India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நீலகிரி மாவட்டத்தில் உதகை நகரம், ஊரக கோட்டம், குன்னூர் உட்கோட்டம், கூடலூர் மற்றும் தேவாலா உட்கோட்டம் ஆகிய பகுதிகளில் இன்று 9ஆம் தேதி இரவு, காவல் துறை சார்பில் இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் துறை அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள் விவரம் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை 0423 2444111, அவசர உதவிக்கு 100 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம்.
நீலகிரி, வெலிங்டனில் ராணுவ அதிகாரிகளின் மத்தியில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று 6.30 மணி அளவில் கோவை வந்து அடைந்தார். தற்போது பலத்த பாதுகாப்புடன், நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரிக்கு வந்தடைந்தார். அவரை மாவட்ட ஆட்சியர் உட்பட அதிகாரிகள் வரவேற்றனர்.
குரூப் 4 தேர்வுக்கு தயாராகும் நீலகிரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மாவட்ட தொழிலாளி வழிகாட்டும் மைய தன்னார்வ பயிலும் வட்டம் சார்பில் நடத்தப்படும் இலவச பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயன்பெற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பயிற்சி வகுப்புகள் காலை 10:30 மணி முதல் 1.30 மணி வரை நடைபெறும். மேலும் விவரங்களுக்கு 8056358107, 7200019666 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகரட்டி பகுதியை சேர்ந்த ஜோகி,கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த,தி.மு.க. வார்டு கிளை செயலாளர் ரகீம்,ஆகிய இருவரும் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி, அனிதா,சந்தோஷ்குமார், சதீஷ்குமார்,மஞ்சுநாதன் ஆகியோரிடம்,14 லட்சம் ரூபாய் வரை பணம் பெற்றிருந்தனர்.வேலை கிடைக்காமல் ஏமாற்றப்பட்டதை அறிந்த அவர்கள் கொடுத்த புகாரில் நடந்த வழக்கை விசாரித்த குன்னூர் நீதிபதி அப்துல்சலாம் இருவருக்கும் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தார்.
மகாவீர் ஜெயந்தி தினம் நாளை கடைபிடிக்கப்படுவதால், நீலகிரி மாவட்டத்தில் செயல்படும் டாஸ்மாக் சில்லறை விற்பனை கடைகள், கிளப் பார்கள், ஹோட்டல் பார்கள் அனைத்தும் மூடவேண்டும். உத்தரவை மீறி மதுபானங்கள் விற்பனை செய்வது கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட மது விற்பனை உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு தெரிவித்துள்ளார்.
மகாவீர் ஜெயந்தி தினம் நாளை கடைபிடிக்கப்படுவதால் நீலகிரி மாவட்டத்தில் செயல்படும் டாஸ்மாக் சில்லறை விற்பனை கடைகள் கிளப் பார்கள் ஹோட்டல் பார்கள் அனைத்தும் மூடவேண்டும். உத்தரவை மீறி மதுபானங்கள் விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட மது விற்பனை உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.பார்கள் ஏதேனும் திறந்திருந்தால் பொதுமக்கள் புகார் அளிக்கலாம்.
குன்னூர் அருகே வெலிங்டன் பகுதியில் ராணுவ பயிற்சி கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் ராணுவம், விமானப்படை, கப்பற்படை ஆகிய துறைகளில் உள்ள அதிகாரிகள் பயின்று வருகின்றனர். வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரிக்கு இன்று மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வருகை புரியும் நிலையில் இராணுவ மையத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
▶️மாவட்ட ஆட்சியர் 0423-2442344▶️மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் 0423-2223839 ▶️மாவட்ட வருவாய் அலுவலர்- 0423-2441233 ▶️திட்ட இயக்குநர், சிறப்பு மலைப்பகுதி மேம்பாட்டுத் திட்டம்-0423-2443805 ▶️திட்ட இயக்குநர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை- 0423-2442053▶️மாவட்ட வழங்கல் அலுவலர் 0423-2441216 ▶️மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர்- 0423-2444004 மிக முக்கிய எண்களான இவற்றை உங்களது நண்பர்களுக்கு பகிரவும்.
தேவர்சோலை பேரூராட்சி, கம்பாடி , கோளூர், பாடந்துறை பகுதிகளில் குடியிருப்பு மற்றும் விவசாய நிலங்களுக்குள் புகுந்து வரும் காட்டு யானைகளால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்தநிலையில் நேற்று இரவு 10.30 மணியளவில், ‘சக்கச்சி வயல்’ என்ற பகுதிக்குள் நுழைந்த காட்டு யானைகள் விவசாய நிலங்களை சேதப்படுத்தியது, இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் உறக்கத்தைத் தொலைத்து யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.
உதகையில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொள்ள உதகை வந்த மத்திய இணை அமைச்சர் எல்.மமுருகனுக்கு சேரிங்கிராஸ் பகுதியில் பாண்டு வாத்திய இசை முழங்க நீலகிரி மாவட்ட பாஜக தலைவர் டாக்டர் ஏ . தருமன் அமைச்சர் ஏ .முருகன் அவர்களுக்கு ஜவ்வாது மாலை அணிவித்து வரவேற்றார் . முன்னாள் மாவட்ட தலைவர் , தற்போதைய மாவட்ட தலைவர் மோகன் ராஜ் , தமிழ்நாடு பாஜக நிர்வாக குழு உறுப்பினர் சபிதா போஜன் மற்றும் நிர்வாகிகள் வரவேற்றார்கள்.
Sorry, no posts matched your criteria.