Thenilgiris

News January 26, 2025

முதுமலையில் ஆண் யானை குட்டி உயிரிழப்பு

image

முதுமலை பலிகள் காப்பக பகுதியில் உள்ள மாயார் அணை அருகே நேற்று தினசரி ரோந்து சென்ற வனத்துறை ஊழியர்கள் அங்கு ஆண் யானை குட்டி இறந்து கிடப்பதை பார்த்தனர். உடனே உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் அங்கு கால்நடை டாக்டருடன் சென்ற வனத்துறை அதிகாரிகள் பிரேத பரிசோதனை மேற்கொண்டனர். இது குறித்து விசாரணை செய்கின்றனர்.

News January 26, 2025

கூடலூர் இளைஞர் மரணத்தில் திடீர் திருப்பம்

image

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள தேவர் சோலை பேரூராட்சிக்கு உட்பட்ட 3வது டிவிசன் பகுதியைச் சேர்ந்தவர் ஜிம்ஷித். நேற்று இரவு யானை தாக்கி உயிர் இழந்ததாக கூறப்பட்டது. சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர் ஆய்வு செய்து ஜிம்ஷித் யானை தாக்கி உயிரிழக்கவில்லை என்று கூறியதால், சாவில் மர்மம் இருப்பதாக வழக்குப்பதிந்து தேவர்சோலை போலீசார் விசாரிக்கின்றனர். உடற்கூறாய்வு முடிவுக்காக காத்திருக்கின்றனர்.

News January 25, 2025

தமிழ்நாட்டில் முதல்முறையாக நீலகிரியில்

image

நீலகிரி மாவட்ட காவல்துறையினர் புது முயற்சியாக, பொதுமக்களுக்கு சைபர் குற்றங்கள் குறித்த புரிதலை ஏற்படுத்த, வாரம்தோறும் சனிக்கிழமைகளில் பேஸ்புக் லைவ். இதுகுறித்து நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா இன்று செய்தியாளர்களை சந்தித்து விவரித்து பேசினார். அதன்படி, வாரந்தோறும் சனிக்கிழமை மாலை 4 மணி முதல் 5 மணி வரை காவல்துறை, முகநூலில் விழிப்புணர்வு நிகழ்வினை ஏற்படுத்துவார்கள்” என்றார்.

News January 25, 2025

நீலகிரி மக்களே! உங்கள் ஊர் செய்திகளை பதிவிடுங்கள்

image

நாளை (ஜன.26) குடியரசு தினத்தை முன்னிட்டு உங்கள் ஊரில் கிராம சபைக் கூட்டங்கள் மற்றும் அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள், பொது இடங்களில் குடியரசு தின விழா கொடியேற்ற நிகழ்ச்சிகளும், நடைபெற உள்ளன. இந்த நிகழ்வுகளை வே2நியூஸில் பதிவிட்டு, உங்கள் ஊர் செய்திகளை அனைவருக்கும் சென்றடைய உதவுங்கள். எப்படி அனுப்புவது என்று தெரியலையா? இந்த <>லிங்கை <<>>க்ளிக் பண்ணுங்க.

News January 25, 2025

விண்ணப்பிக்க நீலகிரி கலெக்டர் அழைப்பு

image

நீலகிரி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் கூடுதலாக பணியாற்றிட ஒரு பாதுகாப்பு அலுவலர் மற்றும் நீலகிரி மாவட்ட காவல் எல்லைக்கு உட்பட்ட யூனிட்டில் பணியாற்றிட 2 சமூகப் பணியாளர்கள் ஆகிய பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்பிட விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான கடைசி தேதி 10.2.25 ஆகும். மேலும் விவரங்களுக்கு 04232445529 என்ற எண்ணை அழைக்கவும். இதை மற்றவர்களுக்கும் Share பண்ணுங்க.

News January 25, 2025

உதகையில் வருகிறது 2வது உழவர் சந்தை?

image

உதகையில் ஆட்சியர் அலுவலக அரங்கில் விவசாயிகள் குறை தீர்ப்பு நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு தலைமையில் நேற்று நடைபெற்றது. அப்போது அவர் பேசும் போது, உதகையில் இரண்டாவது உழவர் சந்தை அமைக்க சாத்திய கூறுகள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு வேளாண் வணிக துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். கூட்டத்தில் தோட்டக்கலை துறை உள்பட அரசு துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.

News January 25, 2025

ராணுவ இணைப்புச் சாலையில் செல்ல தடை

image

வெலிங்டன் ராணுவ இணைப்புச் சாலையில் செல்ல தடை செய்யப்பட்டது. குன்னூர் வெலிங்டன் ராணுவ மைய பகுதி மற்றும் ராணுவ பயிற்சி கல்லூரிக்கு செல்லும் இணைப்பு சாலை தடை செய்யப்பட்டுள்ளது. இதனால் வாகனங்கள் கரும்பாலம் வழியாக திருப்பி விடப்பட்டுள்ளன. மேலும் விரைவில் பணிகள் நிறைவடைந்து வழக்கம் போல் சாலைப்போக்குவரத்து துவங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News January 25, 2025

நீலகிரி கலெக்டர் அறிவிப்பு

image

நீலகிரியில் உள்ள நீர் நிலைகள், குடியிருப்பு பகுதிகள், பொது இடங்கள், அரசு அலுவலகங்கள் போன்ற பகுதிகளில் நெகிழி கழிவுகள் சேகரிப்பு முகாம் நடைபெறுகிறது. நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சி துறைகள், வனத்துறை, மாசு கட்டுப்பாடு வாரியம், தன்னார்வலர்கள் மற்றும் பசுமை காவலர்கள் இதை செயல்படுத்த வேண்டும் என கலெக்டர் அறிவித்துள்ளார்.

News January 25, 2025

நீலகிரியில் நாளை கிராம சபை கூட்டம்

image

குடியரசு தினமான நாளை (26/01/25) அனைத்து ஊராட்சி பேரூராட்சி பகுதிகளிலும் கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது. கிராமப்புற ஊராட்சிகளில் நடைபெறும் கூட்டமானது நாளை காலை 11 மணியளவில் துவங்க உள்ளது. எனவே அப்பகுதிக்குட்பட்ட மக்கள் திரளாக கிராமசபை கூட்டத்தில் பங்கேற்க வேண்டுமென நீலகிரி மாவட்ட நிர்வாகம் வலியுறுத்தி உள்ளது.

News January 25, 2025

கோடநாடு வழக்கு பிப்.21 க்கு ஒத்திவைப்பு

image

கோடநாடு எஸ்டேட் கொலை மற்றும் கொள்ளை வழக்கு ஊட்டி மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. நேற்று நடந்த வழக்கு விசாரணையில், சிபிசிஐடி ஏடிஎஸ்பி முருகவேல் மற்றும் போலீசார் வந்திருந்த நிலையில் இன்டர்போல் சர்வதேச விசாரணை நடப்பதால் மேலும் கால அவகாசம் தேவை என கேட்கப்பட்டதால் வழக்கை பிப்.21ம் தேதிக்கு நீதிபதி முரளிதரன் ஒத்திவைத்தார்.

error: Content is protected !!