India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நீலகிரி: இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள 9,970 உதவி லோகோ பைலட் பணிக்கான அறிவிப்பை வௌியிட்டுள்ளது. இதில் தெற்கு ரயில்வே சார்பில் 510 காலிபணியிடங்கள் உள்ளது. மாத ஊதியமாக ரூ.19,900 வழங்கப்படும் . இதற்கு ஏப்.12 முதல் மே 11 வரை rrbchennai.gov.in என்ற ரயில்வே வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம். இந்தத் தகவலை உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கும் பகிருங்கள்.
உதகை மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நாளை ஏப்.25ஆம் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. முன்னணி தனியார் நிறுவனங்கள் பங்கேற்கும் இம்முகாமில், tnprivatejobs.tn.gov.in இணையதளத்தில் முன்பதிவு செய்த பின்னர், கல்வி மற்றும் அடையாளாச் சான்றுகளுடன் நேரில் கலந்துகொண்டு பயன்பெறலாம். மேலும், விவரங்களுக்கு 0423-2444004, 7200019666 எண்களில் தொடர்பு கொள்ளலாம். SHARE IT!
ஜெகதளா, காரகோரையைச் சேர்ந்த ஜெயராமன் 2018ல் வாங்கிய லேப்டாப் அடிக்கடி பழுதானதால், அதை மாற்ற் தரும்படி சம்பந்தம்பட்ட கடைக்கு சென்று கேட்டுள்ளார். இதற்கு கடைகாரர்கள் மறுத்ததால், ஜெயராமன் கோவை நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில்லேப்டாப்பின் விலை ரூ.1.14 லட்சத்தை திருப்பிக் கொடுக்கவும், மன உளைச்சல் மற்றும் வழக்கு செலவுக்காக ரூ.15,000 வழங்கவும் உத்தரவிட்டுள்ளது. உத்தரவு
நீலகிரி மக்களே உங்கள் பகுதியில் ஏதேனும் தீ விபத்துக்கள் ஏற்பட்டால், உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தொடர்பு கொள்ளவும். ▶️ மாவட்ட தீயணைப்பு அலுவலர் 0423-2442999. ▶️ நிலைய தீயணைப்பு அலுவலர், உதகை 0423-2442999. ▶️ நிலைய தீயணைப்பு அலுவலர், குன்னூர் 0423-2230101. ▶️ நிலைய தீயணைப்பு அலுவலர், கோத்தகிரி 04266-274101 ▶️ நிலைய தீயணைப்பு அலுவலர், கூடலூர் 04262-261399. தெரியாதவங்களுக்கு SHARE பண்ணுங்க
நீலகிரி மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை மறுநாள் (25/4/25) ஊட்டியில் உள்ள மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி காட்டும் மையம், கூடுதல் ஆட்சியர் அலுவலகம், பிங்கர் போஸ்ட் என்ற முகவரியில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற உள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் விவரங்களுக்கு 0423-2444004,7200019666 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம்.
காஷ்மீர் பஹல்காமில் உள்ள சுற்றுலா தலத்தில், தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில், சுற்றுலா பயணிகள் 26 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாட்டையே உலுக்கிய நிலையில், நாடு முழுவதும் முக்கிய நகரங்கள் மற்றும் சுற்றுலா தலங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில், உதகை, கோத்தகிரி, கூடலூர், குன்னூர் உட்பட்ட சுற்றுலா தலங்களில், போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கல்லாறு இ-பாஸ் சோதனை சாவடியில் சுற்றுலா வாகனங்களில் இ-பாஸ் குறித்து சோதனை செய்ய தானியங்கி, ‘பூம் பேரியர்’ பொருத்தப்பட்டு, கடந்த 2 நாட்களாக சோதனை நடைபெற்று வருகிறது. விரைவில் இந்த பூம் பேரியர் பயன்பாட்டிற்கு வரவுள்ளது. மேலும், இது இ-பாஸ் பெறும் வாகனங்களின் எண்களை வைத்து தானியங்கி முறையில் சோதனை செய்து வாகனங்களுக்கு வழிவிடும். இதனால் இபாஸ் சோதனையில் நேரம் வீணாகாது. SHARE மக்களே!
கல்லாறு இ-பாஸ் சோதனை சாவடியில் சுற்றுலா வாகனங்களில் இ-பாஸ் குறித்து சோதனை செய்ய தானியங்கி, ‘பூம் பேரியர்’ பொருத்தப்பட்டு, கடந்த 2 நாட்களாக சோதனை நடைபெற்று வருகிறது. இது குறித்து வருவாய் துறையினர் கூறுகையில் விரைவில் பூம் பேரியர் பயன்பாட்டிற்கு வரும். அவ்வாறு பயன்பாட்டிற்கு வரும் போது, இ-பாஸ் பெறும் வாகனங்களின் எண்களை வைத்து தானியங்கி முறையில் ‘பூம் பேரியர்’ சோதனை செய்து வாகனங்களுக்கு வழிவிடும்.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள அங்கன்வாடி மையங்களில் காலியாக உள்ள 64 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி விண்ணப்பங்களை www.icds.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, விண்ணப்பங்களை காலியாக உள்ள குழந்தைகள் மையத்தில் விண்ணப்பிக்கலாம். இதற்கு விண்ணப்பிக்க நாளை ஏப்.24 கடைசி நாள் ஆகும். ஊதியம் ரூ.7700-24,200 வரை வழங்கப்படும். இதை ஷேர் செய்யுங்கள்.
அரசு பேருந்தில் பயணம் செய்யும் பயணிகளின் வசதிக்கு புகார் எண்ணை போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ளது. பயணிகளை ஓட்டுநர், நடத்துநர்கள் ஏற்ற மறுப்பது, நிறுத்தத்தில் நிற்காமல் செல்வது, தாமதமாக பேருந்து வருவது, சில்லறை பிரச்சனை, தவறான நடத்தை போன்ற புகார்களை *1800 599 1500* இந்த கட்டணமில்லா இலவச நம்பரில் தொடர்பு கொண்டு பயணிகள் தெரிவிக்கலாம் என என போக்குவரத்துத்துறை கூறியுள்ளது. இதை SHARE பண்ணுங்க.
Sorry, no posts matched your criteria.