India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள ஆளுநர் மாளிகைக்குள் நுழைந்த கரடியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. உதகை நகரில் கடந்த சில நாட்களாக அரசு தாவரவியல் பூங்கா, கவர்னர் சோலை, வண்டி சோலை உள்ளிட்ட பகுதிகளில் கரடி சுற்றித்திரிகிறது. இந்நிலையில் இன்று காலை ஆளுநர் மாளிகை வளாகத்துக்குள் கரடி நுழைந்ததால் ஊழியர்கள் அச்சமடைந்து, அங்கியிருந்து அலறி ஓடினர். இதையறிந்த அப்பகுதி மக்களும் பீதியடைந்தனர்.

நீலகிரி மக்களே தமிழ்நாடு வனத்துறையின் கீழ் முதுமலை புலிகள் காப்பகத்தில் காலியாக உள்ள 9 யானை காவடி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் தமிழில் பேச தெரித்திருந்தால் போதுமானது. இது குறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <

நீலகிரி மக்களே, ரேஷன் கடையில் கைரேகை சரியாக வேலை செய்யாததால் நமக்கு பின்னால் வந்தவர்கள் நமக்கு முன்னால் பொருட்கள் வாங்கி செல்வர். இந்த சிக்கலை தீர்க்க <

அரசு பேருந்துகளில் பயணிக்கும் போது Luggage-ஐ பேருந்துலேயே மறந்து வைத்து இறங்கிவிட்டால் பதட்டபட வேண்டாம். நீங்கள் வாங்கிய டிக்கெட்டில் அந்த பேருந்தின் எண் இருக்கும். அந்த விவரத்தை 044-49076326 என்ற எண்ணிற்கு அழைத்து, எங்கிருந்து எங்கு பயணித்தீர்கள்? என்ன தவறவிடீர்கள் என்பதை கூறினால் போதும். பேருந்தின் நடத்துநர் உங்களை தொடர்புகொண்டு எங்கு வந்து பொருட்களை வாங்க வேண்டும் என்பதை கூறுவார்.ஷேர் பண்ணுங்க

நீலகிரி மக்களே தமிழ்நாடு அரசின் TN Rights திட்டத்தின் கீழ், 1,096 காலிப்பணியிடங்கள் நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 10 ஆம் வகுப்பு தேர்ச்சி போதுமானது. மாத சம்பளமாக ரூ.12,000 முதல் ரூ.35,000 வழங்கப்படுகிறது. இது குறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <

நீலகிரி மக்களே மத்திய ஆயுதக் காவல் படையில் காலியாக உள்ள 2,861 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணியிடங்களுக்கு ரூ.35,400 முதல் ரூ.1,12,400 வரை சம்பளம் வழங்கப்படும். இது குறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கே கிளிக் பண்ணுங்க. இதற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் (16.10.2025) தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இதை வேலை தேடும் உங்கள் நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

நீலகிரி மாவட்டம் நிலக்கோட்டை பாட்டவயல் அருகே, தமிழக-கேரள எல்லை சோதனைச் சாவடியின் அருகில், கேரள அரசு கண்ணனூர் – உதகை பேருந்து எதிரே வந்த வாகனத்திற்கு வழிவிட்டு சாலை ஓரத்தில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் யாரும் பாதிக்கப்படவில்லை. இருப்பினும், கூடலூர் – சுல்தான்பத்தேரி சாலையில் சில நேரம் போக்குவரத்து தடை ஏற்பட்டது.

நீலகிரி ஓவேலி பகுதியில் கடந்த 23ம் தேதி மயக்க ஊசி செலுத்தப்பட்டு பிடிக்கப்பட்ட ராதாகிருஷ்ணன் என்ற காட்டு யானை தற்போது முதுமலை முகாமில் கராலில் கண்காணிக்கப்படுகிறது. இதையடுத்து வனத்துறை, யானைக்கு ரேடியோ காலர் பொருத்தி மீண்டும் வனப்பகுதிக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளது. எனினும், முதுமலை பகுதிக்கு மீண்டும் யானையை விடக்கூடாது என கூறி உள்ளூர் பொதுமக்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

ஊட்டி தாவரவியல் பூங்காவில் நடவு செய்யப்பட்ட 2 லட்சத்துக்கும் மேற்பட்ட மலர்ச் செடிகளும், 17,000 தொட்டிகளில் உள்ள பலவகை மலர்களும் பூக்கத் தொடங்கியுள்ளன. இந்த தொட்டிகளைக் கொண்டு அமைக்கப்பட்ட மாட மலர் அலங்காரங்கள் கண்களுக்கு விருந்தளிக்கும் வகையில் அமைந்துள்ளன. வண்ண மலர்களின் காட்சியைக் காண சுற்றுலாப் பயணிகள் குவிகின்றனர்.

நீலகிரி, மேல் கூடலூர் மசினகுடியில் உள்ள இ-பாஸ் சோதனை மையத்தில், நேற்று காலை முதல் வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன. வெளிமாநில மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வரும் வாகனங்களுக்கு, ஊழியர்கள் மற்றும் போலீசார் தீவிர சோதனை செய்கின்றனர். இதனால் முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.