India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நீலகிரி மாவட்ட காவல்துறை அதிகாரிகள் கூறுகையில், ”நாளை முதல் மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். மேலும், சிறப்பு காவல்படை, ஆயுதப்படை மற்றும் ஊர்காவல் படையினரும் பாதுகாப்பு, ரோந்து மற்றும் போக்குவரத்து சீரமைப்பு பணிகளை மேற்கொள்ளவார்கள். சுற்றுலா தலங்களில் சீருடை அல்லாத போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி கூட்டுறவு விற்பனை சங்கம் மேட்டுப்பாளையம் கிளை சார்பாக, நாள்தோறும் உதகை உருளைக்கிழங்கு ஏலம் நடைபெற்று வருகிறது. அதன்படி ஆரிகவுடர் ஏல மையத்தில் இன்று ராசி வகை உருளைக்கிழங்கு 45 கிலோ மூட்டைக்கு அதிகபட்சமாக ரூ.1,680-க்கும் குறைந்தபட்சமாக ரூ.1,200-க்கும் ஏலம் போனது. பொடி வகை அதிகபட்சமாக ரூ.570-க்கும் குறைந்தபட்சமாக ரூ.280-க்கும் ஏலம் போனது. மொத்தம் 1700 மூட்டைகள் விற்பனை செய்யப்பட்டது.
உதகை நகரில் அரசு தாவரவியல் பூங்கா அருகில் கிளன்ராக் பகுதியில் 100 வீடுகள் உள்ளன. அங்கு நித்தின் சந்திரசேகர் என்பவருடைய வீட்டின் வளாக பகுதியினுள் நேற்று இரவு (டிச.30) ஒரு சிறுத்தை நுழைந்து வளர்ப்பு நாயை கொன்று தூக்கி சென்றது. இதுகுறித்து உதகை வனசரக அலுவலர் சசிகுமார் அறிவுரையின்படி வனக்காவலர் கோபால் சம்பவம் நடைபெற்ற இடத்தை பார்வையிட்டார். சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க கோரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது.
குன்னூர் இன்ஸ்பெக்டர் சதீஷ் கூறுகையில், புத்தாண்டுக்கு வரும் சுற்றுலா வாகனங்களில் கட்டாயம் ‘மிஸ்ட் லைட்’ பயன்படுத்த வேண்டும்; ‘ஓவர்டேக்’ செய்வதை தவிர்க்க வேண்டும்; மலைப்பகுதியிலிருந்து சமவெளி பகுதிக்கு கீழ் நோக்கி செல்லும் வாகனங்கள், இரண்டாவது கியரை மட்டுமே பயன்படுத்துவதுடன், தொடர்ந்து பிரேக் பிடித்து கொண்டே செல்லக்கூடாது; மேல்நோக்கி வரும் வாகனங்கள், 2, 3வது கியர்களை பயன்படுத்த வேண்டும்” என்றார்.
நீலகிரி மாவட்டத்துக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்காக, மேட்டுப்பாளையம் – உதகை, சிறப்பு மலை ரயில் சேவை ஜனவரி மாதம் 16ம் தேதி முதல் 19ம் தேதி வரை இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதேபோல குன்னூர்-உதகை இடையே ஜனவரி மாதம் 16, 17, 18, 19 ஆகிய நான்கு நாட்களில் இயக்கப்படும். இந்த ரயில்களில் பயணிக்க இன்று காலை 8 மணி முதல் முன்பதிவு தொடங்குகிறது எனத் தெரிவித்துள்ளனர்.
நீலகிரி மாவட்டம் உதகை, மாவட்ட மைய நூலகத்தில், மாவட்ட அளவிலான திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி நடைபெற்றது. இதில் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவ மாணவியர் கலந்து கொண்டனர். இதில் குன்னூர் சோகத்தோரை அரசு பள்ளி மாணவி சிவசங்கரி 116 திருக்குறள்களை ஒப்புவித்து அசத்தினார். இதையடுத்து மாணவிக்கு ஆசிரியர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
நீலகிரி மாவட்ட கூடுதல் ஆட்சியர் அலுவலகத்தில் இராமாமிர்தம் அம்மையார் நினைவு உயர்கல்வி உறுதித் திட்டத்தின் கீழ், அரசு உதவிபெறும் பள்ளிகளில் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை தமிழ் வழியில் பயின்று உயர்கல்வியில் சேரும் மாணவிகளுக்கும் மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் புதுமைப் பெண் திட்டத்தின் விரிவாக்கத்தை தொடங்கி வைத்து, வங்கி பற்று அட்டைகள் நீலகிரி ஆட்சியர் பயனாளர்களுக்கு வழங்கினார்.
தொடர் விடுமுறை ஒட்டி மலை ரயில் பயணம் செய்ய சுற்றுலா பயணிகள் திரண்டு வந்திருந்தனர். ஜனவரி 2ஆம் தேதி வரை சிறப்பு ஏற்பாடாக “ரவுண்ட் ட்ரிப் ஜாய் டிரெயின்” எனும் பெயரில் ஊட்டி மற்றும் கேத்தி இடையே ரயில் சேவை மூன்று முறை சுற்று ரயிலாக இயக்கப்படுகிறது. நேற்றைய தினம் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. முன்பதிவில்லாத இடங்களுக்கு நீண்ட வரிசையில் சுற்றுலா பயணிகள் காத்திருந்து டிக்கெட் பெற்றுச் சென்றனர்.
உதகை ATC பகுதியில் நீலகிரி மாவட்ட அதிமுக செயலாளர் கப்பச்சி வினோத் தலைமையில் தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள், பாலியல் சீண்டல்கள் ஆகியவைகளை கட்டுப்படுத்த தவறிய திமுக ஆட்சிக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன. மாவட்ட துணை செயலாளர் கோபாலகிருஷ்ணன், சாந்தி ராமு சக்சஸ் சந்திரன் உள்பட ஏராளமானவர்கள் பங்கேற்றனர்.
ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளான நேற்று வழக்கமான நாட்களில் வரும் எண்ணிக்கையை விட அதிகமான பயணிகள் கூட்டம் காணப்பட்டது. சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் அதிகளவு வந்த நிலையில் ஊட்டி நகரின் நுழைவாயில் பகுதியான தலையாட்டு மந்து முதல் சேரிங்கிராஸ் வரையிலும்,கோத்தகிரி சாலையில் தொட்டபெட்டா சந்திப்பு வரையிலும்,கூடலூர் சாலையில் பிங்கர் போஸ்ட் வரையிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
Sorry, no posts matched your criteria.