India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கோத்தகிரி அரவேனு அருகே உள்ளது சக்கத்தா மாரியம்மன் கோயில். நேற்று (மார்ச் 27) காலை திருத்தேர் வீதிவலம் வடம் பிடித்தல் நடந்தது. தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட அம்மன் வீதி ஊர்வலம் சென்றது. சக்கத்தா , ஜக்கனாரை, அரவேனு சாலை என முக்கிய வீதிகள் வழியாக கோயிலை சென்று அடைந்தது. அங்கு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

நீலகிரி மக்களவைத் தொகுதிக்கு இரண்டு தேர்தல் செலவின பார்வையாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி ஊட்டி, கூடலூர் குன்னூர் சட்டமன்ற தொகுதிகளுக்கு கிரண், மேட்டுப்பாளையம், பவானிசாகர், அவிநாசி சட்டமன்றத் தொகுதிகளுக்கு சந்திப் குமார் மிஸ்ரா உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், தேர்தல் சம்பந்தமான புகார்கள் இருப்பின் 9489930709, 9489930710 என்ற எண்ணில் தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பந்தலுார் அருகே பாட்டவயல் கரும்பன்மூலா பகுதியை சேர்ந்த சைனுதின், சீனத் தம்பதி. இவர்களுக்கு பாத்திமத்து சுகைனா, ஷப்னா ஜாஸ்மின் ஆகிய 2 மகள்கள் உள்ளனர். இருவருக்கும் எலும்பு சிதைவு நோய் உள்ளதால், உடல் வளர்ச்சி குன்றி நடமாட முடியாமலும், கை கால்களை நீட்ட முடியாமலும் உள்ளனர். இந்நிலையில் இருவரும் முறையே 12 மற்றும் 10 ஆம் வகுப்பு பொது தேர்வை உதவியாளர் உதவியுடன் எழுதினர். இது பாராட்டை பெற்றுவருகிறது.

நீலகிரி மாவட்டம் கேத்தி பேரூராட்சி பகுதியில் 100 சதவீதம் வாக்களிக்க விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
நீலகிரி மாவட்டம் கேத்தி பேரூராட்சியில் வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் 100% வாக்களிக்க பொதுமக்களுக்கு வருவாய் துறையினர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர். இதில் குன்னூர் வட்டாட்சியர் கனி சுந்தரம் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வை வழங்கினார்.

நீலகிரி (தனி) மக்களவைத் தொகுதியில் இண்டி கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ஆ.ராசா இன்று (மார்ச் 27) தனது வேட்புமனுவை மாவட்டத் தலைமைத் தேர்தல் அலுவலரிடம் தாக்கல் செய்தார். அப்போது அவருடன் திமுகவின் முக்கியத் தலைவர்கள் உடனிருந்தனர். மார்ச் 20ஆம் தேதி தொடங்கிய வேட்புமனு தாக்கல் இன்றுடன் (மார்ச் 27) நிறைவடைகிறது.

நீலகிரி மாவட்டம் சுற்றுலாவுடன் மலை இரயில் பயணத்திற்கும் உலகப் புகழ்பெற்றது. இந்நிலையில் தினமும் குன்னூர் உதகை, மேட்டுப்பாளையம் உதகை என மலை ரயில் சேவை நடைபெற்று வரும் நிலையில் வரும் கோடை சீசனை முன்னிட்டு உதகை கேத்தி, கேத்தி உதகை இடையேயான மார்க்கத்தில் சிறப்பு மலை இரயில் சேவையை வரும் வெள்ளி முதல் வெள்ளி சனி, ஞாயிறு, திங்கள் என நான்கு நாட்கள் இயக்க தென்னக இரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

நீலகிரி, கூடலூர், தோட்டமூலா, ஏலுமரம் பகுதியைச் சேர்ந்தவர் விஜயன். இவர் நேற்று (மார்ச் 26) காலை 8.20 மணிக்கு மாரடைப்பு காரணமாக கூடலூர் GTMO மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என நீலகிரி காவல் துறை அறிவித்துள்ளது. மேலும் இவரது இறப்பு பற்றி பொய்யான தகவலை வலைதளங்களில் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாவட்ட காவல்துறை எச்சரித்துள்ளது.

நீலகிரி, கூடலூர், தோட்டமூலா, ஏலுமரம் பகுதியை சேர்ந்தவர் விஜயன். இவர் இன்று (மார்ச் 26ம் தேதி) காலை 8.20 மணிக்கு மாரடைப்பு காரணமாக கூடலூர் (GTMO) மருத்துவ மனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என நீலகிரி காவல் துறை அறிவித்து உள்ளது. மேலும் இவரது இறப்பு பற்றி பொய்யான தகவலை வலை தளங்களில் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாவட்ட காவல்துறை எச்சரித்துள்ளது.

நீலகிரி மாவட்ட எல்லையோரம் கேரள மாநிலத்தின் மலப்புரம் மாவட்டம் உள்ளது. பாராளுமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு இரு மாநில மாவட்டங்களின் எல்லையோர நடவடிக்கைகள் குறித்து ஒருங்கிணைப்பு கூட்டம் உதகையில் நீலகிரி மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான மு.அருணா தலைமையில் இன்று (மார்ச்.26) நடைபெற்றது. இதில், இரு மாவட்ட காவல் அலுவலர்கள் மற்றும் வருவாய் துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.

நடைபெறவுள்ள மக்களவை தேர்தலில் நேற்று (மார்ச் 25) வரை 6 பேர் நீலகிரி ஆட்சியரிடம் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்தனர். அதன் விவரம் வருமாறு: பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் டாக்டர் எல்.முருகன், அதிமுக வேட்பாளர் லோகேஷ் தமிழ்செல்வன், வையாபுரி, முருகேசன், பத்திரன், ராஜேந்திரன் ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
Sorry, no posts matched your criteria.