India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நீலகிரி மாவட்டத்தில் இன்று (12.04.2025) இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் உதகை நகரம் ஊரக உட்கோட்டம், குன்னூர் உட்கோட்டம், கூடலூர் மற்றும் தேவாலா உட்கோட்டம் ஆகிய காவல் நிலைய அதிகாரிகளின் தொடர்பு எண்கள் நீலகிரி மாவட்ட காவல்துறையால் வெளியிடப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம் சுற்றுலா மாவட்டமாக திகழ்ந்து வருவதால், நாளுக்கு நாள் சுற்றுலா பயணிகளும், சுற்றுலா வாகனங்களும் அதிகரித்த வண்ணம் உள்ளது. மேலும், உள்ளுரில் உள்ள வாகனங்கள் எண்ணிக்கையும் அதிகரித்த நிலையில், குன்னூரில் அனுமதியற்ற சாலையோரங்களில் நிறுத்தப்படும் வாகனங்களுக்கு அபராதம் விதித்து, பறிமுதல் செய்யப்படும் என்று நீலகிரி காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
நீலகிரி மாவட்டம் பரளியார் அருகே நீலகிரி மற்றும் கோவை மாவட்ட எல்லைகள் உள்ளன. இந்நிலையில் இங்குள்ளஅடர்ந்த வனப்பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் இறந்து பல மாதங்கள் ஆகி முகம் மட்டும் தெரியும் நிலையில் உடம்பெல்லாம் மக்கிப்போன நிலையில் வெறும் எலும்புக்கூடு மட்டும் மிஞ்சி உள்ளது. எந்த மாவட்ட எல்லைக்குள் வரும் என்ற பிரச்சனையால் பிரேத பரிசோதனை செய்யாமல் எலும்புக்கூடு அவ்விடமே விடப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில், செயல்படும் குழந்தைகள் மையங்களில் காலியாக உள்ள, 8 அங்கன்வாடி பெண் பணியாளர்கள், 13 குறு அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் 43 அங்கன்வாடி உதவியாளர்கள் பணியிடங்கள் நேரடியாக நியமன செய்யப்பட உள்ளன. இம்மாதம், 24ம் தேதி மாலை, 5 மணிக்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பங்களை www.icds.tn.gov.in என்ற வலைதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம். இதை உங்களது நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.
நீலகிரி மாவட்டம், குந்தா வட்டத்தில் உள்ள கிண்ணக்கொரை கிராமம், தமிழ்நாட்டில் சூரியனே உதிக்காத கிராமம் என்றும், அங்கு சூரியன் உதித்தாலும்,அந்த சூரிய ஒளி அடர்ந்த மரங்களால் தடுக்கப்படும் என்று தகவல் பரவுகிறது. ஆனால், கிண்ணக்கொரை கிராமத்தை பொறுத்தவரை அதிகப்படியான மேகக்கூட்டங்கள் அவ்வப்போது வந்து செல்லும், அடர்ந்த வனப்பகுதியாகும். இதனால் சூரிய ஒளி சில நேரம் குறைவாக இருக்கும் என்பதே உண்மை .
நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்ட வழங்கல் அலுவலகங்களில் ரேஷன் அட்டை திருத்த முகாம் நாளை (ஏப்ரல் 12) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறவுள்ளது. ரேஷன் கார்டில் பெயர் நீக்கம், திருத்தம், சேர்த்தல், முகவரி மாற்றம், மொபைல் நம்பர் அப்டேட் போன்ற அப்டேட்களைச இலவசமாக செய்து கொள்ளலாம் கட்டணம் இல்லை.
நீலகிரி மாவட்டத்தில் உதகை நகரம் , ஊரக கோட்டம் , குன்னூர் உட்கோட்டம் , கூடலூர் மற்றும் தேவாலா உட்கோட்டம் ஆகிய பகுதிகளில் இன்று 9ஆம் தேதி காவல்துறை சார்பில் இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் துறை அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை 0423 2444111 , அவசர உதவிக்கு 100 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம் .
நீலகிரி மாவட்டத்தில் அரசு அலுவலர்கள், பொதுமக்கள் மற்றும் பிறருக்கு சேவைகள் மற்றும் தேவைகளை நிறைவேற்ற நேரடியாகவோ, கூகுள் பே (GPay), போன்பே (Phonepe), பேடிஎம் (Paytm) போன்ற டிஜிட்டல் முறைகளிலோ, வேறு எந்த வகையிலோ லஞ்சம் கேட்டாலும் DSP ஜெயக்குமார்-94981 47234 சண்முகவடிவு (Inspector): 94981 24373 உடனடியாக தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!
நீலகிரி, மாவட்டத்தில் 2025-26 ஆம் ஆண்டு அக்னி வீர் திட்டத்தின் கீழ் 10,12 ஆம் வகுப்பு படித்த இளைஞர்களுக்கு பொதுப்பணி, டெக்னிக்கல், கிளார்க், டிரேட்ஸ்மென் பிரிவுகளில் ஆட்சேர்ப்பு நடைபெறவுள்ளது.இதற்கு மாத சம்பளமாக ரூ.30,000 முதல் ரூ.40,000 வரை வழங்கப்படுகிறது. இதில் விண்ணப்பிக்க இன்றே (ஏப்.10) கடைசி நாள். விண்ணப்பிக்க <
வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக நீலகிரி மாவட்டத்தில் இன்று (ஏப்.10) பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்யக்கூடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே வெளியே செல்லும் போது குடையுடன் செல்லுங்கள். இதை மற்றவர்களுக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்கள்.
Sorry, no posts matched your criteria.