India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நீலகிரி பாராளுமன்ற தொகுதியில் நடைபெறவிருக்கும் பொதுத்தேர்தலை முன்னிட்டு, ‘நாங்கள் இருக்கிறோம் பயப்படாமல் ஓட்டு போடுங்கள் ‘ என்பதை மக்களுக்கு வலியுறுத்தும் வகையில், கூடலூர் பஜாரில் நேற்று (ஏப். 4) போலீஸ் கொடி அணி வகுப்பு நடைபெற்றது. கூடலூர் காவல்துறை துணை கண்காணிப்பாளர் வசந்த குமார் தலைமை தாங்கினார்.

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. வாக்குப்பதிவை முன்னிட்டு டாஸ்மாக் கடைகள் ஏப்ரல் 17 முதல் ஏப்ரல் 19ஆம் தேதி வரை மூடப்படுகிறது. அதேபோல் வாக்கு எண்ணிக்கை நாளான ஜூன் 4ஆம் தேதியும் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு கருதி இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நீலகிரி ஊட்டி தேர்தல் பிரச்சாரத்துக்கு (ஏப். 4) அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்றார். குன்னூர் அருகே காட்டேரியில் இவரது வாகனத்தை நிறுத்தி தேர்தல் பறக்கும் படையினர் சோதனை செய்தனர். சோதனையில் ஒன்றும் கிடைக்காததால் அவரது வாகனம் செல்ல அனுமதிக்கப்பட்டது. சோதனையின்போது கட்சி பொறுப்பாளர்கள் உடனிருந்தனர்.

உதகையில் மாவட்ட பாஜக அலுவலகத்தில் மண்டல் தலைவர்கள் சக்தி கேந்திர பொறுப்பாளர்கள் மற்றும் நிர்வாகிகள் தேர்தல் வழிகாட்டுதல் கூட்டம் இன்று நடைபெற்றது. நீலகிரி மாவட்ட தலைவர் எச். மோகன்ராஜ் தலைமை தாங்கினார். மாநில அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகன் உரை நிகழ்த்தினார்.
உதகை தொகுதி அமைப்பாளர் ராமன், மாவட்ட பொது செயலாளர் பரமேஸ்வரன், மண்டல நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

குந்தா, மஞ்சூரில் திமுக வேட்பாளர் ஆ.ராசா வருகையை ஒட்டி சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது. அப்போது அவரை வரவேற்கும் விதமாக, தேர்தல் விதியை மீறி பட்டாசு வெடிக்கப்பட்டது. இதுகுறித்து போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. இதன் பேரில், மட்டக்கண்டி திமுக பிரமுகர் சதீஷ்குமார் என்பவர் மீது மஞ்சூர் போலீசார் இன்று வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

தனியார் பள்ளி பேருந்தில் மாணவர்களுக்கு ஏற்படும் பாலியல் தொல்லையை தடுக்க வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதில், பள்ளியில் ‘மாணவர் மனசு’ பெட்டி வைக்கப்பட்டு அதில் பெறப்படும் குறைகளை 24 மணி நேரத்தில் தீர்க்க வேண்டும். ஓட்டுநருக்கு போக்சோ சட்டம் குறித்து பயிற்சி வழங்க வேண்டும். ஓட்டுநர், உதவியாளர்கள் குறித்த விவரங்களை EMIS Portalஇல் பதிவேற்ற வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.

உதகையில் மாவட்ட ஆட்சியர் கூடுதல் அலுவலக அரங்கில், நீலகிரி பாராளுமன்ற தொகுதி பொதுத்தேர்தல் முன்னிட்டு, வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான கணினி மூலம் இரண்டாம் கட்ட சீரற்ற மயமாக்கல் பணிகள் இன்று நடைபெற்றது. நீலகிரி தொகுதி தேர்தல் பொது பார்வையாளர் மஞ்சித் சிங் பரார் தலைமையில், மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் மு.அருணா முன்னிலையில் நடைபெற்றது.

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள பந்தலூர் சுற்றுவட்டார பகுதிகளில் வழக்கத்தைவிட இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. கிராமங்களில் தண்ணீர் தட்டுப்பாடும் அதிகரித்துவருகிறது. வெயிலால் தேயிலை பறிக்கும் தொழிலாளர்களுக்கு உடல் சோர்வு ஏற்படுகிறது. இதனை தவிர்க்க கடந்த சில நாட்களாக குடை போன்ற தொப்பியை அணிந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் நிழல் போன்ற தாக்கம் ஏற்படுகிறது.

நீலகிரியில் தேர்தல் பரப்புரை செய்ய அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி நாளை (4.4.24) ஊட்டி வருகிறார். நாளை காலை ஊட்டி ஏடிசி திடலில் அதிமுக சார்பாக நடக்கும் பொது கூட்டத்தில் வேட்பாளர் லோகேஷ் தமிழ் செல்வனை அறிமுகம் செய்து வைக்கிறார். கூட்டத்திற்கான ஏற்பாடுகளை மாவட்ட செயலர் வினோத், சாந்தி ராமன் ((Ex. MLA) உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்.

நீலகிரி மாவட்டத்துக்கு கூடுதலாக தேவைப்படும் 240 மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்கள், ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் இருந்து நேற்று எடுத்து வரப்பட்டது. இவைகள் மாவட்ட கலெக்டரின் கூடுதல் அலுவலகத்தில் வைக்கப்பட்டு உள்ளன. இதை நீலகிரி மாவட்ட ஆட்சியர் அருணா, அங்கீகரிக்கப் பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் இன்று(ஏப். 3) பார்வையிட்டார்.
Sorry, no posts matched your criteria.