் பகுதியில் நமக்கு நாமே திட்டத்தின்கீழ் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் சமுதாயக்கூட கட்டுமான பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு இன்று நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். கூடுதல் ஆட்சியர் கௌசிக் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.
கோத்தகிரி மேட்டுப்பாளையம் சாலையில் குஞ்சப்பனை பகுதியில் இரவில் கோத்தகிரி பகுதிக்கு சிமெண்ட் கலவை ஏற்றி வந்த லாரி திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்தது. இதனால் சாலையில் வாகனம் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. காவல்துறையினர் கோத்தகிரிக்கு வழியாக வரும் வாகனத்தை குன்னூர் வழியாக அனுப்பி வைத்தனர். பல மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு பின்பு சாலையை சீர் செய்யப்பட்டது.
முன்னாள் பாரத பிரதமர் மன்மோகன் சிங் அவர்களது மறைவுக்கு நீலகிரி காங்கிரஸ் கமிட்டி ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறது. மேலும் உதகை, காபி ஹவுஸ் பகுதியில் இன்று முற்பகல் 11:45 மணியளவில் டாக்டர் மன்மோகன் சிங்கின் திருஉருவப்படத்திற்கு மலர் அஞ்சலி நிகழ்ச்சி நடைபெறுகிறது .இந்த தகவலை நீலகிரி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஆர்.கணேஷ் எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார்.
பந்தலூரில் புல்லட் என்ற காட்டு யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க தமிழ்நாடு முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் உத்தரவிட்டுள்ளார். யானையின் நடமாட்டத்தை கண்காணிக்கும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மயக்க ஊசி செலுத்தி பிடிபடும் யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விடுவதா? அல்லது கும்கி பயிற்சி கொடுத்து முகாமில் பராமரிக்கப்படுமா? என பின்னர் முடிவு செய்யப்படும் என வனத்துறை தெரிவித்துள்ளது.
விடுமுறையையொட்டி நீலகிரியில் சுற்றுலா பயணிகள் குவிந்துவருகின்றனர். நேற்று ஒரேநாளில் 18,590 சுற்றுலாப் பயணிகள் சுற்றுலா தலங்களை கண்டுகளித்து பரவசமடைந்துள்ளனர். இது குறித்து வெளிவந்த தகவலின்படி தாவரவியல் பூங்காவை 12,477 பேரும், ரோஜா பூங்காவை 3,000 பேரும், குன்னூர் சிம்ஸ்ஸ் பார்க் பூங்காவில் 2,202 பேரும், தேயிலைப் பூங்காவை 409 பேரும், காட்டேரி பூங்காவை 412 பேரும், ஒரே நாளில் கண்டு ரசித்துள்ளனர்.
நெல்லை கோர்ட்டில் வழக்கு விசாரணைக்கு வந்த மாயாண்டி என்ற வாலிபர் சில தினங்களுக்கு முன்னர் நீதிமன்றம் அருகே வெட்டி கொல்லப்பட்டார். இது குறித்து தானாக முன்வந்து விசாரிக்கும் சென்னை உயர் நீதிமன்றம் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என உத்தரவிட்டது. இதையடுத்து கூடலூர்-மைசூரு சாலையில் அமைந்துள்ள கோர்ட்டில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் காவலுக்கு பணி அமர்த்தப்பட்டுள்ளனர்.
➤ புதிய மருத்துவ கல்லுாரி மருத்துவமனை புத்தாண்டில் திறப்பு ➤ யானையை விரட்ட கோரி சேரன்கோட்டில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் ➤ ஜெகதளா அருகே ரைபிள் ரேஞ்ச் பகுதியில் காட்டுத் தீ ➤ புல்லட் யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க உத்தரவு ➤ உதகையில் நாளை அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம் ➤ நீலகிரியில் லாட்டரி சீட்டுகள் விற்பனை அதிகரிப்பு ➤ குன்னூர் சுற்று வட்டார பகுதியில் மழை ➤ கோத்தகிரி நூலகத்தில் பேச்சு போட்டி
சேரங்கோடு ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் வீடுகளை சேதப்படுத்திய புல்லட் யானையை பிடிக்க பொதுமக்கள் நடத்திய போராட்டத்தின் அடிப்படையில் இந்த யானையை பிடிப்பதற்காக கும்கி யானைகள், வனத்துறையினர் 24 மணி நேரமும் கண்காணிப்பில் இருப்பார்கள், இனி எந்த பாதிப்பும் ஏற்படாது என்று வனத்துறை அறிவித்த நிலையில் நேற்று இரவு காவயல் என்ற பகுதியில் 2 வீடுகளை புல்லட் யானை சேதப்படுத்தியால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
ஊட்டியில், புதிய மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கான கட்டுமானம் உள்ளிட்ட அனைத்து பணிகளும் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், புத்தாண்டில் திறப்பு விழா நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மத்திய, மாநில அரசுகளின் பங்களிப்போடு, ரூ.447 கோடி மதிப்பீட்டில் பணிகள் துவக்கப்பட்டன. பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ரமேஷ் கூறுகையில், ”பொது பணித்துறை சார்பில், 95% பணிகள் முடிக்கப்பட்டுள்ளன” என்றார் மகிழ்ச்சியுடன்.
Sorry, no posts matched your criteria.